Monday, 8 July 2019

03)சமுதாயத்தின் வளர்ச்சி விதிகள் பற்றி ஸ்டாலின் கூறுகிறார்


இயற்கைத் தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாயுள்ளதும் தான் இயற்கையின் வளர்ச்சி விதிகள் என்று ஏற்பட்டால், அப்பொழுது சமுதாய வாழ்வின் தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ளதும்தான், அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சி விதிகள் என்று ஆகும்; ஏதோ தற்செயலாக அவை ஏற்பட்டவை அல்ல என்பதாகும்.

எனவே, சமூக வாழ்வும், சமுதாய வரலாறும் ''தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் ஒரு குவியல்'' என்கிற கருத்துத் தவறாகிறது. ஒழுங்கான விதிகளின்படி நடக்கும் சமுதாயத்தின் வளர்ச்சி பற்றியதே வரலாறு என்றும் அது ஆகிறது. மேலும், சமுதாய வரலாற்றின் ஆராய்ச்சி ஒரு அறிவியலாக மாறுகிறது.

எனவே, பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் எவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும்? 'தலைசிறந்த மனிதர்களின் நல்லாசிகளை ஆதாரமாகக் கொண்டல்ல - ''பகுத் தறிவின்'' தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டல்ல - “உலகளாவிய அறநெறிகளைக் கொண்டல்ல. மாறாக, சமுதாய வளர்ச்சி விதிகளை அடிப்படையாகக் கொண்டு, அந்த விதிகளைப் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் இருக்க வேண்டும்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் - பக்கம் 22)

02)கருத்துகளுக்கும் உணர்வுக்கும் பொருளே மூலாதாரம் என்பது பற்றி ஸ்டாலின்:-


பொருள், இயற்கை, வாழ்நிலை என்பவைதான் புறநிலை உண்மை, நமது உணர்வுக்கு அப்பால்நமது உணர்வைச் சார்ந்திராமல், ஆதாரமாகக் கொண்டிராமல், சுயேட்சையாக - இயங்குபவை அவை. பொருள்தான் முதல். ஏனெனில், அதுதான் புலன் உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் உணர்வுக்கும் மூலாதாரம்; தோற்றுவாய். உணர்வு என்பது இரண்டாம் பட்சமானது; மூலத்திலிருந்து பெறப்படுவது.

ஏனெனில், பொருளின் பிரதிபலிப்பே உணர்வு, வாழ்வின் பிரதிபலிப்பே உணர்வு என்று மார்க்சிய பொருள்முதல்வாதத் தத்துவம் கருதுகிறது. மேலும் பருப்பொருளின் விளைவாகச் சிந்தனை வளர்ச்சியுற்று, மிகவும் உயர்ந்த உன்னதமான நிலையை எட்டும் போது அது மூளை ஆகிறது . சிந்தனை என்பதே பொருளின் படைப்பு. மூளைதான் சிந்தனையின் உறுப்பு. எனவே, பொருளிலிருந்து சிந்தனையைப் பிரிக்க முடி யாது. அப்படிப் பிரிப்பது மிகப் பெரிய தவறு செய்வதாகும் - என்று மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம் கருதுகிறது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் பக்கம்-17-18)

01)இயற்கையில் காணப்படும் ஒவ்வொரு பொருளும் மற்றொன்றுடன் சார்ந்து இருப்பதின் இயக்கவியல் பற்றி ஸ்டாலின்:-


இயற்கைப்பொருள்களும் அவற்றின் தோற்றங்களும் ஒன்றோடொன்று உள்ளார்ந்த முறையில் பிணைக்கப்பட்டவை என்றும், ஒரு முழுத்தன்மை உடையவை என்றும், ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது என்றும் ஒன்றின் தன்மையை மற்றொன்றின் தன்மை நிர்ணயிக்கும்படி உள்ளதென்றும் இயக்கவியல் தத்துவம் கருதுகிறது.

எனவே, இயற்கையின் தோற்றம் எதையும் அதைச் சூழ்ந்துள்ள பிற தோற்றங்களிலிருந்து பிரித்துத் தனியாக ஆராய்ந்தால், அதைப் புரிந்து கொள்ளவே முடியாது என இயக்கவியல் தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒரு தோற்றத்தைச் சுற்றியுள்ள மற்ற இயற்கைத் தோற்றங்களிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்த்தால், அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தின் தன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது; மேலும், அப்படிப் பார்த்தால் அந்தத் தோற்றமே பொருளற்றதாகக் காணப்படும். வேறு விதமாக விளக்குவோம். ஒரு குறிப்பிட்ட இயற்கைத் தோற்றம் உள்ளது ; அதைச் சுற்றி வேறு பல தோற்றங்கள் உள்ளன; இந்தச் சுற்றுப்புறத் தோற்றங்களால் பாதிக்கப்பட்டு, அது குறிப்பிட்ட தோற்றமாகக் காட்சியளிக்கிறது. எனவே அந்தக் குறிப்பிட்ட தோற்றத்திற்கும் சுற்றுப்புறத் தோற்றங்களுக்கும் இடையே உள்ள இணைப்புஉறவு பிரிக்க முடியாததாகும். இந்த உறவோடு அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தைப் பரிசீலனை செய்தால்தான், அதைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்பக்கம்-6)


இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- ஸ்டாலின்













Thursday, 20 June 2019

கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டம் பற்றி - லெனின்


மார்க்ஸ் தொடர்ந்து கூறுகிறார்:
''... கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டத்தில், தனி நபரை உழைப்புப் பிரிவினைக்குக் கீழ்ப்படுத்தி அடிமைத் தளையிடுவதும் அதனுடன் கூட மூளை உழைப் புக்கும் உடலுழைப்புக்கும் இடையிலான எதிர்நிலையும் மறைந்த பின், உழைப்பானது பிழைப்புக்கான சாதன மாய் மட்டுமின்றி வாழ்வின் முதற்பெரும் தேவையுமாகியபின், தனி நபருடைய சர்வாம்ச வளர்ச்சியோடு கூட உற்பத்தி சக்திகளும் அதிகரித்துவிட்டபின், பொதுச் சமுதாயச் செல்வத்தின் அருவிகள் எல்லாம் மேலும் அபரிமிதமாய்ப் பெருக்கெடுத்து ஓடுகையில்-- அப்பொ ழுது தான் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு முழுமையாகக் கடக்கப்பட்டு, சமுதாயம் தன் பதாகை களில் 'ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்ற லுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவை களுக்கு ஏற்ப ' என்பதாய்ப் பொறித்துக் கொள்ளும்!''

