(தேர்தலில்
வாக்களிப்பது கூட பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானதாக குறுங்குழுவாதம் கருதுகிறது.
வன்முறையான புரட்சியைத் தவிர வேறு எதையும் தொழிலாளர்களின் நடவடிக்கையாக இவை ஏற்றுக்
கொள்வதில்லை. இவைகளால் ஏற்படுத்திய சிறுபிள்ளைத் தனமான “சமூகப் புரட்சி”க் கலகம் போலீசாரால்
முறியடிக்கப்பட்டது. இவைகள் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான நடவடிக்கைக்குரிய எத்தகைய
களத்தையும் இல்லாமற்செய்து விட்டது. சொந்த குறுங்குழுவாத இயக்கத்தை முழுமையாகச் சீர்குலைத்தது
தான் அவர்களுடைய பெரும் சாதனையாகும் என்கிறார் எங்கெல்ஸ்)
“சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின்
வரலாற்றைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கும் நமது வாசகர்கள், பாரிஸ் கம்யூன் வீழ்ச்சி
அடைந்த உடனே அந்த மாபெரும் சங்கத்தில் வேற்றுமைகள் ஏற்பட்டன, 1872ல் நடைபெற்ற ‘ஹேக்
காங்கிரசில் பகிரங்கமான பிளவுக்கும் அதன் காரணமாகச் சிதறலுக்கும் அவை இட்டுச் சென்றன
என்பதை நினைவுப்படுத்திக் கொள்ள முடியும். ருஷ்யரான பக்கூனினும் அவருடைய ஆதரவாளர்களும் தாங்கள் மிகவும் குறுகிய
சிறுபான்மையினராக இருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமையை – நியாயமான வழிகளினாலோ அல்லது
கீழ்த் தரமான முறைகளினாலோ- கைப்பற்றச் செய்த மோசடிகளே இந்த வேற்றுமைக்குக் காரணமாக
இருந்தன.
தொழிலாளி வர்க்கத்தின்
எல்லா அரசியல் நடவடிக்கையையும் கொள்கை அளவில் எதிர்ப்பதே அவர்களுடைய முக்கியமான போக்கு,
ஆகவே ஒரு தேர்தலில் வாக்களிப்பது கூட அவர்களுடைய பார்வையில் பாட்டாளி வர்க்கத்தின்
நலன்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட துரோக நடவடிக்கையாகும். வன்முறையான புரட்சியைத் தவிர
வேறு எதையும் அவர்கள் நடவடிக்கைச் சாதனமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
..
இத்தாலியில் “சமூகப் புரட்சிகாகச்”
செய்யப்பட்ட சிறுபிள்ளைத் தனமான முயற்சிக்குப் பிறகு -அதில் “அராஜகவாதிகளின்” அறிவோ
அல்லது துணிவோ மெச்சக் கூடிய விதத்தில் வெளிப்படவில்லை- உண்மையான தொழிலாளி வர்க்கச்
சக்தி அதிகமான அளவில் அறிவுக்குப் பொருந்திய நடவடிக் முறைகளைத் தேடத் துவங்கியது. பெல்ஜியத்தில்
தலைவர்கள் பின்பற்றிய தலையிடாமைக் கொள்கையின் விளைவாக- அந்தக் கொள்கை தொழிலாளி வர்க்கத்தின்
உண்மையான நடிவடிக்கைக்குரிய எத்தகைய களத்தையும் இல்லாமற்செய்து விட்டிருந்தது- இயக்கம்
ஸ்தம்பித்து நின்றது.
..
இத்தாலியின் தலையிடாமைக்
கொள்மையைப் பின்பற்றியவர்களில் எஞ்சியிருந்தவர்கள் மனமுறிவுக்கு உந்தப்பட்டவர்களாக
நேபிள்சுக்குப் பக்கத்தில் மற்றொரு கலகத்தை முயற்சி செய்தார்கள். முப்பது அராஜகவாதிகள்
“சமூகப் புரட்சியைப்” பிரகடனம் செய்தார்கள், ஆனால் போலீஸ்காரர்கள அவர்களைச் சீக்கிரமாக
கவனித்துக் கொண்டார்கள். இத்தாலியில் தங்களுடைய சொந்த குறுங்குழுவாத இயக்கத்தை முழுமையாகச்
சீர்குலைத்தது தான் அவர்களுடைய பெரும் சாதனையாகும்.”
(1877ல் ஐரோப்பாவின் தொழிலார்கள்)
(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும்
– பக்கம் 231-233)
No comments:
Post a Comment