Tuesday, 27 March 2018

புரட்சிகரமான போராட்டத்தை முன்வைத்து ஜனநாயகப் போராட்டத்தை மறுக்கிற இடதுதிரிபையும், ஜனநாயகப் போராட்டத்தில் முடங்கி புரட்சிகரமான போராட்டத்தை மறுக்கிற வலதுதிரிபையும் எதித்து- லெனின்


“...சோஷலிசப் புரட்சி தனி ஒரு செய்கை அல்ல, ஒரே ஒரு முனையில் நடக்கும் ஒரே ஒரு போர் அல்ல, அது கடுமையான வர்க்க மோதல்களைக் கொண்ட முழுமையான ஒரு சகாப்தம். எல்லா முனைகளிலும் அதாவது, எல்லாப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் மீதும் நடக்கும் நீண்ட போர்களின் தொடராகும், முதலாளி வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதிலேதான் இந்தப் போர்கள் போய் முற்றுப்புள்ளி பெற முடியும். ஜனநாயகத்திற்கான போராட்டம் தொழிலாளி வர்க்கத்தைச் சோஷலிசப் புரட்சியிலிருந்து திசை திருப்பிவிடவோ, அதை மறைத்து மூடிவிடவோ வல்லது என்று நினைப்பது கொடிய பிழையாகும்.

அதற்கு மாறாக, முழுமையான ஜனநாயகத்தைச் செயல் படுத்தாத வெற்றிகரமான சோஷலிசம் எப்படி இருக்க முடியாதோ அதே போல் ஜனநாயகத்திற்காக ஒரு முழு வடிவான, முரணற்ற, புரட்சிகரமான போராட்டம் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் மீது தான் வெற்றி பெறுவதற்குத் தயார் செய்ய முடியாது.”
(சோஷலிசப் புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்”-
1918 ஜனவரி-பிப்ரவரியில் எழுதியது(75).
நூல் தொகை, தொகுதி 22, ஆங்கிலம் பக்கம் 144.)

Friday, 23 March 2018

சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள் பற்றி லெனின்


வர்க்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஆதரித்தல், சோஷலிசப் புரட்சி, புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல், முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல்,  தேசிய இன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபக்தியுடன் வழிபடுதல், “மக்கள் தொகையில் விரிவான திரள்கள்” (குட்டி முதலாளிகள்தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்- சந்தேகத்துக்கு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்.
(சோஷலிஸ்ட் அகிலத்தின் நிலையும் கடமைகளும் – நவம்பர் 1, 1914,-
சர்வதேசத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி – லெனின் பக்கம் -171-172)

Monday, 19 March 2018

உற்பத்தியும் மறுவுற்பத்தியும்- குலமரபுக் குழுக்களின் சிதறல்- பற்றி எங்கெல்ஸ்


“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி - கடைசியாகப் பார்க்கும் பொழுது - உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும். ஆனால் இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது - அதாவது உணவு, உடை, வீடு ஆகிய வற்றையும் அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் உற்பத்தி செய்வது; மறு பக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது - அதாவது மனித இனத்தைப் பெருக்குவது. ஒரு திட்டவட்டமான வரலாற்றுச் சகாப்தத்தைச் சேர்ந்த, ஒரு திட்டவட்டமான நாட்டைச் சேர்ந்த மக்கள் எந்த சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின் இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் மறு பக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

எந்த அளவுக்கு உழைப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கிறதோ, எந்த அளவுக்கு உழைப்பின் உற்பத்தியளவு குறுகியதாகவும் அதன் காரணமாக சமூகத்தின் செல்வமும் குறுகியதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சமூக அமைப்பின் மீது குலமரபு உறவுகள் ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றும். எனினும் குலமரபு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகக் கட்டுக் கோப்புக்குள்ளாகவே உழைப்பின் உற்பத்தித் திறன் மேன்மேலும் வளர்கிறது; அத்துடன் கூடவே தனிச்சொத்தும் பரிவர்த்தனையும் வளர்கின்றன; செல்வத்தில் வேற்றுமைகளும் மற்றவர்களுடைய உழைப்புச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பும், அதன் மூலம் வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையும் வளர்கின்றன. இவை புதிய சமூக அம்சங்கள்; இவை தலைமுறைக்குப் பின் தலைமுறையாக பழைய சமூகத்தின் கட்டுக்கோப்பைப் புதிய நிலைமைகளுக் கேற்பத் திருத்தியமைக்க முயல்கின்றன. முடிவில், அவ்விரண் டிற்கும் இடையிலுள்ள பொருந்தா நிலை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச் செல்கிறது.

