“… என்னைப்
பொருத்தவரையிலும், நவீன சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ அல்லது அவர்களுக்கிடையே
நடைபெறுகின்ற போராட்டத்தையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேர்ந்ததல்ல. எனக்கு வெகு
காலத்துககு முன்பே முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின்
வரலாற்றுரீதியான வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இந்த
வர்க்கங்களின் பொருளாதார உள்ளமைப்பையும் வர்ணித்திருக்கிறார்கள்.
நான் புதியதாக என்ன செய்தேன் என்றால், அது கீழ்க் கண்டவற்றை
விளக்கியது தான்:
1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியின் வளர்ச்சியின்
குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக தொழிலாளி வர்க்க
சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்.
3) இந்த சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும்,
வர்க்கபேதமற்ற சமூகத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது.
வர்க்கப் போராட்டத்தை மட்டுமல்லாமல் வர்க்கங்கள் இருப்தைக் கூட
மறுக்கின்ற ஹைன்ஸென் போன்ற அறிவில்லாத முட்டாள்கள் – அவர்கள் என்னதான் இரத்தம்
சுண்டக் கூக்குரல் போட்டாலும், தங்களுக்கு மனிதாபினாத் தோற்றத்தைக் கொடுத்துக்
கொண்ட போதிலும்- முதலாளித்துவ வர்க்கம் ஆட்சி செய்கின்ற சமூக நிலைமைகளை வரலாற்றின் கடைசிப் பொருளாக, அடையக்
கூடிய உச்சநிலை ஆகக் கருதுகிறார்கள் என்பதையும் அவர்கள் முதலாளிகளின் ஊழியர்கள்
என்பதை மட்டுமே நிரூபிக்கிறார்கள். முதலாளித்துவ ஆட்சியின் கட்டாயமான தற்காலிகத்
தன்மையையும் அதன் அளவையும் இந்த முட்டாள்கள் எவ்வளவு குறைவாகப் புரிந்து
கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுடைய குற்றேவல் அதிக அருவருபபுடையதாக
இருக்கிறது".
(யோசிஃப் வெய்டமையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து – மார்ச் 5, 1852)
No comments:
Post a Comment