Saturday 18 July 2015

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி - மார்க்ஸ் எங்கெல்ஸ்

(தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடிவடிக்கைகளைப் பற்றி  பேசும் போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் பொருளாதார இயக்கமும் அரசியல் நடவடிக்கையும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்க வேண்டியதை மார்க்சும் எங்கெல்சும் வலியுத்தி போடப்பட்ட சர்வதேசத் தீர்மனமாகும் இது. பொருளாதாரப் போராட்டத்துடன் நின்றுவிடாது அதனை தொழிலாளர் வர்க்க அரசியலுடன் இணைக்க வேண்டும்.)

சர்வதேசத் தொழிலாளர் சங்கங்கத்தின் பிரதிநிதிகளது மாநாட்டுத் தீர்மானங்களில் இருந்து

(1871 செப்டெம்பர் 17 முதல் 23 வரை லண்டனில் நடைவெற்றது)

 “அசல் விதிகளின் தவறான மொழிபெயர்ப்புகள் வெவ்வேறு விளக்கங்களுக்கு இடமளித்து சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும் நடவடிக்கையிலும் சேட்டைகளைச் செய்திருக்கின்றன என்பதை நினைவில் கொண்டு;

தொழிலாளர்கள் தங்கள் விடுதலைக்குச் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் கடிவாளம் போடப்படாத பிற்போக்குவாதம் வன்முறையால் நசுக்கும் பொழுது, வர்க்கங்கள் என்ற பிரிவினையையும் அதிலிருந்து ஏற்படுகின்ற உடைமை வர்க்கததினருடைய அரசியல் ஆதிக்கத்தையும் மிருகத் தனமான பலத்தின் மூலம் தக்கவைப்பதற்கு முயற்சி செய்யும் பொழுது;

உடைமை வர்க்கங்களின் இந்தக் கூட்டுச் சக்திக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் உடைமை வர்க்கங்களினால் ஏற்படுத்தப்பட்ட பழைய கட்சிகள் எல்லாவற்றுக்கும் வேறுபட்டிருக்கின்ற, எதிராக உள்ள ஒர் அரசியல் கட்சியாகத் தன்னை அமைத்துக் கொள்ளாமல் ஒரு வர்க்கம் என்ற முறையில் செயல்பட முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு;

தொழிலாளி வர்க்கம் தன்னுடைய பொருளாதாரப் போராட்டங்களால் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சக்திகளை இணைப்பு அதே சமயத்தில் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் அரசியல் சக்திக்கு எதிரான அதன் போராட்டங்களுக்கு நெம்புகோலாகப் பயன்பட வேண்டும் என்பதாக-

இந்த மாநாடு அகிலத்தின் உறுப்பினர்களுக்குப் பின்வருமாறு வலியுறுத்துகிறது:
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் பொருளாதார இயக்கமும் அரசியல் நடவடிக்கையும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன.”

 (அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 78-79)

No comments:

Post a Comment