''சுதந்திரம்'', ''அரசு' இவ்விரு சொற்களையும் இணைத்து முடி போடுவதிலுள்ள அபத்தத்தை எள்ளி நகையாடும் எங் கெல்சின் உரைகள் எவ்வளவு சரியானவை என்பதை இப் பொழுது தான் நம்மால் முழு அளவுக்கு உணர முடிகிறது. அரசு இருக்கும் வரை சுதந்திரம் இல்லை. சுதந்திரம் வந்த தும் அரசு இல்லாமற் போய்விடும்.

அரசு பூரணமாய் உலர்ந்து உதிர்வதற்கு அடிப்படை யாய் அமைவது கம்யூனிசத்தின் மிக உயர்ந்த வளர்ச்சிக் கட்டமாகும். இக்கட்டத்தில் மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்குமுள்ள எதிர்நிலை மறைந்துவிடுகிறது; தற்காலச் சமுதாய சமத்துவமின்மைக்குத் தலைமையான ஆதாரங்களில் ஒன்று இவ்வாறு இக்கட்டத்தில் மறைந்துவிடுகிறது. உற் பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமையாய் மாற்றுவதால் மட்டும், முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்வதால் மட்டும் உடனடியாக எவ்வகையிலும் இந்தத் தலைமையான ஆதாரத்தை அகற்றிவிட முடியாது.

முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய் வதானது உற்பத்தி சக்திகள் பிரம்மாண்டமாய் வளர்ச்சியுறு வதைச் சாத்தியமாக்குகிறது. முதலாளித்துவம் ஏற்கெனவே எவ்வளவு நம்பமுடியாத அளவுக்கு இந்த வளர்ச்சியைத் தடுத்து இழுக்கிறதென்பதைக் காணும்போது, ஏற்கெனவே கை வரப்பெற்றுள்ள தொழில் நுட்ப நிலையின் அடிப்படையில் எவ்வளவு அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமென் பதைக் காணும்போது, முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்வதன் விளைவாய் மனிதச் சமுதாயத்தின் உற்பத்தி சக்திகள் தவிர்க்கமுடியாதவாறு பிரம்மாண்டமாய் வளர்ச்சியடையுமென நாம் திட நம்பிக்கையோடு கூற முடியும். ஆனால் இந்த வளர்ச்சி எவ்வளவு துரிதமாய் நடந்தே றும் என்று, உழைப்புப் பிரிவினையிலிருந்து முறித்துக் கொண்டு வருவதும், மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்குமுள்ள எதிர் நிலை ஒழிக்கப்படுவதும், உழைப்பானது வாழ்க்கை யின் முதற் பெரும் தேவையாவதும் எவ்வளவு சடுதியில் நடைபெறும் என்று நாம் அறியோம் , அறியவும் முடியாது.

ஆகவே தான் நாம் தவிர்க்க முடியாதபடி அரசு உலர்ந்து உதிர்வது குறித்து மட்டும் பேசி, இந்த நிகழ்ச்சிப்போக்கு நீடித்து நடைபெறும் தன்மை கொண்டதாய் இருப்பதையும் கம்யூனிசத்தின் உயர் கட்டம் வளர்ச்சியுறுவதன் வேகத் தைச் சார்ந்ததாய் இருப்பதையும் வலியுறுத்திவிட்டு, அரசு உலர்ந்து உதிரத் தேவையான காலத்தையோ அதன் ஸ்தூல மான வடிவங்களையோ பற்றிய பிரச்சினைக்கு விடை கூறாது விட்டு வைக்க உரிமை பெற்றிருக்கிறோம். ஏனெனில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க விவரப்பொருள் இல்லை.

'ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைகளுக்கு ஏற்ப என்னும் விதியைச் சமுதாயம் அனுசரிக்கையில் தான், அதா வது மக்கள் தாமே மனமுவந்து தமது ஆற்றலுக்கு ஏற்ப வேலை செய்யும்படி சமுதாய ஒட்டுறவுக்கான அடிப்படை நியதிகளைப் பற்றியொழுக அந்த அளவுக்குப் பழகிக்கொண்டு விடும்போதும், அவர்களுடைய உழைப்பு அந்த அளவுக்குப் பொருளுற்பத்தி ஆற்றல் மிக்கதாகிவிடும் போதும் தான் அரசு பூரணமாய் உலர்ந்து உதிர முடியும். வேறொருவரைவிட நாம் அரை மணி நேரம் அதிகம் வேலை செய்யவில்லையா, வெறொருவரைவிட நாம் குறைவாய் சம்பளம் பெறவில்லையா என்று ஷைலாக்கின்5 கல்நெஞ்சுடன் கணக்கிட்டுப் பார்க்கும் படி நிர்ப்பந்தம் செய்யும் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு" அப்பொழுது கடக்கப்பட்டுவிடும். அப் பொழுது சமுதாயம் உற்பத்திப் பொருட்களை வினியோகிக் கையில் அவரவரும் பெற வேண்டிய அளவை ஒழுங்கு செய்ய வேண்டிய தேவை இருக்காது; ஒவ்வொருவரும் ''தமது தேவைகளுக்கு ஏற்பத் தடங்கலின்றி சுதந்திர மாய் எடுத்துக் கொள்வார்.

முதலாளித்துவக் கண்ணோட்டத்திலிருந்து, இத்தகைய ஒரு சமுதாய அமைப்பு ''வெறும் ஆகாயக் கோட்டையே" என்று அறிவிப்பதும், அந்தந்தக் குடிமகனின் உழைப்புமீது எந்தக் கண்காணிப்புமின்றி அவரவரும் சமுதாயத்திடமிருந்து வேண்டிய அளவு மிட்டாயும் கார்களும் பியானோக்களும் பிறவும் பெறும் உரிமையை ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்வதாய் வாக்களிப்பதாக சோஷலிஸ்டுகளை நையாண்டி செய்வதும் சுலபமே. இன்றுங்கூட மிகப் பெருவாரியான முதலாளித்துவ விஞ்ஞானிகள்'' இவ்வாறு நையாண்டி செய்வதோடு நின்றுவிடுகிறார்கள். இதன் மூலம் தமது அறியாமையையும், தன்னலங் கருதி முதலாளித்துவத்தைப் பாதுகாக்க முனைவோரே தாம் என்பதையும் தான் வெளிப் படுத்திக் கொள்கிறார்கள்.

அறியாமைதான் - ஏனென்றால், கம்யூனிச வளர்ச்சியின் உயர் கட்டம் வருமென வாக்குறுதி தரும் எண்ணம் எந்த சோஷலிஸ்டுக்கும் தோன்றியதில்லை. இது வரவே செய்யுமென்று சோஷலிஸ்டு மூலவர்கள் முன்னறிந்து கூறி யதைப் பொறுத்த வரை, அது உழைப்பின் தற்போதைய உற்பத்தித் திறனையோ, பொமியலோவ்ஸ்கியின் கதைகளில் வரும் புர்சாக்கியைப் போல வேடிக்கைக்காக வேண்டி பொதுச் செல்வங்களுக்குச் சேதம் விளைவிக்கக் கூடியவர் களும், முடியாததைக் கொடு என்று கோரக் கூடியவர்களு மான தற்போதுள்ள சராசரி மனிதர்களையோ மனதிற் கொண்டு கூறப்பட்டதல்ல.

