“முதலாளித்துப்
பொருளுற்பத்தியின் தலைய மூன்று உண்மைகள் வருமாறு:
1)
உற்பத்திச் சாதனங்கள் ஒரு சிலர் கையில் குவிக்கப்படுகின்றன. இதனால் இவை நேரடி உழைப்பாளர்களின்
உடைமையாக விளங்கும் நிலை மறைந்து சமூக உற்பத்தி ஆற்றல்களாய் மாறிப் போகின்றன. தொடக்கத்தில்
இவை முதலாளிகளின் தனிச் சொத்தாக இருந்தாலும்கூட இவர்கள் முதலாளித்துவச் சமூகத்தின்
அறங்காவலர்களாகவே இருக்கிறார்கள், ஆனால் இந்த அறங்காவல் பொறுப்பின் வரவுகளை எல்லாம்
தமதாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.
2)
உழைப்பு சமூக உழைப்பாக ஒழுங்கமைக்கப்படுகிறது, கூட்டு-வேலையின் மூலமும், உழைப்புப்
பிரிவினையின் மூலமும், உழைப்பை இயற்கை விஞ்ஞானங்களுடன் ஒன்றுபடுத்துவதன் மூலமும் இது
நடைபெறுகிறது.
இந்த
இரு பொருளிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையானது- முரண்பாடான வடிவங்களில்தான்
என்றாலும்- தனிச் சொத்தையும் தனிப்பட்ட சொந்த உழைப்பையும் ஒழித்துக்கட்டுகிறது.
3)
உலகச் சந்தை உருவாகிறது.
முதலாளித்துவப்
பொருளுற்பத்தி முறையில் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் திறன் பிரமாதமாய்
வளர்ச்சி அடைகிறது, அதே விகிதத்தில் இல்லா விட்டாலும் மூலதன- மதிப்புகளும் (இவற்றின் பொருட் கூறுகள் மட்டுமல்ல) அதிகரிக்கின்றன,
இவை மக்கள்தொகையைக் காட்டிலும் மிகத் துரிதமாய் அதிகரிக்கின்றன. இந்த வளர்ச்சியும்
இந்த அதிகரிப்பும பெருகிச் செல்லும் செல்வத்துடன் ஒப்பிடுகையில் ஓயாமல் குறுகிச் செல்வதான
அடிப்படையுடன் முரண்படுகின்றன (இந்தப் பிரம்மாண்டமான
உற்பத்தித் திறன் அனைத்தும் இந்த அடிப்படைக்கே பணிபுரிகிறது). பெருகிச் செல்லும்
இந்த மூலதனம் எந்நிலைமைகளில் தன் மதிப்பை அதிகமாக்கிக் கொள்கிறதோ அந்நிலைமைகளுடனும்
இவை முரண்படுகின்றன. எனவேதான் நெருக்கடிகள் வெடித்தெழுகின்றன.”
(மூலதனம் தொகுதி 3 -பக்கம்- 352-353)
No comments:
Post a Comment