Thursday 30 November 2017

கட்சியைத் தூய்மைப்படுத்துவதைப் பற்றி – லெனின்

(புரட்சிக்குப் பின் போல்ஷிவிக் கட்சியில் சேர்ந்த மென்ஷிவிக்களில் நூறில் தொண்ணூற்று ஒன்பது பேரிடமிருந்து கட்சியைத் தூய்மைபடுத்துவது பற்றி லெனின் 1921 ஆம் ஆண்டு எச்சரித்திருக்கிறார். இதனை முழுமையாகக் கண்காணித்து தூய்மைப்படுத்தியிருந்தால் சோவியத் யூனியன் இன்று இந்த நிலைக்கு ஆகியிருக்காது)

கட்சியைத் தூய்மைப்படுத்தும் பணி அநேகமாக கருத்தாழமுள்ள, மிக முக்கியமான பணியாக வளர்ந்து விட்டது.

முக்கியமாக அனுபவத்தையும் கட்சியைச் சாராத தொழிலாளர்களின் குறிப்புக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர்களது குறிப்புக்களின் வழிநின்று கட்சியைச் சாராத வெகுஜனங்களின் பிரதிநிதிகளைக் கணக்கில் கொண்டு கட்சியைத் தூய்மைப்படுத்திய இடங்கள் உண்டு. இதுதான் மிக மதிப்புள்ளதும் மிக முக்கியமானதுமாகும். இவ்வாறக “முகஸ்துதி பார்க்காதுமேலிருந்து கீழாக கட்சியைத் தூய்மைப்படுத்த உண்மையிலேயே நம்மால் முடிந்தால் மெய்யாகவே புரட்சியின் வெற்றி மகத்தானதாயிருக்கும்.

ஏனெனில் புரட்சியின் வெற்றிகள் முன்பிருந்ததைப் போன்றே இப்போது இருக்க இயலாது. போர்க்களத்திலிருந்து பொருளாதாரக் களத்தை நோக்கிய மாறுகாலத்தைப் பொறுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை நோக்கிய மாறுகாலத்தைப் பொறுத்தும், உழைப்பின் உற்பத்தி திறனை உயர்த்தவும் உழைப்புக் கட்டுப்பாட்டை உயர்த்தவும் முதற்கண் தேவைப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்தும் இவை தமது தன்மையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும்.

இந்தக் காலத்தில் புரட்சியின் முக்கிய வெற்றியாக உள் மேம்பாடு, பிரகாசமற்ற, கண்ணில்படாத, உடனடியாகத் தெரியாத உழைப்பு மேம்பாடு, அதன் அமைப்பின், அதன் முடிவுகளின் மேம்பாடு உள்ளது; இந்த மேம்பாடு பாட்டாளி வர்க்கத்தையும் கட்சியையும் சிதைக்கக் கூடிய குட்டிமுதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவ-அராஜகவாதக் கட்டுப்பாடற்ற சூழ்நிலையின் தாக்கத்திற்கு எதிரான போராட்டத்தைக் குறிக்கிறது. இத்தகைய மேம்பாட்டை நடைமுறையாக்க வெகுஜனங்களிடமிருந்து பிரிந்து போகுபவர்களை அகற்றி கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும் (வெகுஜனங்களின் கண்களின் முன் கட்சியை இழிவுபடுத்து பவர்களைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை).

வெகுஜனங்களின் எல்லா குறிப்புக்களுக்கும் நாம் கீழ்படிய வேண்டியதில்லை என்பது உண்மையே, ஏனெனில் வெகுஜனங்கள் கூட சில நேரங்களில்-குறிப்பாக மிக அயர்ச்சியான ஆண்டுகளிலும், அபரிதமான பாரமும் வேதனையும் தரும் அளவிற்கதிகமான களைப்பேற்படும் ஆண்டுகளிலும்-சிறிதும் முற்போக்கில்லாத மனநிலைக்கு உட்படுவார்கள். ஆனால் மக்களை எடை போடுவதில், “கட்சியில் வந்து ஒட்டிக்கொண்ட”, “கட்டளையிடும் மனப்பான்மையுள்”', “அதிகார மனப்பாங் குடைய” நபர்களின் மேலான எதிர்மறையான தொடர்பில் கட்சியைச் சாராத பாட்டாளி வர்க்க வெகுஜனங்களின் குறிப்புக்களும், பல சந்தர்ப்பங்களில் கட்சியைச் சாராத விவசாயி வெகுஜனங்களின் குறிப்புக்களும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. உழைப்பாளி வெகுஜனங்கள், நேர்மையான, தங்களை அர்ப்பணித்த கம்யூனிஸ்டுகளுக்கும் நெற்றி வியர்வையை சிந்தி உணவைப் பெறும் மனிதனுக்கு, எந்தவிதமான சலுகைகளும், எந்தவிதமான ''தலைமையதிகாரிகளுக் கான வழிகளும்'' இல்லாத மனிதனுக்கு அருவருப்பை ஊட்டுபவர்களுக்கும் இடையேயுள்ள மாறுபாட்டை மிகக் கூர்மையாகப் புரிந்து கொள்கின்றர்கள்.

