“சந்தர்ப்பவாதம்
தற்செயலாய் நிகழ்ந்துவிடும் ஒன்றல்ல, தனியாட்கள் புரிந்துவிடும் பாவச் செயலோ பிழையோ
துரோகமோ அல்ல, வரலாற்றின் ஒரு காலகட்டம் முழுமையில் இருந்தும் உதித்தெழும் சமூக விளைவாகும்
என்பது பொதுவாக ஒத்துக் கொள்ளப்படுகிறது. இந்த உண்மையின் மெய்ப்பொருளில் போதிய அளவுக்கு
எப்போதும் சிந்தனை செலுத்தப்படுவதாகக் கூறுவதற்கில்லை. சந்தர்ப்வாதமானதுசட்டபூர்வமான
நிலைமையால் ஊட்டமளித்து வளர்க்கப்பட்டுள்ளது.
..
உண்மை
என்னவெனில், சந்தர்ப்பவாதிகள் தொழிலாளர் கட்சிகளில் பெரளவில் உறுப்பினர்கள் என்பதால்,
எதார்த்தத்தில் அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் படைப்பிரிவாகவும், இவ்வர்க்கத்தின்
செல்வாக்கைப் பரவச் செய்வோராகவும, தொழிலாளர் இயக்கத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின்
கையாட்களாகவும் இருப்பவாகள் என்பது பொய்ப்பிக்கப்பட்டுவிடவில்லை.
…
“சந்தர்ப்பவாதமானது
மிகப் பெருந்திரளினரது அடிப்படை நலன்களைத் தொழிலாளர்களில் மிகச் சொற்பமான சிறுபான்மையோரது
தற்காலிக நலன்களுக்காகக் காவுகொடுத்தலைக் குறிக்கிறது. வேறுவிதமாகக் கூறினால், பாட்டாளி
வர்க்கப் பெருந்திரளினருக்கு எதிராகத் தொழிலாளர்களில் ஒரு பிரிவனருக்கும் முதலாளித்துவ
வாக்கத்தர்ருக்கும் இடையே ஏற்படும் கூட்டணியைக் குறிக்கிறது”
(இரண்டாவது அகிலத்தின் தகர்வு -பக்கம்-72-71-
64)