பக்கூன்
எழுதிய “அரசும் அராஜகவாதமும்” என்ற புத்தகத்தின் பொழிப்பு என்பதில் இருந்து
ஒரு தீவிரமான சமூகப் புரட்சி பொருளாதார
வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளைப் பொறுத்திருக்கிறது, அவையே அதன் முன்நிபந்தனை.
ஆகவே முதலாளித்துவ உற்பத்தியோடு சேர்ந்து தொழில்துறைப் பாட்டாளி வர்க்கம் குறைந்தபட்சம்
மக்கள் தொகையில் ஒரு முக்கியமான இடத்தை எங்கே வகிக்கிறதோ, அங்கு மட்டுமே புரட்சி சாத்தியம்.
அது வெற்றியடைய ஏதேனும் வாய்ப்பு இருக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பிரெஞ்சு முதலாளி
வர்க்கம் தன்னுடைய புரட்சியின் போது அந்தக் காலத்தில் இருந்த பிரெஞ்சு விவசாயிகளுக்குச்
செய்த அளவுக்காவது அது விவசாயிகளுக்கு உடனடியாக அதற்குரிய மாற்றங்களுடன் செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் ஆட்சி விவசாய ஊழியர்களை அடிமைப்படுத்துவதைக் குறிப்பதாக அனுமானிப்பது
அருமையான கருத்தே. திரு.பக்கூனினுடைய இதயத்தின் ஆழத்திலுள்ள கருத்துக்கள் இங்கேதான்
வெளிப்படுகின்றன. சமூகப் புரட்சியைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது, அதைப்பற்றி
அவருக்குத் தெரிந்த எல்லாமே அரசியல் சொற்றொடர்கள்தான். அவருக்கு அதன் பொருளாதா முன்தேவைகள்
இல்லாதவை. இதுவரை இருந்திருக்கின்ற எல்லாப் பொருளாதார வடிவங்களும் – வளர்ச்சி அடைந்தவை
அல்லது வளர்ச்சி இல்லதவை- ஊழியனை அடிமைப்படுத்துவதை (கூலித் தொழிலாளி அல்லது விவசாயி,
இதரவை ஆகிய எந்த வடிவத்திலும்) உள்ளடக்கி இருந்தபடியால் இவை எல்லாவற்றிலுமே தீவிரமான
புரட்சி சம அளவுக்குச் சாத்தியம் என்று அவர் அனுமானிக்கிறார்.
(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும்
– பக்கம் 213-214)
No comments:
Post a Comment