Sunday 31 December 2017

11. மக்கள் திரள் வழி – மா சே துங்

மக்கள், மக்கள் மட்டுமே, உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர்
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல்)

மக்கள் தான் உண்மையான வீரர்கள். ஆனால் நாம் அடிக்கடி சிறுபிள்ளைத் தனமுடையவர்களாகவும், நகைக்கத்தக்கவர்களாகவும் இருக்கின்றோம். இதை விளங்கிக் கொள்ளாவிட்டால் மிக ஆரம்ப அறிவைக்கூட பெறுவது சாத்தியமாகது.
(கிராமிய பரிசீலனையின் முன்னுரையும் பின்னுரையும் – மார்ச் ஏப்ரல் 1941)

மக்கள் எல்லையற்ற படைப்பாற்றல் உடையவர்கள். அவர்கள் தம்மை அமைப்பு ரீதியில் அணிதிரட்டி, தமது ஆற்றலை முற்றாக வெளிப்படுத்தக்கூடிய இடங்களிலும் வேலைப் பிரிவுகளிலும் தமது கவனத்தை குவிக்க முடியும், உற்பத்தியை ஆழமாகவும் அகலமாகவும் பெருக்க கவனத்தை குவிக்க முடியும், தங்களது சொந்த வாழ்க்கையை வளமாக்குவதற்கான நிறுவனங்களை மென்மேலும் உருவாக்க முடியும்
(உபரி உழைப்புக்கு ஒரு பழி பிறந்துவிட்டது- 
என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு- 1955)

மக்கள்திரளுடன் இணைய வேண்டுமானால், மக்களின் தேவைகள் விருப்பங்களின்படி செயல்பட வேண்டும். மக்களுக்காக செய்யும் வேலைகள் எல்லாம் அவர்கள் தேவையிலிருந்து தொடங்க வேண்டும், ஆனால் எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்த ஒரு தனிநபரின் ஆசையிலிருந்தும் தொடங்கக்கூடாது. பல சந்தர்ப்பங்களில், புறநிலையில் பொதுமக்களுக்கு ஒரு குறிப்பிட்டமாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் அக நிலையில் அவர்கள் அத்தேவையை இன்னும் உணராத, அம்மாற்றத்தை இன்னும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலை இன்னும் இருக்கின்றது. இத்தகைய நிலைமைகளில், நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமது வேலைகள் மூலம் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாற்றத்தின் தேவையை உணர்ந்து, அதைச் செய்ய விரும்பி, ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில், நாம் அந்த மாற்றத்தைச் செய்யக் கூடாது. அல்லாவிட்டால் நாம் மக்கள் திரளிடமிருந்து தனிமை படுத்தப்பட்டு விடுவோம்.

மக்கள்திரள் பங்குபெற வேண்டிய எந்த ஒரு வேலையையும் அவர்கள் தாமாக உணர்ந்து, செய்ய விரும்பாவிட்டால், அது வெறும் சம்பிரதாயமாக மாறி, தோல்வி அடைந்துவிடும்…. இங்கு இரண்டு கோட்பாடுகள் உண்டு, ஒன்று, மக்கள்திரளின் உண்மையான தேவைகள் அன்றி, அவர்களுக்கு தேவை என்று நமது மூளையில் கற்பனை செய்வது அல்ல. இரண்டு, மக்கள்திரளின் சுய-விருப்பம், நாம் பொதுமக்களுக்காக அவர்களுடைய மனதை தயார் செய்வதற்கு பதில அவர்கள் தமது மனதை தாமே திடப்படுத்த வேண்டும்.
(கலாச்சார வேலையில் ஐக்கிய முன்னணி- 30 அக்டோபர் 1944)

மக்கள் இன்னும் விழித்து எழாத நிலையில் நாம் தாக்குதலில் செல்ல முயன்றால் அது சாகசவாதம் (adventurism), மக்கள் விரும்பாத ஒரு விசயத்தை செய்யும்படி நாம் அவர்களை வழிநடத்துவதில் பிடிவாதமாய் நின்றால் நாம் நிச்சயமாக தோல்வி அடைவோம். மக்கள் முன்னேற்றத்தைக் கோரும் போது நாம் முனனேறாவிட்டால் அது வலதுசாரி சந்தர்ப்பவாதம் ஆகும்.
(ஷன்சி – சுய்யுவன் நாளேட்டின் ஆசிரியர்
குழுவுடன் நிகழ்த்திய உரையாடல் – 2 ஏப்ரல் 1947)

எல்லா வேலைகளிலும் கட்டளைவாதம் (Commandism) என்பது தவறானது, காரணம், பொது மக்களின் அரசியல், உணர்வு மட்டத்தைத் தாண்டி, சுயமான மக்கள்திரள் நடவடிக்கை என்ற கோட்பாட்டை அத்துமீறி சிந்திக்காமல் செயலாறறும் நோயை அது பிரதிபலிக்கிறது. நமது தோழர்கள் தாம் புரிந்து கொள்ளும் எல்லாவற்றையும் பரந்துபட்ட மக்களும் புரிந்து கொள்வர் என்று எண்ணிவிடக் கூடாது. மக்கள் அதைப் புரிந்து கொண்டாகளா. இல்லையா. அவர்கள் நடவடிக்கைக்குத் தயாராய் இருக்கின்றார்களா, இல்லையா என்பதை அவர்கள் மத்தியில் சென்று பரிசீலனைகள் நடத்துவதன் மூலம் தான் அறியமுடியும்.

நாம் இப்படி செய்தால் கட்டளைவாதத்தைத் தவிர்க்க முடியும். எல்லா வேலைகளிலும் வால்வாதமும் தவறானது. காரணம் அது மக்களின் அரசியல் உணர்வு மட்டத்திற்குக் கீழே தாழ்ந்து, மக்கள் முன்னேற தலைமைதாங்கும் கோட்பாட்டை அத்துமீறி, காலங்கடத்தும் நோயைப் பிரதிபிலிக்கின்றது. நமது தோழகள் நாம் புரிந்து கொள்ளாத ஒன்றை மக்களும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று எண்ணி விடக்ககூடாது.