புதிதாக வளர்ச்சியடைந்த சமூக வர்க்கங்களின் மோதலில் குலமரபுக் குழுக்களின் அடிப்படையில் அமைந்திருந்த பழைய சமூகம் வெடித்துச் சிதறி விடுகிறது. அந்தப் பழைய சமூகத்தின் இடத்தில் அரசாக அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய சமூகம் தோன்றுகிறது. அந்த அரசின் கீழ் நிலை அங்கங்களாக குலமரபுக் குழுக்கள் (kinship groups) இனி இல்லை, வட்டார அடிப்படையில் அமைந்த குழுக்களே இருக்கின்றன. இந்தப் புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இந்த சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களும் இப்பொழுது சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த எல்லா வரலாற்றுக்கும் உள்ளடக்கமாக இருக்கின்றன.

நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்திய அடிப்படையின் முக்கியமான அம்சங்களைக் கண்டு பிடித்து மறுபடியும் நிர்மாணித்துக் கொடுத்தது தான் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும். மேலும் மிகவும் தொன்மையான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய வரலாற்றின் இதுவரை விடுவிக்க முடியாதிருந்த மிகவும் முக்கியமான புதிர்களை விடுவிப்பதற்குரிய வழியை வட அமெரிக்க செவ்விந்தியர்களின் குல உறவுகளில் கண்டுபிடித்ததும் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும். எனினும் அவருடைய நூல் ஒரே நாள் வேலையல்ல. அவர் தன்னுடைய விவரத் தொகுப்பைப் புரிந்து கொள்வதற்கு நாற்பது ஆண்டுகள் போராடிக் கடைசியில் முழு வெற்றி பெற்றார். அதனால் தான், நம் காலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற, சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களில் அவருடைய நூலும் இடம் பெற்றிருக்கிறது..
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னுரை 1885)

Saturday, 17 February 2018

பணத்திற்கும் மூலதனத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றி மார்க்ஸ்:-


"பணமாக மட்டுமே உள்ள பணத்துக்கும், மூலதனமாக உள்ள பணத்துக்கும் இடையில் நாம் காண்கிற முதல் வேறுபாடு அவற்றின் சுற்றோட்ட வடிவத்திலான மாறுபாட்டுக்கு மேல் ஒன்றும் இல்லை.

சரக்குச் சுற்றோட்டத்தின் மிகவும் சாமானிய வடிவம் C-M-C (சரக்கு-பணம்-சரக்கு), அதாவது சரக்கு பணமாக மாறுவதும் பணம் மீண்டும் சரக்காக மாறுவதும் ஆகும், அல்லது வாங்கும் பொருட்டு விற்பதாகும். ஆனால் இந்த வடிவத்தோடு கூடவே நாம் காண்கிற இன்னொரு முற்றிலும் வேறுபட்ட வடிவம் M-C-M (பணம்-சரக்கு-பணம்), அதாவது பணம் சரக்குகளாக மாறுவதும், சரக்குகள் மீண்டும் பணமாக மாறுவதும் ஆகும், அல்லது விற்கும் பொருட்டு வாங்குவதாகும். பின்சொன்ன விதத்தில் சுற்றோட்டத்தில் செல்கிற பணம் இவ்வழியில் மூலதனமாக மாறுகிறது, மூலதனம் ஆகிறது. உள்ளாற்றலில் ஏற்கெனவே மூலதனமாகவும் இருக்கிறது.
..
..C-M-C (சரக்கு-பணம்-சரக்கு) என்ற சுற்றுக்கும் M-C-M (பணம்-சரக்கு-பணம்) என்ற சுற்றுக்கும் இடையிலான முதல் முக்கிய வேறுபாடு இரு கட்டங்களினதும் நேர்மாறான வரிசையமைப்பே ஆகும். சரக்குகளின் சாமானியச் சுற்றோட்டம் விற்றலுடன் தொடங்கி வாங்கலுடன் முடிவடைகிறது, மூலதனம் என்ற விதத்தில பணத்தின் சுற்றோட்டமோ வாங்கலுடன்  தொடங்கி விற்றலுடன் முடிவடைகிறது. ஒன்றில் தொடக்கநிலை, இலக்கு ஆகிய இரண்டுமே சரக்குகளாகும், மற்றதில் அவை இரண்டுமே பணமாகும். முதல் வடிவத்தில் பணத்தின் குறுக்கீட்டாலும். இரண்டாவதில் சரக்கின் குறுக்கீட்டாலும் இயக்கம் நிகழ்த்தப்படுகிறது."
(மூலதனம் I பக்கம் 204-205)

