Saturday, 18 July 2015

பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகள் சமூகப் புரட்சிக்கு முன்நிபந்தனையாகும் - மார்க்ஸ்

பக்கூன் எழுதிய “அரசும் அராஜகவாதமும்” என்ற புத்தகத்தின் பொழிப்பு என்பதில் இருந்து

ஒரு தீவிரமான சமூகப் புரட்சி பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளைப் பொறுத்திருக்கிறது, அவையே அதன் முன்நிபந்தனை. ஆகவே முதலாளித்துவ உற்பத்தியோடு சேர்ந்து தொழில்துறைப் பாட்டாளி வர்க்கம் குறைந்தபட்சம் மக்கள் தொகையில் ஒரு முக்கியமான இடத்தை எங்கே வகிக்கிறதோ, அங்கு மட்டுமே புரட்சி சாத்தியம். அது வெற்றியடைய ஏதேனும் வாய்ப்பு இருக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் தன்னுடைய புரட்சியின் போது அந்தக் காலத்தில் இருந்த பிரெஞ்சு விவசாயிகளுக்குச் செய்த அளவுக்காவது அது விவசாயிகளுக்கு உடனடியாக அதற்குரிய மாற்றங்களுடன் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் ஆட்சி விவசாய ஊழியர்களை அடிமைப்படுத்துவதைக் குறிப்பதாக அனுமானிப்பது அருமையான கருத்தே. திரு.பக்கூனினுடைய இதயத்தின் ஆழத்திலுள்ள கருத்துக்கள் இங்கேதான் வெளிப்படுகின்றன. சமூகப் புரட்சியைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது, அதைப்பற்றி அவருக்குத் தெரிந்த எல்லாமே அரசியல் சொற்றொடர்கள்தான். அவருக்கு அதன் பொருளாதா முன்தேவைகள் இல்லாதவை. இதுவரை இருந்திருக்கின்ற எல்லாப் பொருளாதார வடிவங்களும் – வளர்ச்சி அடைந்தவை அல்லது வளர்ச்சி இல்லதவை- ஊழியனை அடிமைப்படுத்துவதை (கூலித் தொழிலாளி அல்லது விவசாயி, இதரவை ஆகிய எந்த வடிவத்திலும்) உள்ளடக்கி இருந்தபடியால் இவை எல்லாவற்றிலுமே தீவிரமான புரட்சி சம அளவுக்குச் சாத்தியம் என்று அவர் அனுமானிக்கிறார்.

 (அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 213-214)

குறுங்குழுவாதத்தை மறுத்து தொழிலாளர் கட்சி அமைப்பது பற்றி – மார்க்ஸ்

(சோஷலிஸ்டுக் குறுங்குழுவாத வளர்ச்சி மற்றும் உண்மையான தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று எப்பொழுதுமே எதிர்மறை விகிதத்தில் காணப்படுகிறது. தனிப்பட்ட பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எவ்வாறு மாறுகிறது என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டு கிறார். ஆளும் வர்க்கங்களின் அரசியல் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியான கிளர்ச்சியின் மூலம், தொழிலாளி வர்க்கத்துக்கு இதற்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆளும் வர்க்கங்களின் கைகளில் அது ஒரு விளையாட்டுச் சாமானாகத்தான் இருக்கும் என்கிறார் மார்க்ஸ்)

நியூயார்கிலிருந்து பி.போல்ட்டேக்க கா.மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் இருந்து
(லண்டன்) நவம்பவர் 23, 1871

… சோஷலிஸ்டு அல்லது அரை சோஷலிஸ்டுக் குழுக்களுக்குப் பதிலாகப் போராட்டத்துக்காகத் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான அமைப்பை ஏற்படுத்துவதற்காக அகிலம் நிறுவப்பட்டது. அசல் விதிகளும் நிறுவன அறிக்கையும் இதை எடுத்த எடுப்பிலேயே காட்டுகின்றன. மறுபக்கத்தில், வரலாற்று நிகழ்வுப் போக்கு ஏற்கெனவே குறுங்குழுவாதத்தை நொறுக்கி இராவிட்டால் அகிலம் நீடித்திருக்க முடியாது.