பல சந்தர்ப்பங்களில், பரந்துபட்ட மக்கள் நம்மையும் தாண்டிச் சென்று, மேலும் முன்னேற ஆவலாய் இருக்கும் அதே வேளையில், நமது தோழர்கள் மக்களின் தலைவர்களாய் செயல்படாமல், சில பின்தங்கிய நபர்களின் கருத்துகளைப் பிரதிபலித்து அவற்றைப் பரந்துபட்ட மக்களின் கருத்துகளாகப் பிழைபடக் கருதி பின்தங்கிய நபர்களின் வாலில் செல்கிறார்கள்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

சில இடங்களில் நமது தலைமை நிறுவனங்களிலுள்ள சிலர் கட்சியின் கொள்கைகளைத் தலைவர்கள் மட்டும் அறிந்தால் போதும், மக்கள்திரள் அறிவது அவசியமில்லை என்று எண்ணுகின்றனர். நமது வேலையில் சிலவற்றை நன்றாகச் செய்ய முடியாமல் இருப்பதன் அடிப்படைக் காரணங்களில் இது ஒன்றாகும்.
(ஷன்சி – சுய்யுவன் நாளேட்டின் ஆசிரியர்
குழுவுடன் நிகழ்த்திய உரையாடல் – 2 ஏப்ரல் 1947)


எல்லா மக்கள்திரள் இயக்கங்களிலும் ஊக்கமான ஆதரவாளர்கள் எத்தனைப் பேர், எதிர்ப்பாளர்கள் எத்தனை பேர், நடுநிலையாளர்கள் எத்தனை பேர் என்பதை அடிப்படையில் பரிசீலனை செய்து, ஆராய வேண்டும். ஆதாரமின்றி அகநிலை ரீதியாகப் பிரச்சினைகளைத் தீர்மானிக்கக் கூடாது.
(கட்சி கமிட்டியின் வேலை முறைகள் – 13 மார்ச் 1949)

கட்சியின் கொள்கையை மக்களின் செயலாக மாற்றுவதில் சிறந்து விளங்கவது, நாம் நடத்தும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு போராட்டத்தையும் பற்றி நமது தலைமை ஊழியர்கள் மாத்திரமல்ல, பரந்துபட்ட மக்களும் கிரகித்து தேர்ச்சி பெறச் செய்வதில் திறமை பெற்றிருப்பது- இதுவே மார்க்சிய லெனினியம் தழுவிய தலைமைக் கலை, நமது வேலையில் நாம் தவறு இழைக்கின்றோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் ஓர் எல்லைக் கோடு இது.
(ஷன்சி – சுய்யுவன் நாளேட்டின் ஆசிரியர்
குழுவுடன் நிகழ்த்திய உரையாடல் – 2 ஏப்ரல் 1947)

தலைமைக்குழு எவ்வளவு உற்சாகமாயிருந்த போதிலும் அதன் நடிவடிக்கை மக்களின் உற்சாகத்துடன் இணைக்கபடாவிட்டால், அது ஒரு சில நபர்களின பயனற்ற முயற்சியாகவே இருக்கும். மறுபுறம் பரந்துபட்ட மக்கள் மட்டும் ஊக்கமாக இருந்து மக்களின் நடவடிக்கையைத் தகுதியான முறையில் ஒழுங்கு செய்ய ஒரு பலமான தலைமைக்குழு இல்லாவிட்டால், அந்த உற்சாகம் நீண்டகாலம் நீடித்திருக்க முடியாது, சரியான திசையில் செலுத்தப்பட முடியாது, ஒருமேல் மட்டத்திற்கு உயர்த்தபபட முடியாது.
(தலைமை முறை பற்றிய சில பிரச்சினைகள் – 1 ஜீன் 1943)




10. கட்சிக் கமிட்டிகளின் தலைமை – மா சே துங்

பிரச்சினைகளை மேசையில் வைக்க வேண்டும், “குழுத் தலைவர்” மாத்திரமல்ல கமிட்டி உறுப்பினர்களும் இப்படியே செய்ய வேண்டும். ஒருவர் முதுகுக்குப்பின் மற்றவர் புறங்கூறக் கூடாது. பிரச்சினைகள் தோன்றும் போதெல்லாம், கூட்டத்தைக் கூட்டி, பிரச்சினைகளை விவாதத்திற்காக மேசையில் வைத்து, சில முடிவுகளை எடுத்தால், பிரச்சினைகள் தீர்ந்துவிடும். பிரசினைகள் இருந்து, அவை மேசையில் வைக்கப்படாவிட்டால், அவை நீண்டகாலம் தீர்க்ப்படாமல் இருக்கும், ஆண்டுக்கணக்காக அவை இழுபட்டுச் செல்லலாம். “குழுத் தலைவ”ரும் கமிட்டி உறுப்பினர்களும் ஒருவருககொருவர் புரிந்து கொள்ள வேண்டும். செயலாளருக்கும் கமிட்டி உறுப்பினர்களுக்கும் இடையில், மத்திய கமிட்டிக்கும் அதன் பிராந்திய குழுக்களுக்கும் இடையில், பிராந்திய குழுக்களுக்கும் பிரதேச கட்சி கமிட்டிகளுக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்து கொள்ளல், ஆதரவு நட்புறவு ஆகியவற்றிலும் பார்க்க முக்கயிமானவை வேறொன்றுமில்லை.
(கட்சிக் கமிட்டியின் வேலை முறைகள்- 13 மார்ச் 1949)

உங்களுக்குப் புரியாத அல்லது தெரியாத விசயங்கள் பற்றி உங்களுக்கு கீழ் உள்ளவர்களிடம் கேளுங்கள். உங்களுடைய அங்கீகாரத்தையோ அல்லது நிராகரிப்பையோ, இலேசாக தெரிவிக்ககூடாது… நமக்கு தெரியாதவற்றை தெரிந்தது போல் நடக்ககூடாது. நாம் “கீழே உள்ளவர்களிடமிருந்து கேட்டுப் படிபதற்கு வெட்கப்பட கூடாது” கீழ் மட்டங்களிலுள்ள ஊழியர்களின் கருத்துகள் நாம் கவனமாக கேட்க வேண்டும். நீங்கள் ஆசிரியனாவதற்கு முன், மாணவராய் இருங்கள். நீங்கள் உத்தரவுகள் இடுவதற்கு முன் கீழ் மட்ட ஊழியர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்… கீழ் மட்ட ஊழியர்கள் கூறுவது சரியாக இருக்கலாம் அல்லது பிழையாக இருக்கலாம். கேட்பது நாம் அவற்றை ஆராய வேண்டும். நாம் சரியான கருத்துககளில் கவனம் செலுத்தி, அவற்றின்படி செயல்பட வேண்டும்… கீழ் இருந்து வரும் தவறான கருத்துகளையும் நாம் கேட்க வேண்டும். அவற்றை முற்றாகக் கேளாமல் விடுவது தவறு. ஆனால் அவற்றின்படி செயற்படக்கூடாது மாறாக, அவற்றை விமர்சனம் செய்ய வேண்டும்.
(கட்சிக் கமிட்டியின் வேலை முறைகள்- 13 மார்ச் 1949)

