"தொழிலாளர்கள் தடையின்றி சுதந்திரமாய்க் கூட்டங்கள் நடத்தவும் சங்கங்கள் அமைக்கவும் தமது சொந்த செய்சியேடுகளைப்
பெற்றிருக்கவும் தேசியச் சட்டமன்றங்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து
அனுப்பவும் உரிமையுடையோராய் இருந்தாலன்றி, ஜெர்மனியிலும் ஏனை எல்லா
ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலார்களுக்கு இருந்து வரும் இந்த உரிமைகளை உடையோராய்
இருந்தாலன்றி, எந்தப் பொருளாதாரப் போராட்டமும்
தொழிலாளர்களுக்கு நீடித்த மேம்பாட்டைக் கிடைக்கச் செய்யவும் முடியாது, பெரிய அளவில் நடத்தப்படவுங்கூட முடியாது. ஆனால் இந்த
உரிமைகளைவென்று கொள்ள வேண்டுமாயின் அரசியல் போராட்டம் நடத்துவது இன்றியமையாததாகும்."
(நமது வேலைத்திட்டம்)