கம்யூனிசத்தின் 'உயர்'' கட்டம் வரும்வரை, உழைப் பின் அளவை மீதும் நுகர்வின் அளவை மீதும் சமுதாயமும் அரசும் மிகவும் கண்டிப்பான கண்காணிப்பு செய்ய வேண்டும் மென்று சோஷலிஸ்டுகள் கோருகின்றனர். ஆனால் இந்தக் கண்காணிப்பு முதலாளிகளுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதிலிருந்தும் முதலாளிகள் மீது தொழிலாளர் களுடைய கண்காணிப்பு நிறுவப்படுவதிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். தவிரவும் இந்தக் கண்காணிப்பு அதிகாரவர்க் கத்தினராலான அரசால் அல்ல, ஆயுதமேந்திய தொழிலாளர் களாலான அரசால் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர்.

முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் மற்றும் தெஸெரெத் தேலிகள், செர்னோவ்கள் முதலானோரை ஒத்த முதலாளித் துவ சித்தாந்தவாதிகளது பரிவாரத்தினரும்) தன்னலங் கருதி முதலாளித்துவத்தைப் பாதுகாப்பது எதில் காணக்கிடக்கிறது என்றால், இன்றைய அரசியலின் ஜீவாதாரமான அவசர அவ சியப் பிரச்சினையை விட்டுவிட்டு, அதாவது முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்தல், குடிமக்கள் எல்லோரையும் பிரம்மாண்டமான ஒரே 'கூட்டமைவின்' அனைத்து அரசின் தொழிலாளர்களாகவும் சிப்பந்திகளாகவும் மாற்றுதல், இந்தக் கூட்டமைவின் செயல் அனைத்தை யும் மெய்யான ஜனநாயக அரசுக்கு, தொழிலாளர், படையாட் கள் பிரதிநிதிகளது சோவியத்துகளின் அரசுக்கு முற்றிலும் கீழ்ப் படியச் செய்தல் ஆகியவற்றை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாய் நெடுந்தொலைவிலுள்ள எதிர்காலத்தைப் பற்றிய வாக்குவாதத்தையும் பேச்சையும் மேற்கொள்கிறார்கள்.

புலமைவாய்ந்த பேராசிரியரும், அவரைத் தொடர்ந்து குட்டி முதலாளித்துவ அற்பவாதியும், இவரையும் தொடர்ந்து தெஸெரெத்தேலிகளும் செர்னோவ்களும் போல்ஷிவிக்கு களின் அதீத கற்பனைகள் என்றும், வாய்ச்சவடால் வாக்குறுதி கள் என்றும், சோஷலிசத்தைப் புகுத்துவது சாத்திய மல்ல என்றும் பேசுகையில், இவர்கள் கம்யூனிசத்தின் உயர் கட்டம் அல்லது படியை மனதிற் கொண்டிருக்கிறார் கள். இதனைப் புகுத்துவதாய்'' யாரும் ஒரு நாளும் வாக்குறுதி கூறவுமில்லை, நினைத்ததுங்கூட இல்லை; இது 'புகுத்தப் படக் கூடியது அல்ல.

இது நம்மை சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்குமுள்ள விஞ்ஞான வழியிலான வேறுபாடு குறித்த பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது. “சமூக - ஜனநாயகவாதி'' என்னும் பெயர் சரியல்ல என்பது குறித்து மேலே குறிக்கப்பட்ட தமது வாதத்தில் எங்கெல்ஸ் இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். கம்யூனிசத்தின் முதல் அல்லது கீழ்க் கட்டத்துக்கும் உயர் கட்டத்துக்குமுள்ள வேறுபாடு அரசியல் வழியில் காலப் போக்கில் மிகப் பெரியதாய் இருக்கும் எனலாம். ஆனால் இவ்வேறுபாட்டை இப்பொழுது முதலாளித்துவத்தில் இருக் கையில் கண்டறிய முற்படுவது நகைக்கத்தக்கதே ஆகும். தனிப்பட்ட அராஜகவாதிகள் மட்டும் வேண்டுமானால் (கிரப்போத்கின்களும் கிராவெயும் கார்னெலிசனும் அராஜகவாதத் தின் ஏனைய தாரகைகளும் '' சமூக - தேசிய வெறியர்களாக வும், இன்னமும் கண்ய உணர்வையும் மனசாட்சியையும் விட்டுவிடாதுள்ள ஒரு சில அராஜகவாதிகளில் ஒருவரான கே குறிப்பிட்டது போல -'அராஜகவாத-அகழாளர்களாகவும்', 'பிளெஹானவின் பாணியில் மாற்றமடைந்திருப் பதிலிருந்து எதுவும் அறிந்து கொள்ளாதோர் அராஜகவாதி களிடையே இன்னமும் இருப்பார்களாயின்) இதற்குத் தலைமை முக்கியத்துவம் அளிக்கக்கூடும்.

ஆனால் சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்குமுள்ள விஞ் ஞான வழியிலான வேறுபாடு தெட்டத் தெளிவானது. வழக்க மாய் சோஷலிசம் என்று அழைக்கப்படுவதை மார்க்ஸ் கம் யூனிச சமுதாயத்தின் முதல் அல்லது கீழ்க் கட்டம் என்று குறிப்பிட்டார். உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமை ஆகிவிடும் அளவுக்கு இக்கட்டத்துக்கும் 'கம்யூனிசம்'' என்னும் சொல் பொருந்துவதாகும், ஆனால் இது முழு நிறைக் கம்யூனிசம் அல்ல என்பதை நாம் மறக்காதிருக்க வேண்டும். மார்க்சின் விளக்கங்களுக்குள்ள மாபெரும் முக் கியத்துவம் என்னவெனில் இங்கும் அவர் பொருள்முதல்வாத இயக்கவியலை, வளர்ச்சித் தத்துவத்தை முரணின்றிக் கையாளுகிறார்; கம்யூனிசத்தை முதலாளித்துவத்தில் இருந்து வளர்ச்சியுறும் ஒன்றாகக் கருதுகிறார். பண்டிதப் புலமை சார்ந்த வழியில் கண்டுபிடிக்கப்பட்ட', புனையப்பட்ட இலக்கணங்களுக்கும் சொற்களைப் பற்றிய பயனற்ற சண்டப் பிரசண்டங்களுக்கும் (எது சோஷலிசம்? எது கம்யூனிசம்?) பதிலாய், மார்க்ஸ் கம்யூனிசத்தின் பொருளாதார முதிர்ச்சி யினுடைய இரு கட்டங்கள் எனப்படத்தக்கவற்றின் பகுத் தாய்வை அளிக்கிறார்.

