“...சோஷலிசப் புரட்சி தனி ஒரு செய்கை அல்ல, ஒரே ஒரு முனையில்
நடக்கும் ஒரே ஒரு போர் அல்ல, அது கடுமையான வர்க்க மோதல்களைக் கொண்ட முழுமையான ஒரு
சகாப்தம். எல்லா முனைகளிலும் அதாவது, எல்லாப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகள்
மீதும் நடக்கும் நீண்ட போர்களின் தொடராகும், முதலாளி வர்க்கத்தைப் பறிமுதல்
செய்வதிலேதான் இந்தப் போர்கள் போய் முற்றுப்புள்ளி பெற முடியும். ஜனநாயகத்திற்கான
போராட்டம் தொழிலாளி வர்க்கத்தைச் சோஷலிசப் புரட்சியிலிருந்து திசை திருப்பிவிடவோ,
அதை மறைத்து மூடிவிடவோ வல்லது என்று நினைப்பது கொடிய பிழையாகும்.
அதற்கு மாறாக, முழுமையான ஜனநாயகத்தைச் செயல் படுத்தாத வெற்றிகரமான
சோஷலிசம் எப்படி இருக்க முடியாதோ அதே போல் ஜனநாயகத்திற்காக ஒரு முழு வடிவான,
முரணற்ற, புரட்சிகரமான போராட்டம் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின்
மீது தான் வெற்றி பெறுவதற்குத் தயார் செய்ய முடியாது.”
(சோஷலிசப்
புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்”-
1918
ஜனவரி-பிப்ரவரியில் எழுதியது(75).
நூல்
தொகை, தொகுதி 22, ஆங்கிலம் பக்கம் 144.)
No comments:
Post a Comment