(ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய
சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக விரைவில்
இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக்க வேண்டியது பற்றியும், ஒவ்வொரு
வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவது பற்றியும் கூறுகிறார்
லெனின்.)
லெனின்:-
“1)
புரட்சியின் கால வரிசையில் ருஷ்யாவிலுள் எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி வாக்கமும்
பொதுப் போராட்டத்தில் மென்மேலும் ஒன்றுபட்டு வருவதால்,
2)
இந்தப் பொதுப போராட்டம் ருஷ்யாவின் பல்வேறு தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளை முன்பு இருநததைக்
காட்டிலும் நெருக்கமாகக் கொண்டு வருவதால்,
3)
பல நகரங்களிலும், முன்பு இருந்த கூட்டமைப்புக் கமிட்டிகளுக்குப் பதிலாக, அந்தக் குறிப்பிட்ட
வட்டாரத்தில் இருக்கும் எல்லா தேசிய சமூக-ஜனநாயக நிறுவனங்களையும் கொண்ட இணைப்புக் கமிட்டிகள்
ஏற்பட்டு வருவதால்,
4)
தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளில் பெருமபான்மையானவை ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின்
காங்கிரசால் சரியானபடி நிராகரிக்கப்பட்ட கூட்டாட்சிக் கொள்கையை இனி வற்புறுத்தாமல்
இருப்பதால்,
நாங்கள்
பின்கண்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம், காங்கிரஸ் இவற்றுக்கு உடன்பட வேண்டும் என்று
முனமொழிகிறோம்:
1)
ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத்
தொழிலாளர் கட்சியாக விரைவில் இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக்
கொள்ளப்பட வேண்டும்,
2)
ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவதே இந்த
இணைப்பின் அடிப்படையாக இருக்கும்.
3)
ஒவ்வொரு தேசிய இனத்தின் சமூக-ஜனநாயகப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி நலன்களும் தேவைகளும்
நிறைவு செய்வது – அதன் பண்பாட்டு, வாழ்க்கை முறையின் பிரத்யேகமான அம்சங்களுக்கு உரிய
மதிப்பளித்து- உண்மையாக நிறைவேற்றப்படும் என்று கட்சி உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட
தேசிய இனத்தின் சமூக-ஜனநாகவாதிகளின் விசேஷ மாநாடுகளை நடத்தி, கட்சியின் ஸ்தல, பிராந்திய,
மத்திய அமைப்புகளில் தேசியச் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது, எழுத்தாளர்கள்,
புத்தக வெளியீட்டாளர்கள், கிளர்ச்சிப் பிரச்சாரகர்கள், முதலியோரின் விசேஷக் குழுக்களை
அமைப்பது, இதரவற்றின் மூலம் இதை உறுதிப்படுத்த வேண்டும்.”
(ரு.ச.ஜ.தொ. கட்சியின் ஒற்றுமை காங்கிரசுக்கு ஒரு போர்தந்திர
நிலை)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 56-57)
No comments:
Post a Comment