சோஷலிஸ்டுக் குறுங்குழுவாத வளர்ச்சி மற்றும் உண்மையான தொழலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று எப்பொழுதுமே எதிர்மறை விகிதத்தில் இருக்கின்றன. தொழிலாளி வர்க்கம் சுயேச்சையான வரலாற்று இயக்கத்துக்கு இன்னும் பக்குவம் அடையாதிருக்கும் வரை குறுங்குழுக்கள் (வரலாற்று வழியில்) நியாயமானவையே. தொழிலாளி வர்க்கம் இந்தப் பக்குவத்தைப் பெற்ற உடனே எல்லாக் குறுங்குழுக்களும் அடிப்படையிலேயே பிற்போக்காகி விடுகின்றன. எனினும் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுவது அகிலத்தின் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுவது அகிலத்தின் வரலாற்றில் திரும்பவும் நடைபெற்றது. எது காலாவதியாகி விட்டதோ, அது புதிதாக உருவாக்கப்பட்ட வடிவத்துக்குள் தன்னை நிறுவிக் கொள்வதற்கும் தன்னுடைய நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் முயற்சிக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் இந்த வர்க்கத்துக்கு அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதைத் தன்னுடைய இறுதிக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது, இது தொழிலாளி வர்க்கம் நிறுவன வழியாக ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை முன்பே வளர்ச்சி அடைந்திருப்பதை- துல்லியமாக அதன் பொருளாதாரப் போராட்டங்களில் இருந்தே தோன்றியிருப்பதை- அவசியமாககுவது இயற்கையே.

எனினும், மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக வெளிவருகின்ற, வெளியில் இருந்து அவைகள் மீது நிர்ப்பந்தம் கொண்டுவர முயற்சிக்கின்ற ஒவ்வொரு இயக்கமும் அரசியல் இயக்கமே. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் – அல்லது ஒரு குறிப்பிட்ட தொழில்துறையில் கூட- ஒரு நாளில் வேலை செய்கின்ற நேரத்தைக் குறைப்பதற்காக தனிப்பட்ட முதலாளிகள் மீது வேலை நிறுத்தங்கள், இதரவைகளின் மூலம் நிர்ப்பந்தம் கொண்டுவருகின்ற முயற்சி முற்றிலும் பொருளாதார இயக்கமே. மறுபக்கத்தில், எட்டு மணி நேர வேலை நாள், இதரவை பற்றி சட்டத்தைக் கொண்டுவருமாறு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்ற இயக்கம் அரசியல் இயக்கமாகும்.

இவ்விதத்தில் தொழிலாளர்களின் தனித்தனியான பொருளாதார இயக்கங்களில் இருந்து எல்லா இடங்களிலும் ஒர் அரசியல் இயக்கம், அதாவது ஒரு பொதுவான வடிவத்தில், பொதுவான சமூக வழியில் அடக்குமுறைச் சக்தியைக் கொண்டிருக்கும் வடிவத்தில் தன்னுடைய நலன்களை நிர்ப்பந்தமாக ஏற்படுத்துகின்ற வர்க்கத்தின் இயக்கம் வளர்ச்சி அடைகிறது. இந்த இயக்கங்களில் முன்பே ஏற்பட்டிருக்கும் நிறுவனத்தை ஒரு குறிப்பிட்ட அளவில் முன்னூக்கித்தாலும் அவை சம அளவுக்கு இந்த நிறுவனத்தை வளர்க்கின்ற சாதனங்களே.

தொழிலாளி வர்க்கம் கூட்டு ஆட்சிக்கு, அதாவது ஆளும் வர்க்கங்களின் அரசியல் ஆட்சிக்கு எதிராகத் தீர்மானமான தாக்குதலை நடத்தக் கூடிய அளவுக்குப் போதுமான நிறுவன வழியிலான வளர்ச்சியை இன்னும் பெறாமல் இருக்கின்ற இடங்களில் எப்படியாவது இந்த ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியான கிளர்ச்சியின் மூலம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான விரோதமான அணுகுமுறையின் மூலம் தொழிலாளி வர்க்கத்துக்கு இதற்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவைகளுடைய கைகளில் அது ஒரு விளையாட்டுச் சாமானாகத்தான் இருக்கும்.


(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 80-84)

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி - மார்க்ஸ் எங்கெல்ஸ்

(தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடிவடிக்கைகளைப் பற்றி  பேசும் போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் பொருளாதார இயக்கமும் அரசியல் நடவடிக்கையும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்க வேண்டியதை மார்க்சும் எங்கெல்சும் வலியுத்தி போடப்பட்ட சர்வதேசத் தீர்மனமாகும் இது. பொருளாதாரப் போராட்டத்துடன் நின்றுவிடாது அதனை தொழிலாளர் வர்க்க அரசியலுடன் இணைக்க வேண்டும்.)

