Sunday 12 July 2015

மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் இரண்டாம் மூன்றாம் தொகுதியை படிப்பது பற்றி- எங்கெல்ஸ்

(எங்கெல்ஸ் எழுதய இந்தக் கடிதம் மார்க்சின் மூலதன நூலின் இரண்டாம் மூன்றாம் பாகத்தை படிப்பது பற்றி பேசுகிறது. எங்கெல்ஸ் இந்த இரண்டு பாகங்களில் உள்ள சில குறிப்பிட்ட அத்தியாயங்களை கவனமாகப் படிக்க வேண்டும், இரண்டாம் நிலையிலானதை மேலோட்டமாக படிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் ஒரு முழுமையான கருத்தைப் பெற்றபின், விடுபட்டதை சேர்த்து முழுமையாகப் படிக்கும் போது எளிதாக இருக்கும் என்கிறார். )

தமிழ் மொழியாக்கம்- மகேஷ் ராமநாதன்
 
(வியன்னாவில் இருக்கும் விக்டர் ஆட்லருக்கு (Victor Adler) எங்கெல்ஸ் எழுதிய கடிதம்)

(சுருக்கம்)
லன்டன், மார்ச் 16, 1895

...நீங்கள் சிறையில் காலத்தைத் தள்ள மூலதனத்தின் 2 மற்றும் 3 [பாகங்களை] ​தேர்ந்தெடுத்தால், நான் தை எளிதாக்க உங்களுக்குச் சில குறிப்புகளைத் தருகிறேன்.

பாகம் 2, பகுதி 1. அத்தியாயம் 1 முழுமையாகவும், அத்தியாயங்கள் 2 மற்றும் 3 மிகவும்மேலோட்டகமாகவும் படிக்கலாம்; அத்தியாயம் நான்கை அதிக கவனமாகப் படிக்கவும் அது ஒருசுருக்கமான தொகுப்பாகும் (summary); 5 மற்றும் 6 எளிமையானவை, அதிலும் குறிப்பாக 6 இரண்டாம் நிலையிலானதைப் (secondary matters) பற்றிப்பேசுகிறது.

பகுதி 2. அத்தியாயங்கள் 7-9 முக்கியமானவை. 10 மற்றும் 11 மிக முக்கியமானவை. 12,13,14ம் அவ்வாறே. மறுபுறத்தில் 15,16 மற்றும் 17​​-யை  முதன்முறைவேகமாகமேலோட்டமாக(skimmed) படித்துவிடுதல்போதுமானது.

பகுதி 3 முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு மற்றும் பணத்தின் முழுமையான சுற்றோட்டம் குறித்து பிசியோகிராட்ஸ்* காலம் துவங்கி இன்று ரை வந்துள்ளவற்றில் மிக மிகச்சிறப்பான முதல் விவரணை. உள்ளடக்கத்தில் மிகச்சிறப்பானது ஆனால் வடிவத்தில் அச்சமூட்டக்கூடிய வகையில் கடினமானது னென்றால் (1) இருவெவ்வேறு முறைகளின்படி இயங்கும் இரு கண்ணோட்டங்கள் ணைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது (2) முதல் கண்ணோட்டம், நீண்ட நாட்களாகதொடர்ச்சியாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட மூளையின் ஒருநோய்வாய்ப்பட்ட நிலையினால் உந்தித்தள்ளப்பட்டு டைந்த முடிவாகும். முதன்முறையாக பாகம் 3ன்வேலையை முடிக்கும்பொழுது, தை நான் டைசியில்வைத்திருக்கவேண்டும். உங்களுடையவேலையிலும் கூட, இது உடனடியாகச்  ​செய்யவேண்டிய மிக அவசியமான ஒன்று அல்ல.

பிறகு மூன்றாவது  பாகம், இதில் முக்கியமானவை: பகுதி 1ல், அத்தியாயங்கள் 1-4; ​பொதுவானதொடர்புகள் (general connections) ​பொறுத்தவரை குறைந்த முக்கியத்துவம் டையவை, மறுபுறத்தில், அத்தியாயங்கள் 5,6,7, ஆகியவற்றிற்கு முதன்முறை அதிகநேரம்செலவழிக்கத்தேவையில்லை.

பகுதி 2. மிக முக்கியமானவை. அத்தியாயங்கள் 8,9,10. 11 மற்றும் 12 ஆகியவற்றைமேலோட்டமாகவும்வேகமாகவும் கடக்கலாம்.

பகுதி 3,  மிக முக்கியமானவை: 13-15 னைத்தும்.

பகுதி 4. தேபோல 16-20 மிக முக்கியமானவையும், தேநேரத்தில் எளிமையாக படிக்கக்கூடியவையும் ஆகும்.

பகுதி 5. அத்தியாயங்கள் 21-27, மிக முக்கியமானவை. அத்தியாயம் 28, அந்தளவிற்கு முக்கியத்துவம் குறைவானது. அத்தியாயம் 29 முக்கியமானது. அத்தியாயங்கள் 30-32 முழுவதும் உங்களுடையநோக்கத்திற்கு முக்கியமற்றவை; 33 மற்றும் 34 ஆகியவை காகிதப் பணம் குறித்துபேசப்படும் கையில் முக்கியமானவை; 35 சர்வதேசசெலாவணி விகிதங்கள் குறித்த கையில் முக்கியமானது, 36 உங்களுக்கு மிகுந்த உற்சாகம் தரக்கூடியதும் எளிமையாகப் படிக்கக் கூடியதுமாகும்.

பகுதி 6. நில வாட​​கை. 37 மற்றும் 38 முக்கியமானவை. சற்றுக்கு​​றைவானவை, ஆனாலும் 39 மற்றும் 40 அவற்றோடு  படிக்கவேண்டியவை. 41-43 ஆகியவற்றை அதிகம் தவிர்த்துவிடலாம் (வாடகை வித்தியாசங்கள் 2. குறிப்பான கைகள்). 44-47 மீண்டும் முக்கியமானவை மற்றும் மிக எளிதாக படிக்கக் கூடியவை.
பகுதி 7. மிக நல்லது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிதறுண்டும் தூக்கமின்மையின் சுவடுகள் நிறைந்தும் உள்ளது.

இப்படியாக, நீங்கள் முக்கியமானவற்றை முழுமையாகவும் குறைவான முக்கியமுள்ளவற்றைமேலோட்டமாகவும் இந்த  குறிப்புகளின் அடிப்ப​​டையில் (பாகம் 2​ன் முக்கிய விசயங்களை முதலில் மீண்டும் படிப்பது சிறந்தது) துவங்குவீர்களானால், நீங்கள் ஒரு முழுமையான கருத்தைபெற்று பின்னால் முதலில் தவிர்த்த பகுதிகளை எளிதாக முடித்துவிடலாம்

No comments:

Post a Comment