“ஜனநாயகப்
புரட்சி முழு வெற்றி பெறும் போதுதான் முரணுள்ள முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில்
பாட்டாளி வர்க்கத்தின் கைகள் கட்டுண்டு போகாமல் விடுபட்டு இருக்கும்; அப்போது மட்டுமே
அது முதலாளித்துவ ஜனநாயகத்தில் ''கலந்து கரைந்து'' போகாமல் புரட்சி முழுவதின் மீதும்
தன்னுடைய பாட்டாளி வர்க்க முத்திரையை, சொல்லப்போனால் பாட்டாளி வர்க்க - விவசாயி மக்களின்
முத்திரையைப் பதியவைக்கும்.
சுருங்கச்
சொன்னால், முரணுள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின்
கைகள் கட்டுண்டு போவதைத் தவிர்க்க வேண்டுமானால் விவசாயிமக்களுக்குப் புரட்சி உணர்வூட்டி
எழுப்புவதற்கும், அதன் தாக்குதலுக்கு வழிகாட்டிச் செலுத்துவதற்கும், அதன் வழியே முரணற்ற
பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் போதிய வர்க்க உணர்வும் வலிமையும்
பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்க வேண்டும்.
முரணுள்ள
முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் போராட் டத்தில் நம் கைகள் கட்டுண்டு போகும் அபாயத்தைப்
பற்றிய பிரச்சினை யிலுள்ள் விவகாரம் இதுவே.”
(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின்
இரண்டு போர்த்தந்திரங்கள்- பக் 254-256)
No comments:
Post a Comment