சர்வதேசத் தொழிலாளர் சங்கங்கத்தின் பிரதிநிதிகளது மாநாட்டுத் தீர்மானங்களில் இருந்து

(1871 செப்டெம்பர் 17 முதல் 23 வரை லண்டனில் நடைவெற்றது)

 “அசல் விதிகளின் தவறான மொழிபெயர்ப்புகள் வெவ்வேறு விளக்கங்களுக்கு இடமளித்து சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும் நடவடிக்கையிலும் சேட்டைகளைச் செய்திருக்கின்றன என்பதை நினைவில் கொண்டு;

தொழிலாளர்கள் தங்கள் விடுதலைக்குச் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் கடிவாளம் போடப்படாத பிற்போக்குவாதம் வன்முறையால் நசுக்கும் பொழுது, வர்க்கங்கள் என்ற பிரிவினையையும் அதிலிருந்து ஏற்படுகின்ற உடைமை வர்க்கததினருடைய அரசியல் ஆதிக்கத்தையும் மிருகத் தனமான பலத்தின் மூலம் தக்கவைப்பதற்கு முயற்சி செய்யும் பொழுது;

உடைமை வர்க்கங்களின் இந்தக் கூட்டுச் சக்திக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் உடைமை வர்க்கங்களினால் ஏற்படுத்தப்பட்ட பழைய கட்சிகள் எல்லாவற்றுக்கும் வேறுபட்டிருக்கின்ற, எதிராக உள்ள ஒர் அரசியல் கட்சியாகத் தன்னை அமைத்துக் கொள்ளாமல் ஒரு வர்க்கம் என்ற முறையில் செயல்பட முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு;

தொழிலாளி வர்க்கம் தன்னுடைய பொருளாதாரப் போராட்டங்களால் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சக்திகளை இணைப்பு அதே சமயத்தில் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் அரசியல் சக்திக்கு எதிரான அதன் போராட்டங்களுக்கு நெம்புகோலாகப் பயன்பட வேண்டும் என்பதாக-

இந்த மாநாடு அகிலத்தின் உறுப்பினர்களுக்குப் பின்வருமாறு வலியுறுத்துகிறது:
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் பொருளாதார இயக்கமும் அரசியல் நடவடிக்கையும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன.”

 (அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 78-79)

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி - எங்கெல்ஸ்

(தொழிலாளர்கள் ஒரு தொழிலாளர் கட்சியாக இணைந்து அரசியலில் ஈடுபடவேண்டும். இருக்கும் அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் அரசியல் ஒடுக்கு முறை, தொழிலாளர்களை அரசியலில் ஈடுபடும்படி செய்கிறது. அவர்களை அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதைப் போதிப்பது முதலாளித்துவ வர்க்க அரசியலின் கரங்களுக்குள் விரட்டுவதாக ஆகிவிடும். தொழிலாளர்களின் கட்சி, முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் சிலவற்றின் வெறும் ஒட்டுப்பகுதியாக இருக்கக் கூடாது. எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றைக்கு இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதாகாது. நாம் நடத்த வேண்டிய அரசியல் தொழிலாளர்களின் அரசியலாகும்.)

எங்கெல்ஸ்:-

அரசியல் விஷயங்களில் முற்றிலும் ஒதுங்கி இருப்பது என்பது முடியாது, எனவே ஒதுங்கியிருக்கும் பத்திரிகைகள் அனைத்துமே உண்மையில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இது எப்படிச் செய்யப்பட வேண்டும், எந்தக் கொள்கையைக் கடைப்பிக்க வேண்டும் என்பது ஒன்றே பிரச்சினை. அதைத தவிர, நாம் தலையிடாதிருப்பதும் முடியாது. தொழிலாளர் கட்சி பெரும்பான்மையான நாடுகளில் ஏற்கெனவே ஒர் அரசியல் கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

நாம் தலையிடாமையைப் போதித்து இதை அழிக்கக் கூடாது. யதார்த்தமான அனுபவம், அரசியல் அல்லது சமூக காரணங்களுக்காக இன்றைக்கு இருக்கும் அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் அரசியல் ஒடுக்கு முறை – அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்- தொழிலாளர்கள் அரசியலில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கின்றன. அவர்களிடம் ஒதுங்கி இருப்பதைப் போதிப்பது முதலாளித்துவ வர்க்க அரசியலின் கரங்களுக்குள் அவர்கள் விரட்டுவதைப் போன்றதாகும். குறிப்பாக, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நடிவடிக்கையை அட்டவணையில் சேர்த்துவிட்ட பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு ஒதுங்கி நிற்பது என்பது முற்றிலும் இயாலாதே.