முதற் கட்டத்தில் அல்லது படியில் கம்யூனிசமானது பொருளாதார வழியில் இன்னமும் முழு அளவு முதிர்ச்சியுற்றதாக, முதலாளித்துவத்தின் மரபுகள் அல்லது மிச்ச சொச்சங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இருக்க முடியாது. ஆகவே கம்யூனிசம் அதன் முதற் கட்டத்தில் ''முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பை விட்டொழிக் காமல் வைத்துக் கொள்ளும் சுவாரஸ்யமான நிகழ்வு ஏற்படு கிறது. நுகர் பொருட்களின் வினியோகம் குறித்த இந்த முதலாளித்துவ உரிமைக்கு முதலாளித்துவ அரசு இருப்பது தவிர்க்க முடியாத முன்னிபந்தனையாகும், ஏனெனில் உரிமைக் குரிய தராதரங்கள் அனுசரிக்கப்படுமாறு உறுதிப்படுத்த வல்ல இயந்திரம் இல்லையேல் உரிமை அர்த்தமற்றதாகிவிடும்.

இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், கம்யூனிசத் தில் சில காலத்துக்கு முதலாளித்துவ உரிமை மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கம் இல்லாத முதலாளித்துவ அரசுங் கூட இருக்கும்!

இது முரணுரை போலத் தோன்றலாம், அல்லது மார்க் சியத்தின் அதியற்புத உள்ளடக்கச் சாரத்தை ஆய்ந்தறிய கிஞ்சித்தும் முயலாதோர் அடிக்கடி மார்க்சியத்தின் மீது குறை கூறுகிறார்களே அத்தகைய இயக்கவியல் புதிராகவுங்
கூடத் தோன்றலாம்.

ஆனால் உண்மை என்னவெனில், இயற்கையிலும் சமு தாயத்திலும் பழைமையின் மிச்சசொச்சங்கள் புதுமையில் எஞ்சி நின்று வாழ்க்கையில் நம்மை ஒவ்வொரு தப்படியிலும் எதிர்நோக்குகின்றன. தான்தோன்றித்தனமாய்க் கம்யூனிசத் தில் முதலாளித்துவ உரிமையைக் கடுகளவும் மார்க்ஸ் புகுத்திவிடவில்லை. முதலாளித்துவத்தின் அடிவயிற்றிலிருந்து வெளித்தோன்றும் ஒரு சமுதாயத்தில் பொருளாதார வழி யிலும் அரசியல் வழியிலும் தவிர்க்கமுடியாததைத்தான் அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளி வர்க்கத்துக்கு, தனது விடுதலைக்காக அது முதலாளித்துவத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில், ஜன நாயகம் அளவு கடந்த முக்கியத்துவமுடையதாகும். ஆயினும் ஜன நாயகம் தாண்டிச் செல்லக்கூடாத ஓர் எல்லைக் கோடல்ல. பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கும், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கும் செல்லும் பாதையில் அமைந்த கட்டங்களில் ஒன்றே அது.  

ஜனநாயகம் சமத்துவத்தைக் குறிக்கிறது. சமத்துவம் என்றால் வர்க்கங்கள் ஒழிக்கப்படுதல் என்று பிழையற்ற முறையில் அர்த்தப்படுத்திக் கொள்வோமாயின், பாட்டாளி வர்க்கம் சமத்துவத்துக்காக நடத்தும் போராட்டத்தின் மாபெரும் முக்கியத்துவமும், ஒரு முழக்கம் என்ற முறையில் சமத்துவத்தின் மாபெரும் முக்கியத்துவமும் தெளிவாய் விளங்கும். ஆனால் ஜனநாயகம் பெயரளவிலான சமத்து வத்தையே குறிக்கிறது. சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமை சம்பந்தமாய் சமத்துவம் சாதிக்கப் பெற்றதும், அதாவது உழைப்புக்கும் சம்பளங்களுக்குமான சமத்துவம் சாதிக்கப் பெற்றதும், மேலும் தொடர்ந்து முன்னேறுவது எப்படி, பெயரளவிலான சமத்துவத்திலிருந்து நடைமுறை உண்மையான சமத்துவத் துக்கு, அதாவது ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவை களுக்கு ஏற்ப ' என்னும் விதி செயல்படும் நிலைக்கு முன்னேறு வது எப்படி என்கிற பிரச்சினை தவிர்க்கமுடியாதபடி மனித குலத்தை எதிர்நோக்கும். எந்தக் கட்டங்களின் வாயிலாய், எந்த நடைமுறை நடவடிக்கைகளைக் கொண்டு மனிதகுலம் இந்தத் தலைமையான குறிக்கோளைச் சென்றடையும் என் பதை நாம் அறியோம், அறியவும் முடியாது. ஆனால் சோஷ லிசத்தை உயிரற்ற, இறுகிக் கெட்டியாகிய, என்றென்றுக்கு மாய் மாறாத ஒரே நிலையில் இருத்தப்பட்ட ஒன்றாய்க் கொள் ளும் சாதாரண முதலாளித்துவக் கருத்தோட்டம் நம்ப முடி யாத அளவுக்கு பொய்யானது என்பதையும், உண்மையில் சோஷலிசத்தில் மட்டும்தான் பொது வாழ்வு, தனியார் வாழ்வு இவற்றின் எல்லாத் துறைகளிலுமே மிக வேகமான, மெய்யான, உண்மையிலேயே பிரம்மாண்டத் திரளானோ ரைக் கொண்ட, முதலில் பெரும்பான்மையோரையும் பிறகு மக்கள் தொகை அனைவரையுமே கொண்ட, முன்னேற்றப் பேரியக்கம் தொடங்கும் என்பதையும் உணர்ந்து கொள்வது மிக முக்கியமாகும்.

ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவமாகும், அரசு வகைகளில் ஒன்றாகும். எனவே ஒவ்வொரு அரசையும் போல ஜன நாயகமும் ஒரு புறத்தில் ஆட்களுக்கு எதிராய் ஒழுங்க மைந்த, முறையான வன்முறைப் பிரயோகத்தைக் குறிக் கிறது. ஆனால் அது மறுபுறத்தில் குடிமக்களின் சமத்துவம், அதாவது அரசின் கட்டமைப்பை நிர்ணயிப்பதிலும் அரசை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் சம உரிமை உண்டென் பது பெயரளவில் அங்கீகரிக்கப்படுவதையும் குறிக்கிறது. இதன் விளைவு என்னவெனில், ஜன நாயகம் அதன் வளர்ச்சி யில் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், முதலாளித்துவத்தை எதிர்த்துப் புரட்சிகரப் போராட்டம் நடத்தும் வர்க்கமான பாட் டாளி வர்க்கத்தை ஒன்றுதிரளச் செய்கிறது; முதலாளித்துவ அரசுப் பொறியமைவையும் குடியரசு வடிவிலான முதலா ளித்துவ அரசுப் பொறியமைவையும்கூட - நிரந்தரச் சேனை யையும், போலீசையும், அதிகாரவர்க்கத்தையும் இந்தப் பாட்டாளி வர்க்கம் தகர்த்துத் தவிடுபொடியாக்கி புவிப் பரப்பிலிருந்தே துடைத்தெடுத்துவிட்டு, இவற்றுக்குப் பதி லாய் மேலும் ஜன நாயக மான ஓர் அரசுப் பொறியமைவை அமைக்கக் கூடியதாக்குகிறது. முன்னிலும் அதிக ஜன நாயக முடைத்த அரசுப் பொறியமைவு என்றாலுங்கூட இதுவும் ஓர் அரசுப் பொறியமைவுதான். அனைத்து மக்களும் அடங் கிய காவலர் படையை நிறுவ முற்படும் ஆயுதமேந்திய தொழிலாளர்களின் வடிவில் அமைந்த அரசுப் பொறி யமைவு இது.

இங்கு “அளவு பண்பாய் மாறுகிறது'' : ஜன நாயகம் இந்த அளவுக்கு அதிகரிப்பதானது முதலாளித்துவ சமுதாயத் தின் வரம்புகளைத் தாண்டிச் சென்று இச்சமுதாயத்தை சோஷலிச வழியில் திருத்தியமைப்பதன் துவக்கத்தைக் குறிக்கிறது. மெய்யாகவே எல்லோரும் அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வார்களாயின் முதலாளித்துவத்தால் தன் பிடியை இருத்திக் கொள்ள முடியாது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிதான் மெய்யாகவே எல்லோரும் அரசு நிர்வா கத்தில் பங்கு கொள்ளும்படி வகை செய்யும் முன்னிபந்தனை களைத் தோற்றுவிக்கிறது. இந்த முன்னிபந்தனைகளில் சில வருமாறு: அனைத்து மக்களும் எழுத்தறிவு பெறுதல், மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் ஏற் கனவே இது சாதிக்கப் பெற்றுவிட்டது; தபால் துறை, ரயில் வேக்கள், பெரிய ஆலைகள், பெருவீத வாணிபம், வங்கித் துறை, இன்ன பிறவற்றாலான சிக்கல் மிக்க, பிரம்மாண்ட மான, சமூகமயமான இயந்திரத்தால் கோடானு கோடியான தொழிலாளர்கள் “பயிற்சியும் கட்டுப்பாடும்'' உடையோராக்கப்படுதல்.

இந்தப் பொருளாதார முன்னிபந்தனைகள் இருக்குமா யின், முதலாளிகளும் அதிகாரவர்க்கத்தினரும் வீழ்த்தப்பட்டபின், இவர்களுக்குப் பதிலாய் உற்பத்தியையும் வினியோ கத்தையும் கண்காணிப்பதிலும், உழைப்பையும் உற்பத்திப் பொருட்களையும் பற்றிய கணக்குப் பதிவு வேலையிலும் உடனடி யாகவே, எடுத்த யெடுப்பிலே, ஆயுதமேந்திய தொழிலாளர் களையும், ஆயுதமேந்திய மக்கள் அனைவரையுமே ஈடுபடுத்து வது முற்றிலும் சாத்தியமே. (கண்காணிப்பும் கணக்குப் பதிவுமான இந்தப் பிரச்சினையைப் பொறியாளர்கள், விவசாய நிபுணர்கள் முதலான விஞ்ஞானப் பயிற்சி பெற்ற ஊழியர்களைப்பற்றிய பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்தக் கனவான்கள் இன்று முதலாளி களுடைய விருப்பங்களுக்குப் பணிந்து வேலை செய்கிறார்கள், நாளைக்கு ஆயுதமேந்திய தொழிலாளர்களுடைய விருப்பங் களுக்குப் பணிந்து இன்னுங்கூட திறம்பட வேலை செய்வார்கள்.)

கணக்கீடு, கண்காணிப்பு - கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டம் தடங்கலின்றி இயங்கவும் சரிவரச் செயற்படவும் பிர தானமாய்த் தேவைப்படுகிறவை இவையே. குடிமக்கள் எல் லோரும் அரசின் சம்பளச் சிப்பந்திகளாய் மாற்றப்பட்டுவிடு கிறார்கள்; அரசு ஆயுதமேந்திய தொழிலாளர்களால் ஆனது. குடிமக்கள் எல்லோரும் அரசினுடைய நாடு தழுவிய ஒரே யொரு ''கூட்டமைவின் சிப்பந்திகளும் தொழிலாளர்களும் ஆகிவிடுகிறார்கள். தேவைப்படுவது எல்லாம் இவர்கள் சமத்துவமாய் வேலை செய்ய வேண்டும், வேலையில் தமக்கு உரிய பங்கைச் செய்து சமத்துவ சம்பளம் பெற வேண்டும் என்பதே. இதற்கு வேண்டிய கணக்கீடும் கண்காணிப்பும் முதலாளித்துவத்தால் வெகுவாய் எளினமப்படுத்தப்பட்டு, எழுத்தறிவுடையவர் எவரும் செய்ய முடியும்படி யான மேற்பார்வையிடல், பதிவு செய்தல், எண் கணிதத்தின் அடிப்படை விதிகளை அறிந்திருத்தல், தக்க ரசீதுகளை எழுதிக் கொடுத்தல் போன்ற மிகமிக எளிய வேலைகளாய்க் குறுகும் படிச் செய்யப்பட்டுவிட்டன.

மக்களில் பெரும்பான்மையோர் தாமே சுயேச்சையாக வும் எல்லாவிடத்தும் இத்தகைய கணக்குப் பதிவுகளைச் செய்யவும், (இப்பொழுது சிப்பந்திகளாய் மாற்றப்பட்டு விட்ட) முதலாளிகளையும் தமது முதலாளித்துவப் பழக்கங் களை விடாது வைத்துள்ள அறிவுத் துறைக் கனவான்களையும் இவ்விதம் கண்காணித்துக் கொள்ளவும் தொடங்குகையில், இந்தக் கண்காணிப்பு மெய்யாகவே சர்வவியாபகமானதாக வும் பொதுவானதாகவும் வெகுஜனத்தன்மையதாகவும் ஆகி விடும், இதிலிருந்து தப்ப வழி இருக்காது, ஏனெனில் போக் கிடம் எதுவும் இருக்காது.

