Friday 17 July 2015

தனிப்பட்ட குழுக்கள், கட்சிகளின் - தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத எதார்த்தமானப் புறநிலைமைகளைப் பற்றி லெனின்

லெனின்:-
"
புரட்சிகரச் சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று அதேபோது புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றும் புரட்சியை எழுச் செய்ய வேண்டும் எனபதும் இல்லை- மார்கசியவாதிக்கு இது மறுக்க முடியாத ஒன்று.

பொதுவாக பேசுமிடத்து, புரட்சிகரச் சூழ்நிலை என்பதற்கான அறிகுறிகள் யாவை? எந்தத் தவறும் இழைக்கவில்லை என்கிற நிச்சயத்துடன் நாம் பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளைக் குறிப்பிடலாம்:-

1)
ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து நடத்திச் செல்வது சாத்தியமற்றதாகுதல், "மேல் வர்க்கங்களிடையே" ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தினுடைய கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி, இதன் விளைவாய் வெடிப்பு உண்டாகி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வெடிப்பின் வழியே பீறிட்டெழுதல். புரட்சி நடைபெறுவதற்கு, பழைய வழியில் வாழ "அடிமட்டத்து வர்க்கங்கள் விரும்பாதது" மட்டும் சாதாரணமாகப் போதாது, பழைய வழியில் வாழ "மேல் வர்க்கங்களுக்கு முடியாமற் போவதும்" அவசியமாகும்.

2)
ஒடுக்கப்படும் வர்க்கங்களுடைய துன்பதுயரமும் வறுமையும் வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் அதிகக் கடுமையாகிவிடுதல்.

3)
மேற்கண்ட காரணங்களின் விளைவாய் மக்கட் பெருந்திரளினரது செயற்பாடு கணிசமாய் அதிகரித்துவிடுதல், மக்கட் பெருந்திரளினர் "சமாதான காலத்தில்" தாம் சூறையாடப்படுவதற்கு முறையிடாமலே இடமளிப்பவர்களாயினும். கொந்தளிப்பான காலங்களில், வரலாறு படைக்க வல்ல சுயேச்சைச் செயலில் இறங்கும்படி நெருக்கடி, நிலைமைகள் யாவற்றாலும் மற்றும் "மேல் வர்க்கங்களாலுங்கூட" இழுத்துவிடப்படுகிறார்கள்.

தனிப்பட்ட கோஷ்டிகள், கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத இந்த எதார்த்த புறநிலை மாறுதல்கள் இல்லாமல், பொதுவாகப் புரட்சி சாத்தியமன்று. இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டுமொத்தமே புரட்சிகரச் சூழ்நிலை எனப்படுவதாகும்."


(
இரண்டாவது அகிலத்தின் தகர்வு) பக்கம் 14-15

No comments:

Post a Comment