வர்க்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதை எப்படி நிறைவேற்ற முடியும்? பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின் மூலமாகத்தான், இது எங்குமே அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பொழுது அரசியலில் தலையிட வேண்டாம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்! தலையிடாமையைப் பின்பற்றுகின்ற எல்லோரும் தங்களைப் புரட்சியாளர்கள் என்று – எல்லாவற்றுக்கும் மேலான புரட்சியாளர்கள் என்று கூட- சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் புரட்சி என்பது தலைமையான அரசியல் நடிவடிக்கை, அதை விரும்புபவர் அதன் வழிகளையும் தொழிலாளர்களுக்குப் புரட்சியில் பயிற்சியை- அது இல்லை என்றால் போராட்டத்துக்கு மறுநாளே தொழிலாளர்கள் ஃபாவ்ர்களாலும் பியாட்டுகளாலும் எப்பொழுதும் ஏமாற்றப்படுவார்கள்- கொடுத்து அதற்குத் தயாரிக்கும் அரசியல் நடவடிக்கையையும் பிரும்புவார்கள். ஆனால் நாம் நடத்த வேண்டிய அரசியல் தொழிலாளர்களின் அரசியலாகும்.

தொழிலாளர்களின் கட்சி முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் சிலவற்றின் வெறும் ஒட்டுப்பகுதியாக இருக்கக் கூடாது, சொந்த குறிக்கோளையும் சொந்தக் கொள்கையையும் கொண்ட முற்றிலும் சுயேச்சையான கட்சியாக இருக்க வேண்டும்.
அரசியல் சுதந்திரம்- கூட்டம் நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கம் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் – இவை நம்முடைய ஆயுதங்கள். அவர்கள் இவற்றைப் பறிக்க முயற்சி செய்யும் பொழுது நாம் கைகளைக் கட்டிக்கொண்டு தலையிடாமல் இருப்பதா? எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றைக்கு இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதை உள்ளடக்கிருக்கிறது என்று நம்மிம் கூறுகிறார்கள். ஆனால் இந்த நிலைமை அதை எதிர்ப்பதற்குரிய சாதனங்களையும் நம்மிடம் கொடுக்கும் பொழுது அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தினால் இன்றைக்கிருக்கும் நிலைமையை அங்கீகரிப்பது என்று பொருள் கூறமுடியாது.


(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 75-76)

Friday, 17 July 2015

பாட்டாளி வர்க்க சர்வதேசியப் பார்வை- லெனின்

லெனின்:-
1, (சர்வதேச மூலதனத்தை எதிர்த்து)

 “தேசியப் பகைமையை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுபடுத்தி, நிறுவன வழியாக திரட்டி பிறகு அத்தகைய தேசிய அளவிலுள்ள தொழிலாளி வர்க்க நிறுவனங்களைச் சர்வதேச மூலதனத்தை எதிர்த்துப் போராடக் கூடிய சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் தனியொரு படையாக ஒன்றுபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை ….”
“மக்களின் நண்பவர்கள்” எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் சமூக-ஜனநாயகவாதிகளை எதிர்த்துப் போராடுவது எப்படி?
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 14-15)

2, (தொழிலாளர்கள் மீது ஆட்சி செய்யும் முதலாளிகள், தமது ஆட்சியை ஒரு நாட்டோடு நிறுத்துவதில்லை, இந்த உண்மையில் தான் எல்லா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியமாகிறது.)

“தொழிலாளி வர்க்க நிறுவனமும் ஒருமைப்பாடும் ஒரு நாடு அல்லது ஒரு தேசிய இனத்தோடு நின்றுவிடவில்லை. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர் கட்சிகள் உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் நோக்கங்களின் முழுமையான ஒன்றிணைப்பை (ஒருமைப்பாட்டை) உரத்த குரலில் அறிவிக்கின்றன.

அவை கூட்டாக நடத்தப்படுகின்ற காங்கிரசுகளில் ஒன்றுகூடுகின்றன, எல்லா நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் பொதுவான கோரிக்கைகளை வைக்கின்றன, விடுதலைக்காகப் போராடி வருகின்ற, நிறுவன வழியில் திரட்டப்பட்ட மொத்த பாட்டாளி வர்க்கத்துக்கும் ஒரு சர்வதேசக் கொண்டாட்ட நாளை (மே தினத்தை) ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றின் மூலம் எல்லா நாடுகளையும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒரு மாபெரும் தொழிலாளர் இராணுவமாக இணைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் மீது ஆட்சி செய்கின்ற முதலாளி வர்க்கம் தன்னுடைய ஆட்சியை ஒரு நாட்டோடு நிறுத்திக் கொண்டுவிடவில்லை. இந்த உண்மையில் இருந்துதான் எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியமாகத் தோன்றுகிறது.
..
முதலாளித்துவ நிறுவனங்களை- ஒரு நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளில் ஒரே நேரத்தில்- ஏற்படுத்துவதற்காகப் பெரும் கூட்டுப்பங்கு கம்பெனிகளின் சர்வதேச சங்கங்கள் தலையைக் காட்டத் தொடங்கி இருக்கின்றன. மூலதனத்தின் ஆதிக்கம் சர்வதேச வழியிலானது. ஆகவே சர்வதேச மூலதனத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் கூட்டாகப் போராடினால் மட்டுமே எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் தங்களுடைய விடுதலைக்காக நடத்துகின்ற போராட்டம் வெற்றி பெற முடியும்.”
சமூக-ஜனநாயகக் கட்சிக்கு ஒரு செயல்திட்டத்துக்கான நகலும் விளக்கமும்
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 16-17)