சமுதாயம் முழுதும் சமமான உழைப்புக்குச் சமமான சம்பளத்துடன் ஒரே அலுவலகமும், ஒரே ஆலையுமாகிவிடும்.

ஆனால் பாட்டாளி வர்க்கம் முதலாளிகளைத் தோற்கடித்த பிற்பாடும், சுரண்டலாளர்களை வீழ்த்திய பிற்பாடும் சமுதா யம் முழுவதுக்கும் விரிவடையச் செய்யும் இந்த 'ஆலைத் துறைக் கட்டுப்பாடு எவ்வகையிலும் நமது இலட்சியமோ, நமது இறுதிக் குறிக்கோளோ அல்ல. முதலாளித்துவச் சுரண்டலால் விளைந்த எல்லா இழுக்குகளையும் அசிங்கங்களை யும் களைந்து சமுதாயத்தைச் சுத்தம் செய்து தூய்மையாக்கு வதற்கும், மேலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கும் இது அவசியமான ஒரு படியே அன்றி வேறல்ல.

எத்தருணம் முதல் சமுதாயத்தின் எல்லா உறுப்பினர் களும் -- அல்லது குறைந்தது மிகப் பெரும்பான்மையோர் – அரசைத் தாமே நிர்வகிக்கக் கற்றுக் கொள்கிறார்களோ, இந்தப் பணியை நேரில் தாமே மேற்கொள்கிறார்களோ, மிகச் சொற்ப தொகையினரே ஆன முதலாளித்துவச் சிறுபான் மையோரையும், தமது முதலாளித்துவப் பழக்கங்களை விட் டொழிக்க விரும்பாத கனவான்களையும், முதலாளித்துவத்தால் அறவே பாழ்படுத்தப்பட்டுவிட்ட தொழிலாளர்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்கிறார்களோ'' -அத்தருணம் முதலாய் எவ்வகையான அரசாங்கத்துக்குமுள்ள தேவை அடியோடு மறையத் தொடங்கிவிடும். ஜன நாயகம் எவ்வள வுக்கு எவ்வளவு பூரண மானதாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தேவையற்றதாகும் தருணம் அருகாமையில் வந்துவிடுகிறது. ஆயுதமேந்திய தொழிலாளர்களாலான அரசு, ''அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசா யில்லாத இது. எவ்வளவுக்கு எவ்வளவு ஜன நாயகமுடைத்த தாய் ஆகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் ஒவ் வொரு வடிவமும் வேகமாய் உலர்ந்து உதிரத் தொடங்குகிறது.

ஏனென்றால், எல்லோரும் சமூகப் பொருளும் பத்தியை நிர்வகிக்கக் கற்றுக் கொண்டு சுயேச்சையாய்த் தாமே நடைமுறையில் நிர்வகிக்கும்போது, சுயேச்சையாய்த் தாமே கணக்குகள் பதிவு செய்து கொண்டு சோம்பேறிகளையும் செல்வச் சீமான்களது புதல்வர்களையும் மோசடிக்காரர்களை யும் ஏனைய முதலாளித்துவ மரபுகளின் காவலர்களையும் கண்காணிப்புச் செய்யும்போது, இந்த வெகுஜன அளவி லான கணக்கீட்டிலிருந்தும் கண்காணிப்பிலிருந்தும் தப்புவது தவிர்க்கமுடியாத வகையில் அவ்வளவு கடினமாகிவிடு மாதலால், அவ்வளவு அரிதிலும் அரிதான விதிவிலக்காகி விடுமாதலால், மற்றும் உடனுக்குடன் கடுந் தண்டனைக்கு உரியதாக்கப்படலாமாதலால் (ஏனெனில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் - காரிய வழிப்பட்டவர்களே அன்றி உணர்ச்சிப் பசப்பாளர்களான அறிவுத் துறையினரல்ல, யாரும் தம்மிடம் வாலாட்ட இடந்தர மாட்டார்கள்), சமூக வாழ்க்கையின் சாதாரண அடிப்படை விதிகளைப் பற்றி யொழுக வேண்டிய அவசியமானது விரைவில் நிலை யான ஒரு பழக்கமாகிவிடும்.

இனி கம்யூனிச சமுதாயத்தின் முதற்கட்டத்திலிருந்து அதன் உயர் கட்டத்துக்கு மாறிச் செல்லவும், அதனுடன் கூடவே அரசு பூரணமாய் உலர்ந்து உதிரவும் பாதை விரியத் திறக்கப்பட்டுவிடும்.
(அரசும் புரட்சியும்)


கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டம் பற்றி - லெனின்


“சோஷலிசத்தில் தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பின் ''குறைக்கப்படாத அல்லது முழுமையான பயன் கிடைக்குமென்று லஸ்ஸால் கூறிய கருத்து தவறென்பதை நிரூபிக்க கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் மார்க்ஸ் விவரமான பரிசீலனையில் இறங்குகிறார். சமுதாயத் தினுடைய சமூக உழைப்பு அனைத்திலுமிருந்து காப்பு நிதி ஒன்றைக் கழிக்க வேண்டுமென்பதை, பொருளுற்பத்தியை விரிவாக்குவதற்கும், இயந்திரங்களின் தேய்மானத்துக்கு மாற்றீடு செய்வதற்கும், இன்ன பிறவற்றுக்கு மான நிதிகளைக் கழிக்க வேண்டுமென்பதை மார்க்ஸ் தெளிவு படுத்துகிறார். பிறகு நுகர்வுச் சாதனங்களிலிருந்து நிர்வாகச் செலவுகளுக் கும், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், முதிய வயதினர் இல்லங்கள் முதலான பலவற்றுக்கும் வேண்டிய நிதியைக் கழிக்க வேண்டும்.

லஸ்ஸாலின் தெளிவற்ற, குழப்படியான, பொதுத் தொடருக்கு ('தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பின் முழுமையான பயன்') பதிலாய், மார்க்ஸ் சோஷலிச சமுதா யம் அதன் விவகாரங்களை உண்மையில் எப்படி நிர்வகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து நிதானித்து மதிப்பீடு செய்கிறார். முதலாளித்துவம் இல்லாது ஒழிந்து விடும் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளை மார்க்ஸ் ஸ்தூலமான முறையில் பகுத்தாராய முற்படுகிறார். அவர் கூறுவதாவது:

'இங்கு நாம் ஆராய வேண்டியிருப்பது (தொழிலா ளர் கட்சியின் வேலைத்திட்டத்தைப் பகுத்தாராய்கை யில்) தனது சொந்த அடித்தளங்களின் மீது வளர்ந்தெழுந்துள்ள ஒரு கம்யூனிச சமுதாயமல்ல; மாறாக, முதலாளித்துவச் சமுதாயத்திலிருந்து வெளித்தோன்றுவதும், ஆகவே தான் உதித்த அந்தப் பழைய சமுதாயத்தினிடமிருந்து பெறப்பட்ட பிறவிக்குறிகள் ஒவ்வொரு வழியிலும் பொருளாதார வழியிலும் தார்மிக வழி யிலும் அறிவு வழியிலும் இன்னமும் பதிந்திருப்பது மான கம்யூனிச சமுதாயத்தையே இங்கு நாம் ஆராய் கிறோம்.''

