Friday 26 May 2017

தொழிற்சங்கப் போராட்டம் ஒர் அரசியல் போராட்டமே. அரசியல் போராட்டம் வர்க்கப் போராட்டமே. வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே புரட்சி – மார்க்ஸ்

(தத்துவத்தின் வறுமை- 1847)

தொழிலாளர்கள் தங்கள் ஒன்றுபடுத்துவதற்காக எடுக்கும் முதன்முதலான முயற்சிகள் எப்போதும் சங்கங்கள் வடிவத்தில் நடக்கின்றன.

ஒருவரையொருவருவர் முன்பின்னறியாதவர்களான திரளான மக்களைப் பெருமளவான தொழில்துறை ஒரே இடத்தில் சேர்த்துக் குவிக்கிறது. போட்டி அவர்களின் நலன்களைப் பிரிக்கிறது. எனினும் தமது எஜமானனுக்கு எதிராக அவர்களுக்குப் பொதுவான நலனாக விளங்கும் கூலியைப் பாதுகாத்துக் கொள்வது அவர்களைச் சங்கம் எனும் ஒரு பொதுவான எதிர்ப்புச் சிந்தனையிலே ஒன்றுபடுத்துகிறது. ஆக, சங்கத்துக்கு எப்போதும் ஓர் இரட்டை நோக்கு உண்டு-தொழிலாளர்களிடையேயுள்ள போட்டியை நிறுத்துவது, அதன் வழியே அவர்கள் முதலாளியை எதிர்த்துப் பொதுவான போட்டியை நடத்திச் செல்லச் செய்வது, என்று. கூலியைப் பாதுகாப்பது மட்டுமே எதிர்ப்பின் முதல் நோக்காக இருந்தது என்றால், அடக்கியொடுக்கும் நோக்குடன்  முதலாளிகள் தம் முறைக்கு ஒன்றுபடுகிற பொழுது, முதலில் தனித்தனியே இருந்த சங்கங்கள் குழுக்களாக அமைத்துக் கொள்கின்றன. மேலும் கூலியைப் பாதுகாப்பதைக் காட்டிலும் எப்போதும் ஒன்று பட்டிருக்கும் மூலதனத்தை எதிர்ப்பதில் சங்கத்தைப் பாதுகாப்பது அவர்களது அதிக அவசியமாகிவிடுகிறது. கூலிக்கா மட்டுமே இந்தச் சங்கங்கள் நிறுவப்பட்டதாகக் கருதிக் கொள்ளும் ஆங்கிலேயப் பொருளாதாரவாதிகள் தொழிலாளர்கள் தமது சங்கத்துக்காகக் கூலியில் கணிசமான பகுதியைத் தியாகம் செய்கிறதைப் பார்த்துத் திகைத்துவிடும். அளவுக்கு இது ஒரு உள்நாட்டுப் போர் ஆகும் – வரவிருக்கும் சண்டைக்காக எல்லாக் கூறுகளும் ஒன்றுபட்டு வளர்கின்றன. இந்த முனையை எட்டியவுடன் சங்கம் ஓர் அரசியல் தன்மையைப் பெறுகிறது.
வாக்கங்களின் பகைமை மீது நிறுவப்பட்ட ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பது உயிர்நிலையான நிபந்தனையாகும். எனபே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை என்பது அவசியமான முறையிலே ஒரு புதிய சமூகத்தைப் படைப்பதை உட்கிடையாகக் கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கு அவசியத் தேவை, ஏற்கெனவே பெறப்பட்டிருக்கும் உற்பத்திச் சக்திகளும் இருந்து வரும் சமூக உறவுகளும் மேலும் அக்கம் பக்கமாக இருந்துவர முடியாதவையாக ஆகவேண்டும். உற்பத்திக் கருவிகனைத்திலுமே ஆகமிகப் பெரிதான உற்பத்திச் சக்தி புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமாகும். வர்க்கம் என்கிற வகையில் புரட்சிகரமான நபர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்துதல் பழைய சமூகத்திலுள்ள வளர்க்கப்படக்கூடிய உற்பத்திச் சக்திகள் அனைத்தும் இருப்பதை அனுமானிக்கிறது.

இதற்குப் பொருள் பழைய சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு புதிய வர்க்கத்தின் ஆதிக்கம் ஏற்பட்டு அது ஒரு புதிய அரசியல் அதிகாரத்தில் போய் முடியும் எனபதா? இல்லை.

எல்லாப் படிப்பிரிவுகளையும் சிறப்புரிமைக் குழுக்களையும் ஒழித்துவிடுவது மூன்றாவது படிப்பிரிவின், முதலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு நிபந்தனையாக இருந்தது போலவே, எல்லா வர்க்கங்களையும் ஒழித்துவிடுவது தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு நிபன்தனையாகும்.

தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே முதலாளித்துவச் சமூகத்துக்குப் பதிலாக எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை  அமைக்கும், முழு அர்த்தத்தில் அரசியல் அதிகாரம் இனிமேல் இராது, ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவ சமூகத்திலுள்ள பகைமையின் அதிகார பூர்வமான வெளிப்பாடாகும்.

இதற்கிடையே தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள பகைமை வர்க்கத்துககு எதிராக வர்க்கம் நடத்தும் ஒரு போராட்டாகும், அதன் உச்சநிலை வெளிப்பாடு ஒரு முழுமையான புரட்சியே. உண்மையிலே பார்த்தால், வர்க்கங்களின் எதிர்ப்பின் மீது நிறுபப்பட்ட ஒரு சமூகம் அதன் இறுதி விளைவாக மூர்க்கத்தனமான முரண்பாட்டிலே, உடலோடு உடல் மோதிக் கொள்ளும் அதிர்ச்சியிலே, போய் முடிவதில் வியப்புண்டா?

சமூக இயக்கம் அரசியல் இயக்கத்தை விலக்கி வைக்கிறது என்று சொல்லாதீர்கள். ஒரு அரசியல் இயக்கம் அதே நேரத்தில் சமூக இயக்கமாக அல்லாமல் என்றைக்கும் இருந்ததில்லை.

வர்க்கங்களும் வர்க்கப் பகைமைகளும் மேற்கொண்டு இல்லாதிருக்கும் ஒர் அமைப்பு முறையிலேதான் சமூகப் பரிணாமங்கள் அரசியல் புரட்சியாக இருப்பது நின்றுவிடும். அதுவரை, சமூகத்தின் ஒவ்வொரு பொதுவான மாற்றத்தின் தருவாயிலும் சமூக விஞ்ஞானத்தின் இறுதி மொழி இவ்வாறுதான் எப்போதும் இருந்து வரும்:

“சண்டை அல்லது சாவு, இரத்தஞ்சிந்தும் போராட்டம் அல்லது அழிவு. பிரச்சினை இப்படித்தான் ஈவிரக்கமின்றி கோராப்படுகிறது.”

(ழார்ழ் சாண்டு)

No comments:

Post a Comment