3, (கம்யூனிஸ்டுகளின் கலாச்சாரம் சர்வதேசியக் கலாச்சாரம், அது ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு தனித்த “தேசிய-கலாச்சார சுயாட்சி” என்பது முதலாளிகள் அல்லது குட்டி முதலாளிகள் ஆகியோரின் கலாச்சாரமேயாகும்.)

தேசியப் பிரச்சினை

“சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) எப்பொழுதும் சர்வதேசியவாதக் கருத்து நிலைக்காக நின்றிருக்கிறார்கள், இப்பொழுதும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். பண்ணையடிமை சொந்தக்காரர்களையும், போலீஸ் அரசையும் எதிர்த்து எல்லா தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாக்கும் பொழுது நாம் – “தேசியக் கலாச்சாரத்தை” அல்ல- ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்திலும் ஒரு பகுதியை மட்டுமே, ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிற சர்வதேசியக் கலாச்சாரத்தை ஆதரிக்கிறோம்.

“தேசிய-கலாச்சார சுயாட்சி” என்ற முழுக்கம் தேசங்களின் கலாச்சார ஒற்றுமை என்ற மாயத் தோற்றத்தைக்காட்டித் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது, ஆனால் நடைமுறையில் இன்று ஒவ்வொரு தேசத்திலும் நிலவுடைமையாளர்களின், முதலாளிகளின் அல்லது குட்டி முதலாளிகளின் “கலாச்சாரமே” மேலாதிக்கம் வகிக்கிறது.

முதலாளிய தேசியவாதத்தின் முழக்கங்களில் ஒன்று என்ற வகையில் நாம் தேசியக் கலாச்சாரத்தை எதிர்க்கிறோம். ஒரு முழுமையான ஜனநாயக, சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கலாச்சாரத்துக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம்.

தேசிய இனங்களின் மிக முழுமையான சமத்துவம், அதிகமான அளவுக்கு முரணில்லாத ஜனநாயக அரசு அமைப்பு- இவற்றோடு எல்லா தேசிய இனங்களின் தொழிலார்களின் ஒற்றுமை- இதுவே நமது முழக்கம். இதுவே சர்வதேச, அனைத்துப புரட்சி சமூக-ஜனநாயகத்தின் முழுக்கம். இந்த உண்மையான பாட்டாளி வர்க்க முழக்கம் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் “தேசிய” ஒற்றுமை என்ற போலியான தோற்றத்தையும் பிரமையையும் ஏற்படுத்தாது, ஆனால் “தேசிய-கலாச்சார சுயாட்சி” என்ற முழக்கம் இந்த மாயத் தோற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி ஏற்படுத்துகிறது, உழைக்கும் மக்களிடம் அந்தப் பிரமையை ஊன்றுகிறது.”
(லாத்வியன் பிராந்தியத்தின் சமூக-ஜனநாயகவாதிகளின்
 நான்காவது காங்கிரசின் நகல் திட்டம்)
                              (பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 82-83)

4, (தொழிலாளிக்கு தேசம் கிடையாது, ஏன் என்றால் அவனது விடுதலையின் நிலைமைகள் தேசியத்தோடு சுருங்கிக் காணப்படவில்லை. தொழிலாளியின் வர்க்க எதிரியும் சர்வதேசத் தன்மையானதாக இருக்கிறது. தொழிலாளியின் பொருளாதார நிலையும் தேசிய வழியிலானது கிடையாது, சர்வதேசியத் தன்மையானதேயாகும்)

 “”தொழிலாளிக்கு ஒரு தேசமும் கிடையாது”- இதற்கு பொருள்,

(அ) தொழிலாளியின் பொருளாதார நிலை தேசிய வழியிலானதல்ல- சர்வதேசிய வழியிலானது,

(ஆ) அவன் வர்க்க எதிரியும் சர்வதேசிய வழியிலானதே,

(இ) அவனுடைய விடுதலையின் நிலைமைகளும் அப்படிப்பட்டவையே.