Tuesday, 9 January 2018

மா சே துங் - மேற்கோள்கள் (Red Book - செவ்வேடு)

(சில பகுதிகள் மட்டும்)
முழுமையாக “கீழைக்காற்று வெளியீட்டகம்” வெளியிட்டுள்ளது.










33. படிப்பு - மா சே துங்

ஒரு பின் தங்கிய விவசாய நாடாக விளங்கும் சீனாவை ஒரு முன்னேறிய தொழில்துறை நாடாக மாற்றும் போது, நாம் கடினமான கடமைகளை எதிர் நோக்குகின்றோம், நமது அனுபவம் போதுமானதல்ல, எனவே நாம் நன்றாகப் படிக்க வேண்டும்
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 8வது தேசிய மாநாட்டின்
ஆரம்ப உரை – 15 செப்டம்பர் 1956)

நிலைமைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றன. நமது சிந்தனையைப் புதிய சிந்தனையைப் புதிய நிலைமைகளுக்கு இசைவாக்க வேண்டுமானால், நாம் படிக்க வேண்டும். மார்க்சியத்தை ஒப்பீட்டு வகையில் நன்கு கிரகித்து, தமது பாட்டாளி வர்க்க நிலைமைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் கூட படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புதியவற்றைக் கிரகித்துக் கொள்ள வேண்டும், புதிய  பிரச்சினைகளை ஆராய வேண்டும்.
(சீனக் கம்யூனிஸ்ட் கடசியின் பிரச்சார வேலை பற்றிய
தேசிய மாநாட்டு உரை -12 மார்ச் 1957)

படிப்பில் இரண்டு விதமான கண்ணோட்டங்கள் உண்டு. ஒன்று நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தினாலும் சரி, பொருந்தாவிட்டாலும் சரி, அனைத்தையும் அப்படியே எடுத்து நடும் வறட்டுக் கண்ணோட்டம். இது நல்லதல்ல. மற்றது, நமது மூளையைப் பாவித்து, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தியவற்றைப் படிக்கின்ற, அதாவது நமக்கு பயனுள்ள அனுபவங்களைக் கிரகித்துக் கொள்கின்ற கண்ணோட்டம். இதுதான் நாம கடைப்பிடிக்க வேண்டிய கண்ணோட்டம்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்ரவரி 1957)

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடு அனைத்தையும் தழுவியதாக பிரயோகிக்கப்படக் கூடியது. நாம் அதை வறட்டுக் கோட்பாடாக அல்ல, செயலுக்கு ஒரு வழிகாட்டியாகக் கருத வேண்டும். மார்க்சியம் – லெனினியத்தைப் படிப்பது என்பது வெறும் சொற்களையும் சொற்றொடர்களையும் படிக்கும் விசயமல்ல. பதிலுக்கு அதைப் புரட்சியின் விஞ்ஞானமாகப் படிக்க வேண்டும். அது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் யதார்த்த வாழ்வையும், புரட்சி அனுபவத்தையும் விரிவாகப் படித்து, அதிலிருந்து வகுத்துத் தந்த பொது  விதிகளைப் புரிந்து கொள்ளும் ஒரு விசயம் மட்டுமல்ல. பிரச்சினைகளை ஆராய்வதிலும் தீர்ப்பதிலும் அவர்களுடைய நிலைப்பாட்டையும், வழிமுறையையும் கிரகித்துக் கொள்ளும் ஒரு விசயமுமாகும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

