Sunday 28 May 2017

சமூகமும் மக்கள் செயல்பாடும் பற்றி மார்க்ஸ்

(மக்கள் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பதை மிகவும் எளிமையாகப் பலர் புரிந்துகொள்கின்றனர். ஆனால் மார்க்ஸ் அவ்வாறு கூறவில்லை. அவர் தமது கருத்தை தெளிவாகவே முன்வைத்துள்ளார்)

என்ன வடிவத்தில் இருந்தாலும் சரியே, சமூகம் என்பது என்ன? மக்களின் பரஸ்வரச் செய்கையின் விளைபொருள். மனிதர்கள் தாங்களாகவே எதாவதொரு சமூகத்தைத் தேர்ந்து கொள்ளச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்களா? நிச்சயமாக  இல்லை.

மனிதர்களின் உற்பத்திச் சக்திகளில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அனுமானித்துக கொள்ளுங்கள், வர்த்தகம் நுகர்வு பற்றிய ஒரு குறிப்பிட்ட வடிவம் உங்களுக்குக் கிடைக்கும். உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் நுகர்விலும் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களை அனுமானித்துக கொள்ளுங்கள், அவற்றிற்குப் பொருத்தமான ஒரு சமூக அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பும் படிப்பிரிவுகளின் அல்லது வர்க்கங்களின் அமைப்பும் – சுருங்கச் சொன்னால், ஒரு பொருத்தமான குடியுரிமைச் சமூகம்- உங்களுக்குக் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட குடியுரிமைச் சமூகத்தை அனுமானித்துக கொள்ளுங்கள். அந்தக் குடியுரிமைச் சமூகத்தின் வெறும் அதிகாரபூர்வமான வெளிபாடாக இருக்கிற குறிப்பிட்ட அரசியல் அமைப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

இதைத் திரு.புரூதோன் என்றைக்கும் புரிந்து கொள்ளமாட்டார் ஏனெனில் அரசு எனும் நிலையில் நின்று கொண்டு சமூகத்துக்கு – அதாவது, சமூகத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான பொழிப்பின் நிலையில் நின்றுகொண்டு அதிகாரபூர்வமான சமூகத்துக்கு- வேண்டுகோள் விடுப்பதில் தாம் பெரிதாக ஏதோ செய்வதாக அவர் நினைத்துக் கொள்கிறார்.

தமது வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்திரம் உள்ளவர்களாயில்லை என்று மேற்கொண்டு சொல்லத் தேவையில்லை. ஏனெனில் ஒவ்வொரு உற்பத்திச் சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும். முந்தைய நடவடிக்கையின் விளைபொருளேயாகும். எனவே உற்பத்திச் சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும், ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைகளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்களுக்கு முன்பே- அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு- இருந்துவரும் சமூக வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னிட்டு வரும் ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையால் பெறப்பட்ட உற்பத்திச் சக்திகளைக் கைவரப் பெறுகிறது, அது புதிய உற்பத்திக்குரிய மூலப்பொருளாக அதற்குப் பயன்படுகிறது.

இந்த எளிய உண்மையின் காரணமாக மனித வரலாற்றிலே ஒரு கூட்டுப்பொருத்தம் உண்டாகிறது, மனித குலத்தின் வரலாறு உருப்பெறுகிறது, மனிதனின் உற்பத்திச் சக்திகளும் எனவே அவனுடைய சமூக உறவுகளும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வளர்க்கப் பெற்றுள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு வரலாறானது மனிதகுல வரலாறாக அமைகிறது. எனவே, மனிதர்களின் சமூக வரலாறு எனப்பட்டது எப்போதும் அவர்களின் தனிநபர் வளர்ச்சியின்- அதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் இராவிட்டாலும் சரி- வரலாறு தவிர வேறில்லை. அவர்களின் பொருளயத உறவுகளே அவர்களின்உறவுகளனைக்கும் அடிப்படை. இந்தப் பொருளாதார உறவுகள் அவசியகரமான வடிவங்கள் மட்டுமே, அவற்றில் அவர்களுடைய பொருளாயத மற்றும் தனிநபர் வகைப்பட்ட செயல்கள் நடக்கின்றன.
(மார்க்ஸ், பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய கடிதம் 1846)

No comments:

Post a Comment