(ஈ) தொழிலாளர்களின் சர்வதேச ஒற்றுமை அதிக முக்கியமானது- தேசியஇன ஒற்றுமையைக் காட்டிலும்”           
(இனேஸ்ஸா ஆர்மான்டுக்கு எழுதிய கடிதம்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 238)


5. (பிற தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரோடு பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியில் ஈடுபடுகின்ற பொழுது “தாய் நாட்டைப்” பற்றித் தேன்கலந்த அல்லது வீராவேசமான சொற்பொழிவுகளின் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துகிற தங்களின் முதலாளிகளின் சூழ்ச்சிகளினால், தேசியவாதக் முழக்கங்களினால் நேரடியாக ஏமாற்றப்படுவதற்கு எதிராக மிகவும் உறுதியாக எச்சரிக்கை செய்ய வேண்டும்)

“சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் அளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசுப் பிரிவினை அவசியமானதுதானா என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது மிகவும் நிச்சயமானதாகும்.
...
… சமூக-ஜனநாயகம் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் மற்றும் இதர் உழைக்கும் மக்களிடம் “தங்களுடைய சொந்த” முதலாளித்துவ வர்க்கத்தினரின்- அவர்கள், மறற தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரோடும் ஜாரிஸ்ட் முடியாட்சியுடனும் பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியில் ஈடுபடுகின்ற பொழுது “தாய் நாட்டைப்” பற்றித் தேன்கலந்த அல்லது வீராவேசமான சொற்பொழிவுகளின் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் தங்களுடைய முதலாளிகளின் சூழ்ச்சிகளில் இருந்து அதன் கவனத்தைத் திருப்புவதற்கும் முயற்சி செய்கிறார்கள்- தேசியவாதக் முழக்கங்களினால் நேரடியாக ஏமாற்றப்படுவதற்கு எதிராக மிகவும் உறுதியாக எச்சரிக்கை செய்ய வேண்டும்
.. எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தோடு முழுமையான ஒற்றுமையைக் காட்டிலும் “தங்களுடைய சொந்த” தேசிய இன முதலாளித்துவ வர்க்கத்தோடு அரசியல் ஒற்றுமையை முக்கியமாகக் கருதும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நலன்களுக்கு எதிராக, சோஷலிசத்தின் நலன்களுக்கு எதிராக, ஜனநாயகத்தின் நலன்களுக்கு எதிராகப் பாடுபடுகிறார்கள் என்பது பெறப்படும்.”
(தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 89-91)

6. (தேசியக் கலாச்சாரம் என்கிற முழக்கம் பூர்ஷ்வா ஏமாற்று வித்தை,  கம்யூனிஸ்டுகளின் முழக்கம்: ஐனநாயகத்தினுடையதும், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தினுடையதும் ஆன சர்வதேசியக் கலாச்சாரம்)

 “.. எல்லா மிதவாத-பூர்ஷ்வாத் தேசியவாதமும் தொழிலாளர்களுக்கும் இடையில் மிகப்பெரும் ஊழலைப் பரப்புகிறது, சுதந்திர இயக்கத்துக்கும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கும் மிகப்பெரும் தீமையைச் செய்கிறது என்பதுதான். இந்த பூர்ஷ்வா (அதோடு பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவப்) போக்கு “தேசியக் கலாச்சாரம்” என்ற கோஷத்துக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் மிகவும் ஆபத்தானது.

தேசியக் காலாச்சாரம்- மாக ருஷ்ய, போலிஷ், யூத, உக்ரேனிய இன்னும் பலவித தேசியக் காலாச்சாரங்கள்- என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுதான் கறுப்பு நூற்றுவர்களும் குருமார்களும், எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பூர்ஷ்வாக்களும் கூட, தங்களது நீசத்தனமான, பிற்போக்கு வேலையைச் செய்து கொண்டிருக்கிறன்றனர்.

மார்க்சியக் கோணத்தில் இருந்து, அதாவது வர்க்கப் போராட்டம் என்ற நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், வர்க்கங்களின் நலன்களுடனும் கொள்கைகளுடனும்- வெறும் பொருளற்ற “பொதுக் கோட்பாடுகளுடனும்” கவர்ச்சிகரமான உரைகளுடனும் சொற்றொடர்களுடனும் அல்ல- முழக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய தேசிய வாழ்வின் உண்மைகள் இவைதான்.

தேசியக் கலாச்சாரம் என்கிற கோஷம் ஒரு பூர்ஷ்வா (அடிக்கடி கறுப்பு நூற்றுவர்களுடையது குருமார்களுடைதும் கூட) ஏமாற்று வித்தை. நமது முழக்கம்: ஐனநாயகத்தினுடையதும், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தினுடையதும் ஆன சர்வதேசியக் கலாச்சாரம் என்பதுதான்.”
(தேசியப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 110-111)

7. தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளின் பால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலை

(ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக விரைவில் இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக்க வேண்டியது பற்றியும், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவது பற்றியும் கூறுகிறார் லெனின்.)

