“இன்றைய உலகில் கலாச்சாரம் அனைத்தும், கலை இலக்கியம் அனைத்தும்
குறிப்பிட்ட வர்க்கங்களுக்குச் சொந்தமானவை, குறிப்பிட்ட அரசியல் திசைவழிகளில் முடுக்கி
விடப்படுகின்றன. கலை கலைக்காக, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட கலை, அரசியலில் இருந்து
பிரிந்த அல்லது விடுதலை பெற்ற கலை என ஒன்று உண்மையில் கிடையாது. பாட்டாளி வர்க்க கலை
இலக்கியம் என்பது முழுப் பாட்டாளி வாக்கப் புரட்சி இலட்சியத்தின் ஒரு பகுதி. அவை லெனின்
கூறுவது போல், முழுப் புரட்சி இயந்திரத்தின் “பல்லும் சில்லு”மாக விளங்குகின்றன.”
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)
“புரட்சிகர கலாச்சாரம் பரந்துபட்ட
மக்களின் ஒரு சக்தி மிக்க புரட்சிகர ஆயுதமாகும். புரட்சி வெடித்தெழுவதற்கு முன் அது
சித்தாந்த ரீதியில் புரட்சிக்கான தளத்தைத் தயார் செய்கிறது. புரட்சி வெடித்ததும் பொதுப்
புரட்சி முன்னணியில் அது ஒரு முக்கியமான, அத்தியாவசியமான போர் முனையாகின்றது.”
(புதிய ஜனநாயகம் பற்றி – ஜனவரி 1940)
“நமது கலை இலக்கியம் எல்லாம்
பரந்துபட்ட மக்களுக்கு, முதன்முதலாக தொழிலாளர், விவசாயிகள், படையினருக்கு உரியவை, அவை
தொழிலாளர், விவசாயிகள், படையினருக்காக படைக்கப்படுகின்றன, அவர்களின் பயன்பாட்டிற்கு
உரியவை.”
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)
“நமது கலை இலக்கிய ஊழியர்கள்
இந்தக் கடமையை கண்டிப்பாக நிறைவேற்றி, தமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்கள் தொழிலாளர்,
விவசாயிகள், படையினர் மத்தியில், யதார்த்தப் போராட்டங்களில் மத்தியில் ஆழமாகச் செல்லும்
போக்கில் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினரின் பக்கத்துக்கு, பாட்டாளி வர்க்கத்தின்
பக்கத்துக்கு, தமது நிலைப்பாட்டை படிப்படியாக நகர்த்த வேண்டும். இவ்வாறுதான் உண்மையில்
தொழிலாளர்கள், விவசாயிகள், படையினருக்கு உரிய கலை இலக்கியத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கக்
கலை இலக்கியத்தை நாம் பெற முடியும்.”
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)
“கலை இலக்கியம் முழுப் புரட்சி
இயந்திரத்தினதும் ஒரு பகுதியாக நன்கு அமைய வேண்டும், மக்களை ஐக்கியப் படுத்தி, கற்பித்து,
எதிரியைத் தாக்கி அழிக்கும் சக்தி மிக்க ஆயுதமாகச் செயல்பட வேண்டும். மக்கள் ஒரே சிந்தனையுடனே
ஒரே உள்ளத்துடன் எதிரியை எதிர்க்கத் துணை புரிய வேண்டும்”
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)
“நூறு மலர்கள் மலரட்டும், நூறு
கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பது கலை வளர்ச்சியையும் அறிவியல் முன்னேற்றத்தையும்
நமது நாடடின் சோஷலிச கலாச்சாரத்தின் செழித்தோங்குவதும் மேம்படுத்துவதற்குரிய கொள்கையாகும்.
கலையில் பல்வேறு வடிவங்களும் பல்வேறு நடைகளும் சுதந்திரமாக வளரலாம். அறிவியலில் பல்வேறு
கருத்துக்களும் சுதந்திரமாக முட்டி மோதலாம். கலையின் குறிப்பிட்ட ஒரு நடையை அல்லது
ஒரு சிந்தனை முறையைத் திணித்து, இன்னொன்றைத் தடை செய்ய நிர்வாக நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டால்,
அது கலை, அறிவியல வளர்ச்சிக்குத தீங்கு பயக்கும் என நாம் கருதுகின்றோம். கலைகள், அறிவியல்களில்
சரியும் பிழையும் சம்பந்தமான பிரச்சினைகள், கலை அறிவியல் வட்டாரங்களில் சுதந்திரமான
விவாதங்கள் மூலமும், இந்தத் துறைகளில் நடைமுறை வேலை மூலமும் தீர்க்கப்பட வேண்டும்.
எளியமுறையில் தீர்ககப்படக் கூடாது.”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி
– 27 1957)
No comments:
Post a Comment