Monday 12 June 2017

உபரி மதிப்பு - மார்க்ஸ்

"உழைப்ப்ளி உழைப்பு நிகழ்முறையில் ஒரு பகுதியின் போது, தன் உழைப்புச் சக்தியின் மதிப்பை மட்டுமே, அதாவது தன்வாழ்வுச் சாதனங்களின் மதிப்பை மட்டுமே உற்பத்தி கெய்கிறார்.. , இப்போது, அவரது வேலை சமுதாய உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பின் அங்கமே என்பதால், அவர் உள்ளபடியே தான் நுகர்கிற அவசியப் பண்டங்களை தானே நேரடியாக உற்பத்தி  செய்வதில்லை, பதிலுக்கு அவர் அந்த அவசியப் பண்டங்களின் அல்லது அவற்றை வாங்குவதற்கான பணத்தின் மதிப்புக்கச் சமமான மதிப்புடைய குறிப்பிட்ட ஒரு சரக்கை, .. உற்பத்தி செய்கிறார்.
..
படைக்கப்படும் புதிய மதிப்பு முன்னீடு செய்யப்படட மாறும்-மூலத்தை மாற்றீடு செய்வதோடு சரி. இக்காரணத்தால் மூன்று ஷில்லிங் என்ற புதிய மதிப்பின் உற்பத்தி வெறும் மறுவுற்பத்தியின் சாயலைப் பெறுகிறது. ஆகவே, வேலை-நாளில் இந்த மறுவுற்பத்தி நடைபெறும் பகுதியை "அவசிய" உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்பை "அவசிய உழைப்பு" ("necessary" abour) என்றும் அழைக்கிறேன். தொழிலாளியைப் பொறுத்தவரை அவசியம் என்பது எப்படியென்றால், இது அவரது உழைப்பின் குறிப்பிட்ட சமூக வடிவத்தை சார்ந்ததன்று, மூலதனத்தையும் முதலாளிகளின் உலகையும் பொறுத்த வரை அவசியம் என்பது எப்படி என்றால், தொழிலாளி இல்லையேல் முதலாளியும் இல்லை.

தொழிலாளி ஆனவர் உழைப்பு நிகழ்முறையின் இரண்டாவது காலப் பகுதியிலும்-அவரது உழைப்பு அவசிய-உழைப்புபாயிராத அப்பகுதியிலும்-உழைக்கிறார், உழைப்புச் சக்தியைச் செலவிடுகிறார் என்பது மெய்தான், ஆனால், அவரது உழைப்பு முன்போல் அவசிய-உழைப்பாயிராததால் தனக்கென அவர் மதிப்பேதும் படைப்பதில்லை. அவர் உபரி-மதிப்பைப் படைக்கிறார், முதலாளியைப் பொறுத்த வரை, இவ்வுபரி-மதிப்பு ஒன்றுமே இல்லாமல் படைக்கப்படும் படைப்பில் அருமைபெருமைகளை எல்லாம் கொண்டதாகிறது. வேலை-நாளின் இந்தப் பகுதிக்கு உபரி-உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்புக்கு உபரி-உழைப்பு (surplus-labour) என்றும் பெயர் சூட்டுகிறேன்."

(மூலதனம் I பக்கம் 294-296)

No comments:

Post a Comment