இந்தக் கம்யூனிச சமுதாயத்தைத் தான், முதலாளித்து வத்திலிருந்து பிறந்து இப்பொழுது தான் வெளியே வந்து அந்தப் பழைய சமுதாயத்தின் பிறவிக்குறிகள் எல்லா வழியில் லும் பதிந்திருக்கும் இந்த சமுதாயத்தைத் தான் மார்க்ஸ் கம்யூனிச சமுதாயத்தின் முதல் அல்லது கீழ்க் கட்டம் என்று குறிப்பிடுகிறார்.

உற்பத்திச் சாதனங்கள் இப்பொழுது தனியாட்களது தனியுடைமையாய் இல்லை. உற்பத்திச் சாதனங்கள் சமு தாயம் அனைத்தின் உடைமையாகிவிட்டன. சமூகத்துக்குத் தேவையான வேலையில் ஒரு பகுதியைச் செய்திடும் சமுதாய உறுப்பினர் ஒவ்வொருவரும் இவ்வளவு வேலையைச் செய் திருப்பதாய்க் கூறும் சான்றிதழ் ஒன்றைச் சமுதாயத்திட மிருந்து பெற்றுக் கொள்கிறார். இச்சான்றிதழைக் கொண்டு இதற்கு இணையான அளவுக்கு அவர் நுகர்வுப் பண்டங்களின் பொதுக் களஞ்சியத்திலிருந்து பண்டங்கள் பெறுகிறார். பொது நிதிக்குச் செல்லும் உழைப்பின் அளவு கழித்தெடுக்கப்பட்ட பின், ஒவ்வொரு தொழிலாளியும் சமுதாயத்திற்குத் தான் அளித்ததற்குச் சமமான அளவில் அதனிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.

"சமத்துவம்'' அரசோச்சுவதாகவே தோன்றுகிறது.

ஆனால் இத்தகைய சமுதாய அமைப்பினை (வழக்கமாய் இது சோஷலிசம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்ஸ் இதனைக் கம்யூனிசத்தின் முதற் கட்டமெனக் குறிப்பிடுகிறார்) கருத்தில் கொண்டு லஸ்ஸால் இது சமத்துவ வினியோகமாகும்'' என்றும், 'உழைப்பின் உற்பத்திப் பொருளில் சம பங்கு பெற எல்லோருக்கும் சம உரிமை அளிப்பதாகும்' என்றும் கூறும் போது, லஸ்ஸால் தவறிழைக்கிறார்; இந்தத் தவற்றை மார்க்ஸ் அம்பலம் செய்கிறார்.

“சன உரிமை” இங்கு இருக்கிறது தான், ஆனால் இன்னமும் இது முதலாளித்துவ உரிமையேதான்', ஒவ்வொரு உரிமையையும் போல சமத்துவமின்மையைக் கொண்டதேதான் என்று மார்க்ஸ் கூறுகிறார். ஒவ்வொரு உரிமையும் உண்மையில் ஒரே மாதிரி இல்லாத, ஒருவருக்கொருவர் சமமாயில்லாத வெவ்வேறானோருக்கும் சம அளவீட்டைப் பயன்படுத்துகிறது. ஆகவே சம உரிமை என்பது உண்மையில் சமத்துவத்துக்குப் பங்கம் செய்கிறது, அநீதியாகிவிடுகிறது. ஒவ்வொருவரும் ஏனையவர் எவரையும் போல அதே அளவு சமூக உழைப்பு புரிந்து. சமூக உற்பத்திப் பொருளில் (மேற்கூறியபடி கழித்தபின் எஞ்சுவதில்) சமப் பங்கு பெறுகிறார்.

ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கவில்லை : ஒருவர் வலுவானவர், மற்றொருவர் பலவீனமானவர்; ஒருவர் கல் யாணமானவர், மற்றொருவர் ஆகாதவர்; ஒருவருக்கு அதிக குழந்தைகள், மற்றொருவருக்கு அவ்வளவு இல்லை..... மார்க்ஸ் இதிலிருந்து எடுத்துரைக்கும் முடிவு வருமாறு:

''... சமமான உழைப்பை அளித்து, ஆகவே சமுதாய நுகர்வு நிதியிலிருந்து சமமான பங்கு பெறுவதன் மூலம், உண்மையில் ஒருவர் பிறிதொருவரைவிட அதிகம் பெறவும், ஒருவர் பிறிதொருவரைவிடச் செல்வந்த ராய் இருக்கவும், இன்ன பலவாறாகவும் நேர்கிறது. இந்தக் குறைபாடுகளைத் தவிர்க்க, உரிமை சம மாய் இருப்பதற்குப் பதில் சமமின்றி இருத்தல் வேண்டும்...''

ஆகவே கம்யூனிசத்தின் முதற் கட்டம் இன்னமும் நீதியும் சமத்துவமும் அளித்திட முடியாத நிலையிலே தான் இருக்கும்: செல்வத்தில் வேறுபாடுகள், நியாயமில்லா வேறுபாடுகள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் மனிதனை மனிதன் சுரண்டுதல் முடியாததாகிவிடும், ஏனென்றால் உற்பத்திச் சாதனங்களை - ஆலைகளையும், இயந்திரங்களையும், நிலத்தையும், பிறவற்றையும் - கைப்பற்றி அவற்றைத் தனி யுடைமையாக்கிக் கொள்வது முடியாததாகிவிடும். பொதுவில் ‘சமத்துவம்’ குறித்தும் 'நீதி'' குறித்தும் லஸ்ஸால் கூறும் தெளிவற்ற குட்டி முதலாளித்துவத் தொடர்களைத் தகர்த்திட்டு, மார்க்ஸ் கம்யூனிச சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதையைத் தெளிவு படுத்துகிறார். கம்யூனிச சமுதாயம் தனி நபர்களால் உற்பத்திச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விட்ட திலுள்ள 'அநீதியை மட்டும்தான் முதலில் ஒழிக்கும் படி நிர்ப்பந்திக்கப்படுகிறது என்பதையும், மற்றோர் அநீதியை, அதாவது நுகர்வுப் பண்டங்களை (தேவைகளுக்கு ஏற்ப அல் லாமல்) ஆற்றிய உழைப்பின் அளவுக்கு ஏற்ப வினியோகிப்பதிலுள்ள அநீதியை அதனால் உடனடியாக அகற்ற முடிய வில்லை என்பதையும் மார்க்ஸ் காட்டுகிறார்.