சொந்த கருத்திலும் பார்க்க வேறுபட்ட கருத்துள்ள தோழர்களுடன் ஐக்கியப்பட்டு வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு இடங்களிலும் அல்லது இராணுவத்தில்கூட இதை மனதில் வைத்திருக்க வேண்டும். கட்சிக்கு வெளியேயுள்ள மக்களுடன் கொள்ளும் உறவுகளுக்கும் இது பொருத்தமானது. நாம் நாட்டின் எல்லா மூலை முடக்குகளிலிருந்தும் வந்து ஒன்றாக சேர்ந்துள்ளோம். நம்மைப் போன்ற கருத்துகளுடைய தோழர்களுடன் மாத்திரமல்ல, மாறுபட்ட கருத்துக்கள் உடையவர்களுடனும் நாம் ஐக்கியப்பட்டு வேலை செய்வதில் தேர்ச்சிபெற வேண்டும்.

(கட்சிக் கமிட்டியின் வேலை முறைகள்- 13 மார்ச் 1949)

9. மக்கள் படை - மா சே துங்

இந்தப் படை பலமுடையது. காரணம் இந்த படையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உணர்வுபூர்வமான கட்டுபபாடு உடையவர்கள். அவர்கள் எல்லோரும் ஒரு சில நபர்கள் அல்லது ஒரு குறுகிய கும்பலின் தனி நலன்களுக்காக அல்ல, பதிலுக்க பரந்துபட்ட மக்களின் நலன்களுக்காக, முழு தேசத்தின் நலன்களுக்காகவே ஒன்று சேர்ந்து போரிடுகின்றனர். சீன மக்களின் பக்கத்தில் உறுதியாக நின்று, அவர்களுக்கு முழு மனதுடன் சேவை செய்வதே இந்தப் படையின் ஒரே ஒரு நோக்கம்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

மக்கள் விடுதலைப் படை எப்பொழுதும் ஒரு போர்ப் படையாக விளங்குகின்றது. தேசிய ரீதியான வெற்றிக்கு பின்னர்கூட நமது நாட்டில் வர்க்கங்கள் ஒழிக்கப்படாத, உலகில் ஏகாதிபத்திய அமைப்பு இன்னும் இருக்கின்ற வரலாற்றுக் கட்டம் முழுதும் நமது படை ஒரு போர்படையாக திகழும். இந்த விஷயத்தில் தவறான புரிதலோ, அல்லது ஊசலாட்டமோ இருக்கக் கூடாது.
(சீன கம்யூனிஸ்ட் கடசி 7வது மத்திய
கமிட்டியின் 2வது பிளீனக் கூட்டத்தின் அறிக்கை 5 மார்ச் 1949)

"கட்சி துப்பாக்கி மீது ஆணை செலுத்துகிறது. கட்சி மீது துப்பாக்கி ஆணை செலுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க் கூடாது."
(யுத்தமும யுத்த தந்திரமும் பற்றி பிரச்சினைகள் - 6 நவம்பவர் 1938)

8. மக்கள் யுத்தம் – மா சே துங்

புரட்சி யுத்தம் என்பது பொதுமக்களின் யுத்தம், பொது மக்களைத் தட்டியெழுப்பி, அவர்களைச் சார்ந்திருந்தால் தான் இந்த யுத்தத்தை நடத்த முடியும்.
(பொதுமக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்,
வேலை முளைகளில் கவனம் செலுத்து – 27 ஜனவரி 1934)

உண்மையான இரும்புக் கோட்டை யாது? பொதுமக்கள், புரட்சியை உண்மையாகவும், விசுவாசமாகவும் ஆதரிக்கும் இலட்சோப இலட்சம் பொதுமக்களே ஆவர். இதுதான் உண்மையான இரும்புக் கோட்டையாகும். இதை எந்தச் சக்திகயாலும் உடைப்பது சாத்தியமாகாது, முற்றிலும் சாத்தியமாகாது. எதிர்புரட்சி நம்மை நசுக்க முடியாது. மாறாக எதிர்புரட்சியை நம்மால் நசுக்க முடியும், புரட்சிகர அரசாங்கத்தை சூழ இலட்சோப இலட்சம் மக்களையும் அணி திரட்டி, நமது புரட்சி யுத்த்தை விரிவாக்கி, எதிர்ப்புரட்சி முழுவதையும் ஒழித்துக்கட்டி சீனா முழுவதையும் நாம் கைப்பற்றுவோம்
(பொதுமக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்,
வேலை முளைகளில் கவனம் செலுத்து – 27 ஜனவரி 1934)


யுத்தத்தை நடத்தும் பேராற்றலின் செழுமையான ஊற்றுமூலம் பொதுமக்கள் மத்தியில் தான் இருக்கின்றது. ஜப்பான் நம்மைத் துன்புறுத்த துணியும் காரணம், தலையாயமாக சீன மக்கள் அமைப்பு ரீதியாக அணி திரட்டப்படாததேயாகும். இந்தக் குறைபாடு ஒருக்கால் திருத்தப்பட்டதும், ஜப்பானிய ஆக்கரிப்பாளன் எழுந்து நிற்கும் நமது கோடானகோடி மக்களாலும் சுற்றி வளைக்கப்படுவான், அவன் நெருப்பு வளையத்திற்குள் பாய்ந்து வெறிமாடுபோல், நாம் இடும் சத்தத்தால் அச்சுறுத்தப்பட்டு எரிந்து இறந்து விடுவான்

(நீண்டநாள் யுத்தம் பற்றி – மே 1938)

Friday 29 December 2017

7. போராடத் துணியுங்கள்! வெற்றி பெறத் துணியுங்கள்! - மா சே துங்

“உலக மக்களே, ஒன்றுபட்டு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களையும், அவர்களது அடிவருடிகளையும் தோற்கடியுங்கள்! உலக மக்களே, அஞ்சாமல் இருநது, துணிந்து போராடி, இன்னல்களைத் துச்சமாக மதித்து, அலையலையாக முன்னேறுங்கள்! அப்பொழுது உலகம் முழுவதும் மக்களுக்கே உரியதாகும். அனைத்து அரக்கர்களும் ஓழிக்கப்படுவர்.”
(அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான (லி) காங்கே மக்களை
ஆதரிக்கும் அறிக்கை – 28 நவம்வர் 1964)

“சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய – லெனினிய அறிவியலின் அடிப்படையில் சர்வதேசிய, தேசிய நிலைமைகளை தெளிந்த சிந்தனையுடன் மதிப்பீடு செய்து, எல்லா உள்நாட்டு வெளிநாட்டு பிற்போக்குவாதிகளின் தாக்குதல்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். தோற்கடிக்கப்படவும் முடியும் என்பதை உணர்ந்து கொண்டது. வானத்தில் கருமுகில்கள் தோன்றிய போது, இவை தற்காலிகமானவையே, இருள் விரைவில் நீங்கும், சூரியன் இதோ தோன்றுவான் என்று நாம் சுட்டிக்காட்டினோம்.”
(இன்றைய நிலைமையும் நமது கடமைகளும் – 25 டிசம்பர் 1947)

“நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, நாம் ஒரு நாள் கூட போரிட விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலைகள் நம்மைப் போரிடும்படி நிர்பந்தித்தால், நம்மால் இறுதிவரை போரிட முடியும்.”
(அமெரிக் நிருபர் அன்னா லூயிஸ் ஸ்ட்ராங்கடன்
நிகழ்த்திய உரையாடல் – ஆகஸ்ட் 1940)

“நாம் சமாதானத்தை விரும்புகிறோம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் செருக்கான, அநியாயமான கோரிக்கைகளையும், ஆக்கிரமிப்பை விரிவாக்கும் சூழ்ச்சிகளையும் கைவிடாதவரையில் சீனா ஒரே ஒரு உறுதிப்பாடு கொரிய மக்களுடன் ஒன்றாக நின்று, தொடர்ந்தும் போரிடுவதாகும். இதற்குக் காரணம் நாம் யுத்தப் பிரியர் என்பதல்ல, நாம் யுத்தத்தை உடனடியாக நிறுத்த, எஞ்சிய பிரச்சினைகளுக்குப் பின்னர் தீர்வுகான விரும்புகின்றோம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அப்படியென்றால் சரி, போர் நடக்கட்டும், அமெரிக்க ஏகாதிபத்தியம் எத்தனை ஆண்டுகள் போரிட விரும்பினாலும், நாமும் அத்தனை ஆண்டுகள் போரிடத் தயாராய் இருக்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் போரை நிறுத்த விரும்பும் காலம்வரை, சீன-கொரிய மக்கள் முழு வெற்றி பெரும்வரை நாம் போரிடத் தயாராய் இருக்கின்றோம்.”
(சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டின்
1வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டத்து உரை – 7 பிப்பரவரி - 1953)

“நம் மத்தியிலுளள பலவீனமான சிந்தனை எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டும். எதிரியின் பலத்தை அதிகப்படியாக மதிப்பது. மக்களின் பலத்தை குறைத்து மதிப்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் தவறானவை”
(இன்றைய நிலைமையும் நமது கடமைகளும் – 25 டிசம்பர் 1947)






6. ஏகாதிபத்தியவாதிகளும் எல்லா பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள் – மா சேது ங்

“எல்லா பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள், தோற்றத்தில் பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள். ஆனால் யதார்த்தில் அவ்வளவு பலமுடையவர்கள் அல்ல. நீண்டகால நோக்கிலிருந்து பார்த்தால் உண்மையில் பலமுடையவர்கள் பிற்போக்குவாதிகள் அல்ல.”
(அமெரிக்க நிருபர் அன்னா லூயிஸ் ஸ்ட்ராங்குடன்
நிகழ்த்திய உரையாடல் – ஆகஸ்ட் 1946)

“பலமுடையவர்கள் என்று புகழப்படும் பிற்போக்குவாதிகள் அனைவரும் காகிதப்புலிகளே என்று நான் கூறினேன், காரணம் அவர்கள் மக்களிடமிருந்து பிரிந்துவர்கள். பாருங்கள்! இட்லர் ஒரு காகிதப்புலி இல்லையா? இட்லர் தூக்கியெறியப்படவில்லையா? ரசியாவின் ஜார் ஒரு காகிதப்புலி, சீனாவின் சக்கரவர்தி ஒரு காகிதப்புலி, ஜப்பான் ஏகாதிபத்தியம் ஒரு காகிதப்புலி என்றும் நான் கூறினேன். பாருங்கள்! அவர்கள் எல்லோரும் தூக்கியெறியப்பட்டுவிட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் தூக்கியெறியப்படவில்லை. அதனிடம் அணுகுண்டும் இருக்கிறது. அதுகூட தூக்கியெறியப்படும் என்று நான் நம்புகிறேன். அதுவும் ஒரு காகிதப்புலியே.”
(கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் மாஸ்கோ மாநாட்டு உரை – 18 நவம்பர் 1957)


Thursday 28 December 2017

5. யுத்தமும சமாதானமும் - மா சே துங்

“யுத்தம் என்பது வர்க்கங்கள், தேசங்கள், நாடுகள், அரசியல் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையில் நிலவும் முரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு வளர்ச்சியடைந்ததும், அவற்றைத் தீர்ப்பதற்குரிய அதி உயர்ந்த போராட்ட வடிவம். தனிவுடைமை முறையும், வர்க்கங்களும் தோன்றியது முதல் யுத்தமும் இருந்து வருகின்றது”
(சீனப்புரட்சி யுத்தத்தில் யுத்த தந்திரம்ப் பிரச்சினைகள்- டிசம்பர் 1939)