 “1) புரட்சியின் கால வரிசையில் ருஷ்யாவிலுள் எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி வாக்கமும் பொதுப் போராட்டத்தில் மென்மேலும் ஒன்றுபட்டு வருவதால்,

2) இந்தப் பொதுப போராட்டம் ருஷ்யாவின் பல்வேறு தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளை முன்பு இருநததைக் காட்டிலும் நெருக்கமாகக் கொண்டு வருவதால்,

3) பல நகரங்களிலும், முன்பு இருந்த கூட்டமைப்புக் கமிட்டிகளுக்குப் பதிலாக, அந்தக் குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கும் எல்லா தேசிய சமூக-ஜனநாயக நிறுவனங்களையும் கொண்ட இணைப்புக் கமிட்டிகள் ஏற்பட்டு வருவதால்,

4) தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளில் பெருமபான்மையானவை ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் காங்கிரசால் சரியானபடி நிராகரிக்கப்பட்ட கூட்டாட்சிக் கொள்கையை இனி வற்புறுத்தாமல் இருப்பதால்,

நாங்கள் பின்கண்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம், காங்கிரஸ் இவற்றுக்கு உடன்பட வேண்டும் என்று முனமொழிகிறோம்:

1) ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக விரைவில் இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்,

2) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவதே இந்த இணைப்பின் அடிப்படையாக இருக்கும்.

3) ஒவ்வொரு தேசிய இனத்தின் சமூக-ஜனநாயகப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி நலன்களும் தேவைகளும் நிறைவு செய்வது – அதன் பண்பாட்டு, வாழ்க்கை முறையின் பிரத்யேகமான அம்சங்களுக்கு உரிய மதிப்பளித்து- உண்மையாக நிறைவேற்றப்படும் என்று கட்சி உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட தேசிய இனத்தின் சமூக-ஜனநாகவாதிகளின் விசேஷ மாநாடுகளை நடத்தி, கட்சியின் ஸ்தல, பிராந்திய, மத்திய அமைப்புகளில் தேசியச் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது, எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், கிளர்ச்சிப் பிரச்சாரகர்கள், முதலியோரின் விசேஷக் குழுக்களை அமைப்பது, இதரவற்றின் மூலம் இதை உறுதிப்படுத்த வேண்டும்.”
(ரு.ச.ஜ.தொ. கட்சியின் ஒற்றுமை காங்கிரசுக்கு ஒரு போர்தந்திர நிலை)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 56-57)

8. (பாட்டாளி வர்க்கக் கட்சி பெரியதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. ஏன் என்றால் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது.)

 “பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப்படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவிப்புகளும் பிரிகடங்கம் அறிக்கைகம் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புகளே அல்லது குட்டி முதலாளித்துவத் தன்மையான வெற்றி விருப்பங்களே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரியதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படிச் செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.

ருஷ்யக் குடியரசு எந்தளவுக்கு அதிகமாக ஜனநாயகத் தன்மை பெற்றிருக்கிறதோ, எந்தளவுக்கு அதிக வெற்றிகரமாக அது தன்னைத்தானே தொழிலாளர், விவசாயிகள் பிரதிநிதிகள் சோவியத்துக்களின் குடியரசாக ஒழுங்கமைத்துக கொள்கிறதோ, அந்த அளவுக்கு அனைத்து தேசங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களை அத்தகைய குடியரசு தன் பால் சுயவிருப்பமான முறையில் ஈர்க்கும் சக்தியுடன் அதிக வலிமையுள்ளதாக இருக்கும்.

முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம், ஆக விரிவான ஸ்தல (மற்றும் தேசிய) சுயாட்சி, தேசியச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு விரிவான உத்தரவாதம்- இதுவே புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம்.”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 251-252)

9. (மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. அதைத் தோற்கடிப்பதற்கு ஒரு சர்வதேசத் தொழிலாளர் நேச அணி, சர்வதேசத் தொழிலாளர் சகோதரத்துவம் அவசியம்.)

“.. தொழிலாளர் நலன்கள் பல்வேறு நாடுகள் மற்றும் மக்கள் இனங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள் மத்தியில் முற்ற முழுமையான நம்பிக்கையையும் மிகவும் நெருக்கமான இணக்க உறவையும் கோருகின்றன. நிலப்பிரபுக்கள், முதலாளிகள் மற்றும் பூர்ஷ்வா வகைப்பட்டோரின் ஆதரவாளர்கள் தொழிலாளர்களைப் பலிவீனப்படுத்தவும், மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தவும் வேண்டித் தொழிலாளர்களைப் பிளவுறுத்த முயல்வார்கள், தேசியப் பிணக்குகளையும் பகைமையையும் தீவிரப்படுத்த முயல்வார்கள்.

மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. அதைத் தோற்கடிப்பதற்கு ஒரு சர்வதேசத் தொழிலாளர் நேச அணி, சர்வதேசத் தொழிலாளர் சகோதரத்துவம் அவசியம்.

நாம் தேசியப் பகைமை மற்றும் பிணக்கு, தேசியத் தனி விதிவிலக்குத் தன்மை ஆகியவற்றை எதிர்க்கிறோம். நாம் சர்வதேசியவாதிகள். நாம் ஒரே உலக சோவியத் குடியரசில் எல்லா உலக தேசங்களையும் சேர்ந்த தொழிலாளர், விவசாயிகளினது நெருக்கமான ஒற்றுமையை, முழுமையான இணைப்பை ஆதரிக்கிறோம்.”

(தெனீக்கினை எதிர்த்த வெற்றிகளைக் குறித்து உக்ரேனிய தொழிலாளர், விவசாயிகளுக்கு எழுதிய கடிதம்)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 397)

10 (உலக முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்ற உலகத்துக்கு எதிராக, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற புதிய உலகத்தை நிறுத்துகிறார்கள்)

“தேசியக் கலாச்சாரம், “தேசிய-கலாச்சார சுயாட்சி” பற்றிய இனிப்பான பேச்சுக்கள் தங்களைப் பிரித்து வைத்திருப்பதற்குத் தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா தேசங்களின் தொழிலாளர்களும் ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்ட  முயற்சியின் மூலம் நிறுவனங்களில் முழு சுதந்திரத்தையும் முழுமையான சமத்துவ உரிமைகளையும் காப்பாற்றி நிற்கிறார்கள்- அதுவே உண்மையான கலாச்சாரத்துக்கு உத்தரவாதம்.

உலக முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்- சுதந்திரத்துக்கு ஆதரவாக, ஒடுக்குமுறைக்கு எதிராக இருப்பவர்கள் நெடுங்காலமாக இதற்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய உலகத்துக்கு, தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்ற உலகத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஒரு புதிய உலகத்தை, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற உலகத்தை, எவ்விதமான தனி உரிமைகளும் அல்லது மிகச் சிறிய அளவுக்கு மனிதனை மனிதன் ஒடுக்குவது கூட இல்லாத உலகத்தை எதிரே நிறுத்துகிறார்கள்.”

(தொழிலாளி வர்க்கமும் தேசியப் பிரச்சினையும்)

(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 80)

மார்க்சிய பலபிரயோகக் கோட்பாட்டு பற்றி லெனின்

(பலப்பிரயோகத்தை முதன்மையான அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை எதிர்த்தும் மார்க்சிய பலபிரயோகக் கோட்பாட்டை பற்றியும்)

லெனின்:-.
"
கோட்பாடு ரீதியில் நாம் பயங்கரவாதத்தை (Terror) ஒரு பொழுதும் நிராகரித்ததில்லை, நிராகரிக்கவும் முடியாது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கையில் ஒருவகையாகும். அது படைகளின் குறிப்பிட்ட நிலையையும், குறிப்பிட்ட தருணத்தில் முற்றிலும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி இன்றியமையாததாகவும்கூட இருக்கலாம். ஆனால் இவர்களது கூற்றின் சாரம் என்ன? போராட்டத்தின் முழு ஏற்பாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த வகையில், களம் புகுந்து போர் புரியும் படையின் ஒரு நடவடிக்கையாக இவர்கள் இப்போது பயங்கரவாதத்தைக் கருதாமல், எந்தப் படையுடனும் தொடர்பற்ற விதத்தில், தனித்து நிற்கும் தாக்குச் செயலாகவே அதனைக் கருதிப் பேசுகிறார்கள்.
..
மேலும் இப்போராட்ட முறை தீவிரமாகப் போராடும் வீரர்களின் கவனத்தை, முழு இயக்கத்தின் நலன்களைக் கருதுங்கால் மிகமிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த உண்மைக் கடமையிலிருந்து அப்பால் திருப்புகிறது என்றும், அது அரசாங்கச் சக்திகளை அல்ல, புரட்சிச் சக்திகளையே சீர்குலைக்கிறது.
..
தனிப்பட்ட வீரச்செயல்களின் முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் நமக்குச் சிறிதும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்தை மிக அதிகமாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும், அதை முதன்மையான, அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை எதிர்த்தும் கடுமையாக எச்சரிப்பது நம் கடமை. மேற்சொன்ன கருத்து இப்போது மிகப் பலரை ஈர்த்திருக்கிறது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. அதிகமாகச் சொல்லப் போனால், தீர்மானமான தாக்குதலின் வழிதுறைகளில் ஒன்றாக அது பயன்படலாம்."


(எங்கிருந்து தொடங்குவது )