Tuesday 13 June 2017

பலப்பிரோகத்தால் தனியுடைமை தோற்றுவிக்கப்படவில்லை பொருளாதாரக் காரணங்களின் விளைவாகவே ஏற்பட்டது- எங்கெல்ஸ்

”எங்கெல்லாம் தனியுடைமை மலர்ந்ததோ அங்கெல்லாம் அது உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் மாற்றம் அடைந்த உறவுகளின் விளைவாகவே, அதிகரித்த உற்பத்தி, பரஸ்பர உறவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் நலன்களுக்காகவே அதாவது பொருளாதாரக் காரணங்களின் விளைவாகவே ஏற்பட்டது. இதில் பலப்பிரயோகம் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. இன்னொரு நபரின் உடைமையை ஒரு கொள்ளைக்காரன் பறித்துக் கொள்ள வேண்டுமனால் தனியுடைமை அமைப்பு ஏற்கெனவே நிலவியிருந்திருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு. எனவே பலப்பிரயோகம் உடைமையை மாற்ற முடியுமே தவிர தனியுடைமை என்ற முறையில் எதையும் படைக்க முடியாது.

அதன் ஆக நவீன வடிவமான கூலி உழைப்பில்- “மனிதனைக் கீழடக்கி அவன் அடிமை வேலை புரியுமாறு செய்வதை”  விளக்குவதற்கு நாம் பலப்பிரயோகத்தையோ, பலப்பிரயோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட் உடைமையையோ பயன்படுத்த முடியாது. பழங்கால சமூகங்கள் குலைவுற்றதில் அதாவது தனியுடைமையின் நேடியான அல்லது நேரடியல்லாத பொதுவான  விரிவில் உழைப்பின் உற்பத்திப் பொருள்கள் பண்டங்களாக மாற்றப்பட்டதும், அவை உற்பத்தி செய்வோரின் நுகர்வுக்கு அன்றி மாறாகப் பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்படுவதும் வகித்த பங்கு குறித்து நாம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.
வேறு சொள்களில் கூறினால் நாம் களவு, பலப்பிரயோகம் மற்றும் ஏமாற்றுதலின் எல்லா சாத்தியக் கூறுகளையும் விலக்கிவைத்தால்கூட, எல்லாத் தனியுடைமையும் ஆரம்பத்தில் உடைமையாளரின் சொந்த உழைப்பையே அடிப்படையாக்கியதாக இருந்தது என்றும், பிந்திய நிகழ்ச்சிப் போக்கு முழுவதிலும் சமமதிப்புகள் சமமதிப்புகளுடன் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்பட்டன என்று நாம் ஒரு நிலையை மேற்கொண்டபோதிலும் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் முன்னேற்றமான பரிணாமம் இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறை, எண்ணிக்கையில் சிறிய வர்க்கம் தன் கரங்களில் உற்பத்தி சாதனங்கள் மற்றும் பிழைப்புச் சாதனங்களை ஏகபோகமாக வைத்திருப்பதற்கும் அளப்பரிய பெரும்பான்மையாக அமைந்த மற்ற வர்க்கமற்ற உடைமையற்ற பாட்டாளிகளின் இழிவுக்கும், சூதாட்ட ரீதியான உற்பத்தி திடீர் உயர்வுள்ள வாணிப நெருக்கடிகள் காலத்திற்குக் காலம் மாறிமாறி வருவதற்கும், உற்பத்தியில் இன்று நிலவும் அராஜகத்துக்கும் தவிர்கக முடியாத வகையில் நம்மைக் கொண்டு வருகிறது.


இந்த நிகழ்ச்சிப் போக்கு முழுவதையும் முற்றிலும் பொருளாதாரக் காரணங்களால் விளக்கிவிட முடியும், எந்த ஒரு கட்டத்திலும், கொள்ளையடித்தல், பலப்பிரயோகம், எந்த வகையிலுமான அரசு அல்லது அரசியல் தலையீடு அவசியமில்லை. “பலப்பிரயோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட்ட உடைமை” என்பது இங்கும் நிலைமைகளின் உண்மையான போக்கைப் புரிந்து கொள்ள முடியாததை மூடிமறைக்க உத்தேசிக்கும் ஒரு தற்பெருமையாளரின் சொல்லடுக்கே அன்றி வேறெதுவும் அல்ல.
சுருங்கக் கூறின், எப்பொழுதும் எல்லா இடங்களிலும் பொருளாதார நிலைமைகளும் பொரளாதார சாதனங்களும்தான் “பலப்பிரயோகம்” வெற்றி ஈட்ட உதவுகின்றன, இவை இல்லாவிடில் பலப்பிரயோகம் பலப்பிரயோகமாக இருக்காது.”

(டூரிங்க்குக் மறுப்பு)

No comments:

Post a Comment