முதலாளித்துவப் பேராசிரியர்களும் நமது '' துகானும் அடங்கலான கொச்சைவாதப் பொருளியலாளர்கள் ஓயா மல் சோஷலிஸ்டுகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்; சோஷ லிஸ்டுகள் மக்களிடையிலான சமத்துவமின்மையை மறந்து
விடுவதாகவும் இந்த சமத்துவமின்மையை அகற்றிவிடலாம் மெனக் 'கனவு காண்பதாகவும் கூறுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுடைய அளவுகடந்த அறியாமையைத்தான் காட்டுகிறது என்பது விளங்குகிறது.

சிறிதும் தவறாது உன்னிப்புடன் மார்க்ஸ் மனிதர்களிடை யிலான தவிர்க்கமுடியாத சமத்துவமின்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுடன் நிற்காது. உற்பத்திச் சாதனங்களை சமுதாயம் அனைத்துக்குமுரிய பொதுவுடைமையாய் மாற்றுவதால் மட்டும் (சகஜமாய் இது சோஷலிசம்' என்றழைக் கப்படுகிறது) வினியோகத்திலுள்ள குறைபாடுகளும் முதல் லாளித்துவ உரிமையின்' சமத்துவமின்மையும் அகற்றப் பட் டு வி டு வ தி ல்லை என்பதையும், ஆற்றப்படும் உழைப் புக்கு ஏற்ப உற்பத்திப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப் படும் வரை இவை தொடர்ந்து நிலவும் என்பதையும் கணக் கில் எடுத்துக் கொள்கிறார். மேலும் தொடர்ந்து மார்க்ஸ் கூறுவதாவது:

“..... இந்தக் குறைபாடுகள் கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்தில் தவிர்க்கமுடியாதவை, ஏனெனில் இச்சமுதாயம் நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுது தான் பிறந்து வெளிவந்திருக்கிறது. உரிமையானது ஒருபோ தும் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை யும் இதனால் நெறிப்படுத்தப்பட்ட அதன் கலாசார வளர்ச்சி நிலையையும் காட்டிலும் உயர்வானதாகிவிட முடியாது...''

ஆக, கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்தில் (சாதா ரண மாய் இது சோஷலிசம் என்றழைக்கப்படுகிறது) 'முதலாளித்துவ உரிமை' அதன் முழு அளவிலும் ஒழிக்கப்பட்டு விடுவது இல்லை; பகுதி அளவுக்கே , இதுகாறும் சித்திபெற் றுள்ள பொருளாதாரப் புரட்சிக்கு ஏற்ற அளவுக்கே, அதா வது உற்பத்திச் சாதனங்களைப் பொறுத்த மட்டிலுமே ஒழிக் கப்படுகிறது. முதலாளித்துவ உரிமை இவற்றைத் தனி நபர்களுடைய தனிவுடைமையாய் அங்கீகரிக்கிறது. சோஷலிசம் இவற்றைப் பொதுவுடைமையாய் மாற்றுகிறது. அந்த அளவுக்கு - அந்த அளவுக்கு மட்டுமே – “முத லாளித்துவ உரிமை” மறைகிறது.

ஆனால் அதன் மற்றொரு பகுதியைப் பொறுத்தவரை அது தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது; சமு தாய உறுப்பினர்களிடையே உற்பத்திப் பொருட்களின் வினி யோகத்திலும் உழைப்பைப் பிரித்தளிப்பதிலும் ஒழுங்கியக் கியாய் (நிர்ணயிக்கும் காரணியாய்) தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. '' வேலை செய்யாதவன் உண்ண வும் வேண்டாம்'' என்னும் சோஷலிசக் கோட்பாடு ஏற் கெனவே சித்தி பெற்றுவிட்டது; ''சம அளவிலான உழைப்புக்கு சம அளவிலான உற்பத்திப் பொருட்கள்' என்னும் மற்றொரு சோஷலிசக் கோட்பாடும் ஏற்கெனவே சித்தி பெற்றுவிட்டது. ஆயினும் இது இன்னமும் கம்யூனிசமாகிவிடவில்லை; சமமல் லாதவர்களுக்கு, சமமில்லா (மெய்யாகவே சமமில்லா) உழைப்பு அளவுகளுக்கு ஊதியமாய்ச் சம அளவிலான உற் பத்திப் பொருட்களை அளிக்கும் ''முதலாளித்துவ உரிமை'' இன்னும் ஒழிக்கப்பட்டாகவில்லை.

இது ஒரு ‘குறைபாடே', ஆனால் கம்யூனிசத்தின் முதற் கட்டத்தில் இது தவிர்க்கமுடியாதது என்று மார்க்ஸ் கூறுகிறார். ஏனெனில் கற்பனாவாதத்தில் ஈடுபடாதிருக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தை வீழ்த்தியதும் மக்கள் உரிமைத் தராதரம் எதுவும் பாராது சமுதாயத்துக்காக வேலை செய்ய உடனடியாய்க் கற்றுக் கொண்டுவிடுவார்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. தவிரவும் முதலாளித்துவம் ஒழிக் கப்பட்டதும் இத்தகைய ஒரு மாறுதல் ஏற்படுவதற்கு வேண் டிய பொருளாதார முன்னிபந்தனைகள் உடனடியாய்ப் படைக்கப் பட்டுவிடுவதில்லை.

''முதலாளித்துவ உரிமையின்” தராதரத்தைத் தவிர இப்பொழுது வேறு தராதரம் இருக்கவில்லை. ஆகவே இந்த அளவுக்கு அரசுக்குரிய தேவை இன்னும் இருந்து வருகிறது; உற்பத்திச் சாதனங்களின் பொதுவுடைமையைப் பாதுகாப்பதுடன், உழைப்பிலும் உற்பத்திப் பொருட்களின் வினியோகத்திலும் சமத்துவத்தைப் பாதுகாக்கக்கூடிய அரசு தேவைப் படுகிறது.

முதலாளிகளும் வர்க்கங்களும் இனி இல்லையாதலால் அந்த அளவுக்கு அரசு உலர்ந்து உதிர்கிறது. ஆகவே எந்த வர்க்கமும் இனி அடக்கப்பட முடியாது.

ஆனால் அரசு இன்னும் அறவே உலர்ந்து உதிர்ந்துவிட வில்லை, ஏனெனில் உண்மையில் சமத்துவமின்மையைப் புனிதமாக்கிடும் முதலாளித்துவ உரிமையைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. அரசு அறவே உலர்ந்து உதிர முழுநிறைவான கம்யூனிசம் அவசியமாகும்.
(அரசும் புரட்சியும்)