“யுத்தங்களில் நீதியான யுத்தங்கள் அநீதியான யுத்தங்கள் என இரண்டு வகை உண்டு என்பதை வரலாறு காட்டுகின்றது. முற்போக்கான எல்லா யுத்தங்களும் நீதியானவை, முற்போக்கைத் தடுக்கும் எல்லா யுத்தங்களும் அநீதியானவை. கம்யூனிஸ்டுகளாகிய நாம் முற்போக்கைத் தடுக்கின்ற அநீதியான யுத்தங்கள் எல்லாவற்றையும் எதிக்கின்றோம். ஆனால் முற்போக்கான, நீதியான யுத்தங்களை நாம் எதிர்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகளாகிய நாம் நீதியான யுத்தங்களை எதிர்க்காதது மாத்திரமல்ல, அவற்றில்  ஊக்கமாகப் பங்கும் ஆற்றுகின்றோம். அநீதியான யுத்தங்களைப் பொறுத்தவரையில், முதலாவது உலகப் பெரும் போர் ஒரு உதாரணமாகும். இதில் இரு தரப்பும் ஏகாதிபத்திய நலன்களுக்காகப் போரிட்டன. எனவே உலக கம்யூனிஸ்டுகள் அனைவரும் அந்த யுத்தத்தை உறுதியாக எதிர்த்தார்கள். இத்தகைய ஒரு யுத்தத்தை எதிர்க்கும் வழி, அது வெடித்தெழுவதற்கு முன், அதைத் தடுக்கச் சாத்தியமான அனைத்தையும் செய்வதே. அது ஒருக்கால் வெடித்ததும், சாத்தியமான போதெல்லாம் யுத்தத்தை யுத்தத்தால் எதிர்க்க வேண்டும். அநீதியான யுத்தத்தை நீதியான யுத்தத்தால் எதிர்க்க வேண்டும்”
(நீண்டகால யுத்தம் பற்றி- மே 1938)

“நாம் யுத்தத்தை ஒழிப்பதற்காக வாதாடுபவர்கள். நாம் யுத்தத்தை விரும்பவில்லை, ஆனால் யுத்தத்தை யுத்தத்தின் மூலம் தான் ஒழிக்க முடியும். துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானால், துப்பாக்கி ஏந்துவது அவசியம்”
(யுத்தமும் யுத்ததந்திரமும பற்றிய பிரச்சினைகள் -6 நவம்பர் 1938)

“நாம் சமாதானத்தை விரும்புகின்றோம், ஆனால் ஏகாதிபத்தியம் ஒரு போரை நடத்துவதில் விடாப்பிடியாக நின்றால், நாமும் உறுதியான தீர்மானத்துடன் போரை நடத்திவிட்டு, பின்னர் நிர்மாணத்தில் ஈடுபடுவதன்றி, வேறு வழியில்லை. நீ தினம் தினம் யுத்தத்திற்கு அஞ்சினால், பின்னர் யுத்தம் வரும்போது யாது செய்வாய்? கீழ்காற்று மேல்காற்றை வெல்கிறது, யுத்தம் வெடிக்க மாட்டாது என்று நான் முதலில் கூறினேன். இப்போது யுத்தம் வெடித்தால் ஏற்படும் நிலைமை பற்றி இந்த விளக்கங்களை மேலும் கொடுத்துள்ளேன். இவ்வாறு இரண்டு சாத்தியப்பாடுகளும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.”

(கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் மாஸ்கோ மாநாட்டு உரை – 18 நவம்பர் 1958)

4. மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி – மா சே துங்

“தன்மையில் வேறுபட்ட முரண்பாடுகள் தன்மையில் வேறுபட்ட முறைகளால் தான் தீர்க்கப்பட முடியும். எடுத்துக்காட்டாக, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள முரண்பாடு சோஷலிச புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். பரந்து பட்ட மக்களுக்கும் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கும் இடையிலுள்ள முரண்பாடு ஜனநாயகப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். காலனிகளுக்கும் ஏகாதியத்தியத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு தேசியப் புரட்சி யுத்த முறையால் தீர்க்கப்பட வேண்டும். சோஷலிச சமூகத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் விவசாயி வர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு விவசாயத்தைக் கூட்டுறவு மயமாக்கி, எந்திர மயமாக்கும் முறையால தீர்க்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவும் முரண்பாடு விமர்சனம், சுய விமர்சனம் என்ற முறையால் தீர்க்கப்பட வேண்டும். சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலுள்ள முரண்பாடு உற்பத்தி சக்திகளை பெருக்கும் முறையால் தீர்க்கப்பட வேண்டும்… வேறுபட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேறுபட்ட முறைகளை பயன்படுத்தும் கோட்பாடு மார்க்சிய-லெனினியவாதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கோட்பாடு”
(முரண்பாடு பற்றி – ஆகஸ்ட் 1937)

“சித்தாந்த இயல்பு தழுவிய பிரச்சினைகளை, அல்லது மக்கள் மத்தியில் தகராறுக்கு உரிய பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரே ஒரு வழி ஜனநாயக முறை, கலந்துரையாடல் முறை, விமர்சன முறை, இணங்கச் செய்வது, பயிற்றுவிப்பது ஆகியவற்றை பயன்படுததுவதன்றி, பலாத்காரத்தையோ அல்லது அடக்கு முறையையோ பயன்படுத்துவதல்ல”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிரவரி 1957)

“முதலாளி வர்க்கமும் குட்டி முதலாளி வர்க்கமும் தத்தம் சித்தாந்தங்களை வெளியிடுவது தவிர்க்க முடியாதது. அரசியல், சித்தாந்தப் பிரச்சினைகளில் சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்கள் தமது கருத்துககளைப் பிடிவாதமாக வெளியிடுவது நிச்சயம். அவர்கள் தமது கருத்துக்கள் வெளியிடாமலும் பிரதிபலிக்காமலும் இருப்பது சாத்தியமாகாது. நாம் அடக்குமுறைகளைப் பாவித்து, அவர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கக்கூடாது. பதிலாக அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட அனுமதிக்க வேண்டும். அதே வேளையில், அவர்களுடன் விவாதித்து, அவர்களைத் தகுந்த முறையில் விமர்சனம் செய்ய வேண்டும், எல்லாவிதமான தவறான கருத்துக்களையும் நாம் சந்தேகத்திற்கிடமின்றி விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனம் செய்யாமல், தவறான கருத்துக்கள் கட்டுபபாடின்றிப் பரவுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், அவை களத்தில் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிப்பதும் உண்மையில் சரியல்ல. தோன்றும் போதெல்லாம் தவறுகளை விமர்சிக்கப்பட வேண்டும். நச்சுக்கள் களையப்பட வேண்டும். ஆனால் இத்தகைய விமர்சனத்தில் வறட்டுவாத, நிலையியல் முறையை பயன்படுத்தக் கூடாது. மாறாக இயக்கவியல் முறையைப் பிரயோகிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். நமக்குத் தேவையானவை அறிவியல் ஆராய்வும், நம்பிக்கை ஊட்டும் நியாமுமே ஆகும்”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிரவரி 1957)