மார்க்சியக் கோட்பாட்டைப் பொறுத்த வரையில், அதில் தேர்ச்சி பெற வேண்டும், அதைப் பயன்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறுவதன் நோக்கம், அதைப் பன்படுத்தத்தான். ஒன்று அல்லது இரண்டு நடைமுறைப் பிரச்சினைகளைத் தெளிவு படுத்துவதில் மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்தை உங்களால் பிரயோகிக்க முடியுமானால், நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ஓரளவு சாதனைகளை ஈட்டியவர்கள் ஆவீர்கள். எவ்வளவுக்கு அதிகமான பிரச்சினைகளை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்களோ, எவ்வளவுக்கு முற்றாகவும் ஆழமாகவும் தெளிவு படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் சாதனையும் பெரிதாய் இருக்கும்.
(கட்சி வேலை நடையைச் சீர்செய்வோம் – 1 பிப்ரவரி 1942)

வேலையில் அனுபவம் உடையவர்கள் கோட்பாட்டுப் படிப்பை மேற்கொள்ள வேண்டும், பாரதூமாகப் படிக்க வேண்டும். அப்பொழுது தான் அவாகள் தமது அனுபவத்தை ஒழுங்கு படுத்தி, தொகுத்து, அதைக் கோட்பாடு மட்டத்துக்கு உயர்த்தக் கூடியவர்களாய் இருப்பர். அப்பொழுது தான் தமது அரைகுறை அனுபவத்தை பொது உண்மை என்று கருதாமல், அனுபவவாதத் தவறுகளை இழைக்காமல் இருக்க முடியும்.
(கட்சி வேலை நடையைச் சீர்செய்வோம் – 1 பிப்ரவரி 1942)

பொருளாதார வேலையில் தேர்ச்சி பெற்ற எல்லோருடம் இருந்து (அவர்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை) நாம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவர்களை ஆசிரியர்களாக மதித்து, அவர்களிடம் இருந்து மாரியாதையாகவும் நேர்மையாகவும் கற்க வேண்டும், நாம அறியாதவற்றை அறிந்தது போல் நடிக்கக் கூடாது.
(மக்கள் ஜனநாயக சர்வாதிகரம் பற்றி – ஜீன் 1949)

சுய-திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய-திருப்தி உணர்வை நம்மிடம் இருந்து நீக்கினால் ஒழிய, நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்த வரையில் “படிப்பில் தெவிட்டாமை” என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்கு “கற்றுக் கொடுப்பதில் சளையாமை” என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

மார்க்சியத்தை உண்மையில் ஒருவர் கிரகித்துக் கொள்ள வேண்டுமானால், அதை அவர் நூல்களில் இருந்து மாத்திரம் அல்ல, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தின் மூலமும், நடைமுறை வேலை, பரந்துபட்ட தொழிலாளர் – விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் மூலமும் படிக்க வேண்டும். மார்க்சிய நூல்கள் சிலவற்றைப் படிப்பதோடு, நமது அறிவுத்துறையினர் பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்புகள் மூலமும், தமது சொந்த நடைமுறை வேலை மூலமும் சிறிது விளக்கம் பெற்ற போது, நாம் எல்லோரும் ஒரே மொழியைப் பேசுவது சாத்தியம், தேச பக்தி என்ற பொது மொழியையும், சோஷலிசம் என்ற பொது மொழியையும் பேசுவது மாத்திரம் அல்ல, கம்யூனிச உலக நோக்கு என்ற பொது மொழியைக் கூடப் பேசுவது சாத்தியம். இப்படி ஏற்பட்டால், நாம் எல்லோரும் இன்னும் நன்றாக வேலை செய்வது நிச்சயம்.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய
 தேசிய மாநாட்டு உரை – 12 மார்ச் 1957)


