Friday 28 September 2018

உற்பத்திச் சக்திகள் – உற்பத்தி உறவுகள்- கருத்துக்களின் தோற்றம் -ஆகிவற்றிற்கான இயக்கவியல் பற்றி மார்க்ஸ்


சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
 (தத்துவத்தின் வறுமை- மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வுநூல்கள் 2/20 பக்கம் 114 -115)

Sunday 23 September 2018

தண்ணீர் - நீராவியாவதும் பனிகட்டியாவது பற்றி ஹெகல் கூறியதை எங்கெல்ஸ் தமது “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.


“தண்ணீரின் வெப்பநிலை முதலாவதாக அதனுடைய திரவத் தன்மையைப் பொறுத்தவரை முக்கியமில்லை, ஆனால் திரவமாக உள்ள தண்ணீரின் வெப்பநிலை கூடியோ அல்லது குறைந்தோ வருமாயின் அதனுடைய ஒட்டுப் பண்பு (cohesion) நிலை மாறுகிற கட்டம் ஏற்பட்டுத் தண்ணீர் நீராவியாக அல்லது பனிக்கட்டியாக மாறுகிறது”(ஹெகல்- Encyclopedia, Collected Works, VI, p. 217.)
(இயற்கையின் இயக்கவியல்- தொகுதி 13/20)