Thursday 21 December 2017

முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா?

“மகா அலட்சியமாய், கிஞ்சிற்றும் பொறுப்புணர்வின்றி, ஜெர்மன் "இடதுசாரி' கம்யூனிஸ்டுகள் இக்கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிக்கிறார்கள். அவர்களுடைய வாதங்கள் யாவை? மேலே எடுத்துரைக்கப்பட்ட மேற் கோளில் பார்த்தோம்:

'. வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்ட நாடாளுமன்றப் போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும் எவ்வகையான பின்னடைவையும். தீர்மானமாய் நிராகரித்தே ஆக வேண்டும். ...”*

நகைக்கத்தக்க ஆடம்பரத்துடன் இது கூறப்படுகிறது. கண்கூடாகவே தவறானது இது. நாடாளுமன்ற முறைக்குச் “சரியும் பின்னடைவு” என்கிறார்கள்! ஜெர்மனியில் ஏற்கெனவே சோவியத் குடியரசு ஒன்று உதித்துவிட்டதா, என்ன? அப்படி ஒன்றும் தெரியவில்லையே! “சரியும் பின்னடைவு” என்பதாகப் பேசுகிறார்களே, எப்படி அது? பொருளற்றச் சொல்லடுக்கேயன்றி வேறு என்ன?

நாடாளுமன்ற முறை ''வரலாற்று வழியில் காலாவதி யாகிவிட்ட'' ஒன்றுதான். பிரசார அர்த்தத்தில் இது மெய்தான். ஆனால் நடைமுறையில் அதனை வெற்றி கொள்ளும் நிலையை வந்தடைய இன்னும் நெடுந் தொலைவுள்ளதென்பது யாவரும் அறிந்ததே. முதலாளித்துவத்தையும் ''வரலாற்று வழியில் காலாவதியாகி விட்ட’’ ஒன்றாக மிகப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, முழு நியாயத்துடன் அறிவித்திருக்கலாம். ஆயினும் அது, முதலாளித் துவத்தின் அடிப்படைமீது மிக நீண்ட, மிகவும் விடாப்பிடியான ஒரு போராட்டத்துக்கான அவசியத்தை நீக்கி விடவில்லையே. நாடாளுமன்ற முறை உலக வரலாற்றின் கண்ணோட்டத்தில் ''வரலாற்று வழியில் காலாவதியானது தான்''; அதாவது முதலாளித்துவப் நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவுற்றுவிட்டதும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டதும் மெய்தான். இது மறுக்க முடியாததே. ஆனல் உலக வரலாறு பல பத்தாண்டுக் கணக்கில் அளக்கப்படும் ஒன்று. உலக வரலாற்றின் அளவுகோலைக் கொண்டு அளக்கையில், பத்து அல்லது இருபது ஆண்டுகள் முன்னதாகவோ பின்னதாகவோ கொள்வதால் மாறுபாடு ஏற்பட்டுவிடுவதில்லை. உலக வரலாற்றின் கண்ணோட்டத்தில் இது உத்தேசமாகக் கூட மதிப்பிட முடியாத ஒர் அற்ப விவகாரம். ஆனால் உலக வரலாற்றின் இந்த அளவுகோலை அன்றாட நடைமுறை அரசியலில் பிரயோகிப்பது அப்பட்டமான தத்துவார்த்தப் பிழையாகிவிடுமே

நாடாளுமன்ற முறை "அரசியல் வழியில் காலாவதி யாகி விட்டதா? இது முற்றிலும் வேறொரு விவகாரம். இது உண்மையானல், "இடதுசாரிகளின் நிலை வலுக்கதுதான். ஆனல் துருவிப் பரிசீலிக்கும் பகுத்தாய்வினல் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று இது. “இடதுசாரிகளுக்கு" இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது என்பது கூட தெரியவில்லை.”
 ("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-7)


No comments:

Post a Comment