Monday 8 July 2019

02)கருத்துகளுக்கும் உணர்வுக்கும் பொருளே மூலாதாரம் என்பது பற்றி ஸ்டாலின்:-


பொருள், இயற்கை, வாழ்நிலை என்பவைதான் புறநிலை உண்மை, நமது உணர்வுக்கு அப்பால்நமது உணர்வைச் சார்ந்திராமல், ஆதாரமாகக் கொண்டிராமல், சுயேட்சையாக - இயங்குபவை அவை. பொருள்தான் முதல். ஏனெனில், அதுதான் புலன் உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் உணர்வுக்கும் மூலாதாரம்; தோற்றுவாய். உணர்வு என்பது இரண்டாம் பட்சமானது; மூலத்திலிருந்து பெறப்படுவது.

ஏனெனில், பொருளின் பிரதிபலிப்பே உணர்வு, வாழ்வின் பிரதிபலிப்பே உணர்வு என்று மார்க்சிய பொருள்முதல்வாதத் தத்துவம் கருதுகிறது. மேலும் பருப்பொருளின் விளைவாகச் சிந்தனை வளர்ச்சியுற்று, மிகவும் உயர்ந்த உன்னதமான நிலையை எட்டும் போது அது மூளை ஆகிறது . சிந்தனை என்பதே பொருளின் படைப்பு. மூளைதான் சிந்தனையின் உறுப்பு. எனவே, பொருளிலிருந்து சிந்தனையைப் பிரிக்க முடி யாது. அப்படிப் பிரிப்பது மிகப் பெரிய தவறு செய்வதாகும் - என்று மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம் கருதுகிறது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் பக்கம்-17-18)

No comments:

Post a Comment