32. கலையும் கலாச்சாரமும் - மா சே துங்

இன்றைய உலகில் கலாச்சாரம் அனைத்தும், கலை இலக்கியம் அனைத்தும் குறிப்பிட்ட வர்க்கங்களுக்குச் சொந்தமானவை, குறிப்பிட்ட அரசியல் திசைவழிகளில் முடுக்கி விடப்படுகின்றன. கலை கலைக்காக, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட கலை, அரசியலில் இருந்து பிரிந்த அல்லது விடுதலை பெற்ற கலை என ஒன்று உண்மையில் கிடையாது. பாட்டாளி வர்க்க கலை இலக்கியம் என்பது முழுப் பாட்டாளி வாக்கப் புரட்சி இலட்சியத்தின் ஒரு பகுதி. அவை லெனின் கூறுவது போல், முழுப் புரட்சி இயந்திரத்தின் “பல்லும் சில்லு”மாக விளங்குகின்றன.
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

புரட்சிகர கலாச்சாரம் பரந்துபட்ட மக்களின் ஒரு சக்தி மிக்க புரட்சிகர ஆயுதமாகும். புரட்சி வெடித்தெழுவதற்கு முன் அது சித்தாந்த ரீதியில் புரட்சிக்கான தளத்தைத் தயார் செய்கிறது. புரட்சி வெடித்ததும் பொதுப் புரட்சி முன்னணியில் அது ஒரு முக்கியமான, அத்தியாவசியமான போர் முனையாகின்றது.
(புதிய ஜனநாயகம் பற்றி – ஜனவரி 1940)

நமது கலை இலக்கியம் எல்லாம் பரந்துபட்ட மக்களுக்கு, முதன்முதலாக தொழிலாளர், விவசாயிகள், படையினருக்கு உரியவை, அவை தொழிலாளர், விவசாயிகள், படையினருக்காக படைக்கப்படுகின்றன, அவர்களின் பயன்பாட்டிற்கு உரியவை.
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

நமது கலை இலக்கிய ஊழியர்கள் இந்தக் கடமையை கண்டிப்பாக நிறைவேற்றி, தமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்கள் தொழிலாளர், விவசாயிகள், படையினர் மத்தியில், யதார்த்தப் போராட்டங்களில் மத்தியில் ஆழமாகச் செல்லும் போக்கில் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினரின் பக்கத்துக்கு, பாட்டாளி வர்க்கத்தின் பக்கத்துக்கு, தமது நிலைப்பாட்டை படிப்படியாக நகர்த்த வேண்டும். இவ்வாறுதான் உண்மையில் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினருக்கு உரிய கலை இலக்கியத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியத்தை நாம் பெற முடியும்.
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

கலை இலக்கியம் முழுப் புரட்சி இயந்திரத்தினதும் ஒரு பகுதியாக நன்கு அமைய வேண்டும், மக்களை ஐக்கியப் படுத்தி, கற்பித்து, எதிரியைத் தாக்கி அழிக்கும் சக்தி மிக்க ஆயுதமாகச் செயல்பட வேண்டும். மக்கள் ஒரே சிந்தனையுடனே ஒரே உள்ளத்துடன் எதிரியை எதிர்க்கத் துணை புரிய வேண்டும்
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பது கலை வளர்ச்சியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் நமது நாடடின் சோஷலிச கலாச்சாரத்தின் செழித்தோங்குவதும் மேம்படுத்துவதற்குரிய கொள்கையாகும். கலையில் பல்வேறு வடிவங்களும் பல்வேறு நடைகளும் சுதந்திரமாக வளரலாம். அறிவியலில் பல்வேறு கருத்துக்களும் சுதந்திரமாக முட்டி மோதலாம். கலையின் குறிப்பிட்ட ஒரு நடையை அல்லது ஒரு சிந்தனை முறையைத் திணித்து, இன்னொன்றைத் தடை செய்ய நிர்வாக நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டால், அது கலை, அறிவியல வளர்ச்சிக்குத தீங்கு பயக்கும் என நாம் கருதுகின்றோம். கலைகள், அறிவியல்களில் சரியும் பிழையும் சம்பந்தமான பிரச்சினைகள், கலை அறிவியல் வட்டாரங்களில் சுதந்திரமான விவாதங்கள் மூலமும், இந்தத் துறைகளில் நடைமுறை வேலை மூலமும் தீர்க்கப்பட வேண்டும். எளியமுறையில் தீர்ககப்படக் கூடாது.

(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி – 27 1957)