“முதலாளித்துவ
வர்க்கத்துக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் முதல் கட்டம் குறுங்குழுவாத
இயக்கத்தைக் குறியடையாளமாகக் கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற
முறையில் செயல்படுவதற்கு இன்னும் போதுமான வளர்ச்சியடையாத நேரத்தில் அது தர்க்கரீதியானதே.
சில சிந்தனையாளர்கள் சமூக முரண்பாடுகளைக் குறைகூறி அவற்றுக்கு அதிசயமான தீர்வுகளைச்
சொல்கிறார்கள், அவற்றை ஏற்றுக் கொள்வதும் போதனை செய்வதும் நடைமுறைக்குக் கொண்டுவருவதும்
பெருந்திரளான தொழிலாளர்களிடம் விடப்படுகிறது. இப்படிப்பட்ட ஆரம்பகர்த்தாக்கள் அமைத்த
குறுங்குழுக்கள் இயல்பாகவே விலகி நிற்பவையாக, அதாவது எல்லா உண்மையான நடவடிக்கை, அரசியல்,
வேலைநிறுத்தங்கள், கூட்டு ஸ்தாபனங்கள் அல்லது சுருக்கமாகச் சொல்லுவதென்றால் எல்லாவிதமான
ஐக்கிய இயக்கத்துக்கும் அந்நியமானவையாக இருந்தன. பாட்டாளி வர்க்கப் பெருந்திரளினர்
எப்பொழுதுமே அவற்றின் பிரச்சாரத்தைப் பற்றி அலட்சியமாக- விரோதமாக- இருந்திருக்கிறார்கள்.
…
இக்குறுங்குழுக்கள்
ஆரம்பத்தில் இயக்கத்துக்கு நெம்புகோல்களைப் போல இருக்கின்றன. ஆனால் இயக்கம் அவற்றை
மீறி வளர்ச்சி அடைந்த உடனே அவை தடையாக மாறிவிடுகின்றன.
…
சோதிடமும்
இரசவாதமும் விஞ்ஞானத்தின் குழுந்தைப் பருவமாக இருப்பதைப் போல இதுவும் பாட்டாளி வர்க்கம்
இயக்கத்தின் குழந்தைப் பருவம் என்று நாம் தொகுத்துரைக்கலாம்”
(அகிலத்தில் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கற்பனைகள்- 1872)
No comments:
Post a Comment