“முரண்பாடும் போராட்டமும் அனைத்தையும் தழுவியவை, சார்பற்றவை, ஆனால் முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள், அதாவது போராட்ட வடிவங்கள், முரண்பாடுகளின் இயல்புகள் வேறுபடுவதற்கு ஏற்ப வேறுபடுகின்றன, சில முரண்பாடுகள் வெளிப்படையாகப் பகை இயல்பு உடையவை, சில அப்படி அல்ல. விசயங்களின் பருண்மையான வளர்ச்சியின்படி, ஆரம்பத்தில் பகையற்றிருந்த முரண்பாடுகள் பகையுடைவையாக இருந்தவை பகையற்ற முரண்பாடுகளாக வளர்கின்றன”
(முரண்பாடு பற்றி – ஆகஸ்ட் 1937)


Wednesday 27 December 2017

3. சோஷலிசமும் கம்யூனிசமும் - மா சே துங்

“சோஷலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைத்து ஈடுசெய்யும். இது மனித சித்தத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலைவிதி. (Objective law) பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும், இன்றோ நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம், அது வாகை சூடுவதும் தவிர்க்க முடியாதது.”
(மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் 40வது ஆண்டு நிறைவு விழாவின் போது சோவியத் யூனியன் உயர்தர சோவியத்
கூட்டத்தில் ஆற்றிய உரை – 6 நவம்பர் 1957)

“முழுமையாக நோக்கினால், சீனக்கம்யூனிஸ்டுக் கட்சி தலைமை தாங்கும் சீனாவின் புரட்சி இயக்கம் இரண்டு கட்டங்களை, அதாவது ஜனநாயக, சோஷலிசப் புரட்சிகளை உள்ளடக்கியது. இவை இரண்டும் சாராமசத்தில் வேறுபட்ட இரண்டு புரட்சிகர போக்குகள். முன்னது முழுமையாக்கப்பட்ட பின்னர் தான் பின்னது நிறைவேற்றப்பட முடியும். ஜனநாயகப் புரட்சி என்பது சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான ஒரு தயாரிப்பு. சோஷலிசப் புரட்சி ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க முடியாத ஒரு நீட்டிப்பு. கம்யூனிஸ்டுகள் அனைவரும் பாடுபடும் இறுதி லட்சியம் ஒரு சோஷலிச, கம்யூனிச சமூதாயத்தை நிறுவுவதேயாகும்.”
(சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் – டிசம்பர் 1939)

“மத்தியதர விவசாயிகளுடன் ஐக்கியப்படுவது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால் அதுதவறு. ஆனால் மத்தியதர விவசாயிகளை ஐக்கியப்படுத்தி, நாட்டுப்புறம் முழுவதிலும் சோஷலிச மாற்றத்தை நிறைவேற்ற வேண்டுனால், நாட்டுப்புறத்தில் தொழிலாளர் வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் யாரைச் சார்ந்திருக்க வேண்டும்? வறிய விவசாயிகளையன்றி வேறு யாரையும் அல்ல என்பது நிச்சயம். முன்பு நிலப்பிரபுக்களுக்கு எதிராகப் போராடிய போதும், நிலச்சீர்திருத்தம் நடைபெற்ற காலத்திலும் அப்படியே செய்யப்பட்டது. இன்று விவசாயத்தில் சோஷலிச மாற்றத்தை நிறைவேற்ற, பணக்கார விவசாயிகளுக்கும், இதர முதலாளித்துவ அம்சங்களுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தும்போதும் அப்படியே செய்ய வேண்டும்.

இந்த இரண்டு புரட்சிக் காலகட்டங்களிலும் மத்தியதர விவசாயிகள் ஆரம்பத்தில் ஊசலாடினார்கள். நிகழ்ச்சிகளின் பொது வளர்ச்சிப் போக்கையும், புரட்சியின் வெற்றிகிட்டி வருவதையும் தாம் தெளிவாகக் காணும் போது தான், மத்திரதர விவசாயிகள் புரட்சியின் பக்கம் சார்ந்து கொள்வர். புரட்சி என்பது நாளுக்கு நாள் பரந்து விரிந்து, இறுதியில் வெற்றி பெற வேண்டுமானால், வறிய விவசாயிகள், மத்தியதர விவசாயிகள் மத்தியில் வேலை செய்து அவர்களைத் தம் பக்கம் வென்றெடுகக வேண்டும்”
(பூஆன் மாவட்டத்தில் “மத்தியதர விவசாயிகள் கூட்டுறவு”ம் “வறிய விவசாயிகள் கூட்டுறவு”ம் தந்த பாடங்கள்- என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு - 1955)

“மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்திற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமை இன்றியமையாதது. ஏனென்றால் தொழிலாளர் வர்க்கம் தான் மிகவும் தொலைநோக்கு கொண்டது. மிகுதியும்  சுயநலம் அற்றது, மிக முற்றான புரட்சி உணர்வுடையது, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமை இல்லாவிட்டால் புரட்சி என்பது தோல்வியடையும், அதன் தலைமை இருந்தால் புரட்சி வாகை சூடும் என்பதைப் புரட்சி, வரலாறு முழுவதும் நிரூபிக்கின்றது.”
(மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றி – 30 ஜீன் 1949)

“மகத்தான நிர்மாண வேலையில் மிகக் கடினமான கடமைகள் நம்முன் இருக்கின்றன. நமது கட்சியில் ஒரு கோடிக்கு மேலான உறுப்பினர்கள் இருந்த போதிலும், நாட்டின் முழு மக்கள் தொகையில் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே ஆவார். நமது பல்வேறு அரசாங்க நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பெருமளவு வேலைகள் கட்சி உறுப்பினர்கள அல்லாதவர்களால் செய்யப்பட வேண்டியிருக்கின்றன.

நாம் பொதுமக்களைச் சார்ந்து நிற்பதிலும், கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களுடன் ஒத்துழைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டால், இந்த வேலைகளை நன்றாக செய்து சாத்தயமல்ல. கட்சி முழுவதின் ஐக்கியத்தை தொடர்ந்து பலப்படுத்தும் அதே வேளையில் நமது தேசிய இனங்கள் ஜனநாயக வர்க்கங்கள், ஜனநாயக கட்சிகள் மக்கள் நிறுவனங்கள் எல்லாவற்றின் ஐக்கியத்தைத் தொடர்ந்து பலப்படுத்தி, நமது மக்கள் ஜனநாயக ஐக்கிய முன்னணியையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும். நமது வேலையின் எந்தத் தொடரிலும், கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலும் ஐக்கியத்தை ஊறுபடுத்தும் ஆரோக்கிய மற்ற எல்லா வெளிப்பாடுகளையும் நாம் உணர்வு பூர்வமாக, இலலாமல் செய்ய வேண்டும்.”

(சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 8வது தேசிய மாநாட்டின் ஆரம்ப உரை – 15 செப்டம்பர் 1956)

2. வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் – மா சே துங்

“சமூக மாற்றங்கள் பிரதானமாக சமூகத்தில் காணும் உள் முரண்பாடுகளின் (internal contradictions) வளர்ச்சியால் அதாவது உற்பத்தி சக்திகளுககும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கு இடையிலுள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிதான் சமூகத்தின் முன்னேறச் செய்கின்றது, பழைய சமூகத்தின இடத்தில் புதிய சமூகத்தை தோற்றுவிக்கும் உந்து சக்தியாக விளங்குகின்றது”
(பிரமைகளை வீசிஎரிந்து போராட்டத் தயாராகுங்கள்- 14 ஆகஸ்ட் 1949)

“புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல, ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல, அது அவ்வளவு பண்பானதாக இருக்காது, அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி, ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை.”
(ஹீனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை – மார்ச் 1927)

“நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சியில் இந்தப் பிரச்சினை முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சீனாவின் கடந்த காலப் புரட்சிகள் எல்லா சாதித்தவை மிகக் குறைவாக இருப்பதன் அடிப்பைடக் காரணம், அவை உண்மையான பகைவர்களைத் தாக்குவதற்கு உண்மையான நண்பர்களை ஐக்கியப்படுதத் தவறியதேயாகும்.

புரட்சிகரக் கட்சி என்பது பொதுமக்களின் வழிகாட்டி, அது பொதுமக்கள் தவறான பாதையில் வழி நடத்தினால், புரட்சி என்பது தோல்வி அடையாமல் இருக்க முடியாது. மக்களை நாம் தவறான பாதையில் இட்டுச செல்லாமல், நமது புரட்சியின் நிச்சய வெற்றியை உத்தரவாதம் செய்ய வேண்டுமானால், நாம் உண்மையான விரோதிகளைத் தாக்குவதற்கு உண்மையான நண்பர்களையும் ஐக்கியப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையான பகைவர்களையும் உண்மையான நண்பர்களையும் வேறுபடுத்திக் கொள்ள, நாம் சீன சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார நிலையும், புரட்சி பற்றி அவை கொண்டுள்ள அணுகுமுயையும் பொதுவாக ஆராய்வது அவசியம்.”
(சீன சமூகத்தில் வர்க்கங்களின் ஆராய்வு – மார்ச்  1926)

“துப்பாக்கி ஏந்திய எதிரிகள் ஒழிக்கப்பட்ட பின், துப்பாக்கி இல்லாத எதிரிகள் இன்னும் இருப்பர். அவர்கள் நம்முடன ஜீவமரணப் போராட்டம் நடத்துவது நிச்சயம். இந்த எதிரிகளை நாம் சாமானியமாகக் கருதக்கூடாது. தற்போது இவ்வாறு பிரச்சினையை எழுப்பாமலும் புரிந்து கொள்ளாமலும் விட்டால், நாம் மிகப் மிகப்பெரிய தவறுகளை இழைத்துவிடுவோம்.”
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 7வது மத்திய கமிட்டியின் 2வது பிளீனக் கூட்டத்தின அறிக்கை – 5 மார்ச் 1949)

“ஏகாதிபத்தியவாதிகளும் உள்நாட்டுப் பிற்போக்குவாதிகளும், தமது தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் இறுதிவரை போராடுவது நிச்சயம், நாடு முழுவதிலும் சமாதானமும ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட்ட பின்னரும், அவர்கள் பல்வேறு வழிகளிலும் சதி வேலைகளில் ஈடுபடுவர். தொல்லைகள் விளைவிப்பர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சீனாவில் தமது மீட்சிக்காக பாடுபடுவர். இது தவிர்க்க முடியாதது, சந்தேகத்திற்கிடமற்றது. எந்த நிலைமையிலும் நாம் நமது விழிப்புணர்ச்சியைத் தளர்த்தி விடக்கூடாது.”
(சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டின் 1வது பிளீனக் கூட்டத்து ஆரம்ப உரை – 21 செப்டம்பர் 1949)

“வறட்டுவாதம், திருத்தல்வாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முன்னேறி வளரும். நடைமுறை அனுபவத்தின் வளர்ச்சியுடன் அதுவும் நிச்சயம் வளரும். அது முன்னேறாமல் தேங்கி நிற்க முடியாது. அது நிலைத்து மாறாத நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும்.

இருந்தும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. ( must never be violated) அத்துமீறினால், தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கண்ணோட்டத்தலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதோ விறைப்பான ஒன்றாக கருதுவதும வறட்டுவாதம் ஆகும்.

மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மையை நிராகரித்தால், அது திருத்தல்வாதம் ஆகும். திருத்தல்வாதம என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோஷலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை திருத்தல்வாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோஷலிச மார்க்கத்திற்கல்ல. இன்றைய நிலைமைகளில் திருத்தல்வாதம் என்பது வறட்டுவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திருத்தல்வாதத்துக்கு எதிரான விமர்சனத்தை மலரச் செய்வதாகும்”
(சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சார வேலை ப்றிய தேசிய மாநாட்டுரை  - 12 மார்ச் 1957)


Tuesday 26 December 2017

1. கம்யூனிஸ்ட் கட்சி பற்றி - மா சே துங்

புரட்சி நடைபெற வேண்டுமானால் புரட்சிகரக் கட்சி ஒன்று இருக்க வேண்டும், புரட்சிகரக் கட்சி ஒன்று இல்லாவிட்டால், மார்க்சிய-லெனினிய புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில், மார்க்சிய-லெனினிய புரட்சிகர நடையில் அமைக்கப்பட்ட கட்சி ஒன்று இல்லாவிட்டால், ஏகாதிபத்தியத்தையும் அதன் வேட்டை நாய்களையும் தோற்கடிப்பதில் தொழிலாளர் வர்க்கத்துக்கும் பரந்துபட்ட பொதுமக்களுக்கும் தலைமை அளிப்பது சாத்தியமாகாது.
(புரட்சிகர உலக சக்திகளே!  ஐய்க்கயிப்பட்டு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப போரிடுங்கள் (நவம்பர் 1946))