கட்சியைச் சாராத உழைப்பாளிகளின் கருத்துக்களைக் கணக்கில் கொண்டு கட்சியைத் தூய்மைப்படுத்துவது ஒரு மாபெரும் செயலாகும். இது நமக்குக் கருத்தாழமுடைய பயன்களைத் தரும். இது கட்சியை முன்பிருந்ததைவிட பன் மடங்கு அதிக சக்திவாய்ந்த வர்க்க முன்னணிப்படையாக, வர்க்கத்தோடு அதிக உறுதியாக தொடர்பு கொண்டுள்ள முன்னணிப்படையாக, அதை பல்வேறு இன்னல்கள், ஆபத்துகளுக்கிடையே வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் திறமை வாய்ந்ததாக செய்யும்.

கட்சியை முந்தைய மென்ஷிவிக்குகளிடமிருந்து தூய் மைபடுத்த வேண்டியதை, கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஒரு தனிப்பட்ட கடமையாக நான் குறிப்பிடுவேன். எனது கருத்துப்படி 1918ஆம் ஆண்டின் ஆரம்பத்திற்குப் பிறகு கட்சியில் சேர்ந்த மென்ஷிவிக்குகளிலிருந்து, கிட்டத் தட்ட நூற்றில் ஒருவருக்கு மேற்படாத விகிதத்தில்தான் கட்சியில் வைத்திருக்க வேண்டும், அப்போது கூட அவ்வாறு தக்கவைக்கும் ஒவ்வொருவரையும் மூன்று முறை, நான்கு முறை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏன்? ஏனெனில் மென்ஷிவிக்குகள், ஒரு போக்கு என்ற முறையில் 1918க்கும் 1921க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தங்களது இரு குணங்களை நிரூபித்தார்கள்: முதலாவது -தொழிலாளர்கள் மத்தியில் ஒங்கியிருக்கக் கூடிய போக்குடன் கைதேர்ந்த முறையில் பழகி 'ஒட்டிக்' கொள்வது; இரண்டாவது இன்னமும் திறமையாக நம்பிக்கையோடு, உண்மையோடு வெண்படையினருக்குச் சேவை செய்வது, வார்த்தைகளால் அவர்களிடமிருந்து விலகி செயல் மூலம் உண்மையிலேயே அவர்களுக்குச் சேவை செய்வது.

இந்த இரு குணங்களுமே மென்ஷிவிக் வாதத்தின் முழு வரலாற்றில் இருந்து வெளிப்படுகிறது: அக்செல்ரோதின்தொழிலாளர் காங்கிரசையும்காடேட்டுகள் பால் (முடியாட்சியின் பாலும்) மென்ஷிவிக்குகளுக்கு வார்த்தைகளில் உள்ள உறவையும் நடைமுறையில் உள்ள தொடர்பையும், இதைப் போன்ற பல விஷயங்களையும் நினைவு கூர்வது தகும். மென்ஷிவிக்குகள் ருஷ்யாவின் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் 'இழைவது' மக்கியா வெல்லிசத்தினுல்" மட்டுமின்றி, ஏன், இந்த அளவிற்கு மட்டுமின்றி (பூர்ஷ்வா ராஜதந்திர நடவடிக்கைகளின் படி 1903 ஆம் ஆண்டிலிருந்தே மென் ஷிவிக்குகள் இத்துறையில் முதல் தரமான நிபுணர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள்), அவர்களது 'பழக்கத் திறமையாலும்' ஆகும். எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தனது பழக்கத் திறமையால் மாறுபட்டு நிற்கிறார் (ஆனல் எல்லா பழக்கத் திறமையும் சந்தர்ப்ப வாதம் ஆகாது), சந்தர்ப்பவாதிகளான மென்ஷிவிக்குகள், தொழிலாளர்கள் மத்தியில் மேலோங்கியிருக்கும் போக்கிற்கு ''கோட்பாட்டு ரீதியாக'' தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர், பனிக்காலத்தில் முயல் வெந்நிறமாக ஆவது போல் பாதுகாப்பு நிறத்தை மீண்டும் பூசிக்கொள்கின்றனர். மென் ஷிவிக்குகளின் இந்த தனிக்குணத்தைத் தெரிந்து அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதைக் கணக்கில் கொள்வது என்றால்-ருஷ்யாவின் கம்யூனிஸ்டும் கட்சியில் 1918ஆம் ஆண்டிற்குப் பின், அதாவது போல்ஷிவிக்குகளின் வெற்றி முதலில் சாத்தியமானதாயும் பின்னர் சந்தேகத்திற்கிடமற்ற தாயும் ஆனதே அதற்குப் பின்னல், சேர்ந்த மென்ஷிவிக்குகளில் கிட்டத்தட்ட நூறில் தொண்ணூற்று ஒன்பது பேரிடமிருந்து கட்சியைத் தூய்மைபடுத்துவது என்று பொருள்.

கட்சியைப் பித்தலாட்டக்காரர்களிடமிருந்தும் அதிகாரவர்க்க மனப்பாங்கு கொண்ட, நேர்மையற்ற, உறுதியற்ற கம்யூனிஸ்டுகளிடமிருந்தும் ''முகப்பை'' மட்டும் மாற்றி விட்டு உள்ளத்தால் மென்ஷிவிக்குகளாக இருப்பவர்களிட மிருந்தும் தூய்மைபடுத்த வேண்டும்.

செப்டெம்பர் 20, 1921
(ஊழியர் பயிற்சி- தொகுப்பு நூல்)



No comments:

Post a Comment