மார்க்சிய – லெனினியக் கோட்பாட்டால் ஆயுத பாணியாக்கப்பட்ட சுயவிமர்சன முறையைப் பயில்கின்ற, பொதுமக்களுடன் தொடர்புடைய, சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சி, இத்தகைய ஒரு கட்சியின் தலைமையிலுள்ள ஓர் இராணுவம், இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள், புரட்சிகரக் குழுக்கள் எல்லாவற்றினதும் ஓர் ஐக்கிய முன்னணி, இந்த மூன்றும் தான் நாம் எதிரியைத் தோற்கடித்த மூன்று பிரதான ஆயுதங்கள்
(மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றி (30 ஜீன் 1949))

நாம் வழககமாக்க் கூறுவது போல், சீர்செய் இயக்கம் (rectification movement) என்பது அனைத்தையும் தழுவிய ஒரு மார்க்சிய கல்வி இயக்கம்சீர்செய்து என்றால் கட்சி முழுவதும் விமர்சனம், சுய விமர்சனம் இவற்றின் மூலம் மார்க்சியத்தைக் கற்பது என்று பொருள். இந்த சீர்செய் இயக்கத்தின் போக்கில், நாம் மார்க்சியம் பற்றிக் கூடுதலாகப் படிப்பது நிச்சயம்
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டு உரை (12 மார்ச், 1957))

கொள்கை (Policy) என்பது ஒரு புரட்சிகரக் கட்சியின் சகல நடைமுறை நடவடிக்கைகளினதும் தொடக்கப்புள்ளி, அது கட்சி நடவடிக்கைகளின் வளர்ச்சிப் போக்கிலும், இறுதி விளைவிலும் தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. ஒரு புரட்சிகரக் கட்சி எந்த ஒரு நடவடிக்கையை எடுக்கும் போதும், ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது. அது ஒரு சரியான கொள்கையை நடைமுறைபடுத்தாவிட்டால், பிழையான கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. அது ஒரு குறிப்பிட்ட கொள்கையை உணர்வு பூர்வமாக நடத்தாவிட்டால் அதை கண்மூடித்தனமாக நடைமுறைப்படுத்துகின்றது. ஒரு கொள்கையை நடைமுறைபடுத்தும் வளர்ச்சிப் போக்கையும், இறுதி விளைவையுமே நாம் அனுபவம் என்று கூறுகின்றோம்.

மக்களின் நடைமுறையின் மூலம் தான், அதாவது அனுபவத்தின் மூலம் தான், நாம் ஒரு கொள்கை சரியானதா, இல்லையா, எந்த அளவுக்கு அது சரியானது அல்லது பிழையானது என்பதைக் கண்டு கொள்ள முடியும். ஆனால் மக்களின் நடைமுறை, குறிப்பாக ஒரு புரட்சிகரக் கட்சியினதும், புரட்சிகர மக்களினதும் நடைமுறை என்பது ஒரு கொள்கையுடன் அல்லது இன்னொரு கொள்கையுடன் சம்பந்தப்படாமல் இருக்க முடியாது.

ஆகவே எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன, குறிப்பிட்ட சூழநிலைகளின்படி நாம வகுத்த கொள்கையைக் கட்சி உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் நாம் விளக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் நமது கொள்கையின் வழிகாட்டுதலில் இருந்து விலகிவிடுவர், குருட்டுத்தனமாகச் செயல்பட்டு ஒரு தவறான கொள்கையை நடைமுறைப்படுத்துவர்.
(தொழில் வர்த்தகம் சம்பந்தமான கொள்கை பற்றி (27 பிப்ரவரி 1948))



Sunday 24 December 2017

வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு - லெனின்

மார்க்சின் கருத்துப்படி வர்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பே, ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான ஒர் உறுப்பே அரசு; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் வாயிலாய் இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையாக்கி, நிரந்தரமாக்கிடும் 'ஒழுங்கை’ நிறுவுவதே அரசு. ஆனால் குட்டிமுதலாளித்துவ அரசியல்வாதிகளின் அபிப்பிராயத்தில், ஒழுங்கு என்றால் ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே ஒழுங்கு; மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்குவோரைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே மோதலை மட்டுப்படுத்துவது.
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாய கடமை.
...
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் போக்கு மிகவும் முக்கியமான, அடிப்படையான இந்த விவகாரத்திலிருந்து தான் தொடங்கி இரு பிரதான வழிகளில் செல்கிறது:

ஒரு புறத்தில், முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், குறிப்பாய்க் குட்டிமுதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டமும் உள்ளனவோ அங்கு மட்டுமே அரசு இருக்கிறதென்பதை மறுக்க முடியாத வரலாற்று உண்மைகளின் நிர்பந்தம் காரணமாய் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதற்கான உறுப்பே அரசு என்று தோன்றும் வண்ணம் மார்க்சுக்குத் 'திருத்தம்' கூறுகிருர்கள். வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்க முடிந்திருந்தால், மார்க்சின் கருத்துப்படி அரசு உதித்தும் இருக்க முடியாது, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கவும் முடியாது.
...
மறு புறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய ''காவுத்ஸ்கிவாதப்'' புரட்டு இன்னும் நுண்ணயம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்துக்கான ஒர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ ‘தத்துவார்த்தத்தில்’’ இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அது பராமுகமாய் விட்டொழிப்பது அல்லது பூசிமெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆகியதன் விளைவே அரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய் நின்று “மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கி கொள்ளும்” சக்தியாகும் என்றால், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியமில்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும் "அயலானாய் இருக்கும்’' இந்நிலையின் உருவகமானதும் ஆன அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும் இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு. தத்துவார்த்த வழியில் தானகவே வெளிப்படும் இந்த முடிவினை மார்க்ஸ், புரட்சியின் கடமைகளைப் பற்றிய ஸ்தூலமான வரலாற்று வழிப்பட்ட பகுத்தாய்வின் அடிப்படையில் திட்டவட்டமாய் எடுத்துரைத்தார் இந்த முடிவைத்தான் காவுத்ஸ்கி ''மறந்துவிடுகிறார்'', திரித்துப் புரட்டுகிறார்,”
(அரசும் புரட்சியும்)