Wednesday 22 December 2021

03) தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன? - ஜே.வி. ஸ்டாலின்

 

ஜே.வி. ஸ்டாலின்:-

“தேசிய ஒடுக்குமுறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களைச் சுரண்டும் மற்றும் கொள்ளையிடும் அமைப்பு முறையாகும், ஒடுக்கப் பட்ட தேசிய இனங்களின் உரிமைகளை வலுக்கட்டாயமாகக் கட்டுப் படுத்துவதற்கு ஏகாதிபத்திய வட்டாரங்களால் கடைபிடிக்கப் படும் நடவடிக்கைகள் ஆகும். இந்த நடவடிக்கைகள் ஒன்றாகச் சேர்ந்து பொதுவாக தேசிய ஒடுக்குமுறை என்று அறியப்பட்ட கொள்கையைக் குறிப்பதாகும்.

முதலாவது கேள்வி, எந்த ஒரு குறிப்பிட்ட அரசாங்கமும் அதன் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த வர்க்கங்களைச் சார்ந்திருக்கிறது என்பதாகும்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பு, வேறுபட்ட அரசுகளில் ஏன் வேறுபட்ட ஒடுக்குமுறை வடிவங்கள் நிலவுகின்றன என்பதை, ஓர் அரசை விட இன்னொரு அரசில் தேசிய ஒடுக்குமுறை ஏன் கடுமையாகவும் கொடூரமாகவும் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரிட்டனிலும் ஆஸ்திரிய ஹங்கேரியிலும் தேசிய ஒடுக்குமுறை திட்டமிட்ட படு கொலை வடிவத்தை ஒருபோதும் எடுக்கவில்லை, மாறாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய உரிமைகள் மீது கட்டுப் பாடுகளின் வடிவத்தில் நிலவிவருகிறது. அதற்கு மாறாக, ரசியாவில், அது அடிக்கடி திட்டமிட்ட படுகொலைகள் வடிவத்தை எடுக்கிறது. மேலும், ஒரு சில குறிப்பிட்ட அரசுகளில், தேசிய சிறுபான்மை இனங் களுக்கு எதிராக எந்தக் குறிப்பான நடவடிக்கைகளும் இருப்பதில்லை . எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்தில் தேசிய ஒடுக்குமுறை இல்லை, அங்கு பிரெஞ்சுக்காரர்கள், இத்தாலியர்கள், மற்றும் ஜெர்மானியர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்கின்றனர்.

… … … …

ஒரு தேசம் எந்த ஒரு குறிப்பிட்ட தருணத்திலும் அவசியமாகப் பிரிந்து போக வேண்டுமா என்ற கேள்வியுடன், சுதந்திரமாகப் பிரிந்து போவதற்கான தேசங்களின் உரிமைப் பிரச்சனையைக் குழப்பிக் கொள்வது அனுமதிக்க முடியாததாக இருக்கும். இந்தப் பிந்தைய பிரச்சனை, ஒவ்வொரு குறிப்பான நிகழ்விலும் சூழ்நிலைகளுக்கேற்பப் பாட்டாளிவர்க்கத்தின் கட்சியால் முற்றிலும் தனித்தனியான முறையில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு தேசத்தின் பிரிந்து போகும் உரிமையை நான் அங்கீகரிக்கலாம், ஆனால் அதன் பொருள் நான் அதைச் செய்யக் கடமைப்பட்டவன் என்பதல்ல. ஒரு மக்களினத்திற்கு பிரிந்து போகும் உரிமை உண்டு, ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப அந்த உரிமையைப் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறாக பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கேற்ப, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நலன்களுக்கேற்ப பிரிந்து போவதற்கு ஆதரவாக அல்லது எதிராகக் கிளர்ச்சி செய்வதற்கு நமக்குச் சுதந்திரம் உண்டு. அதனால், பிரிந்து போவது பற்றிய பிரச்சனை ஒவ்வொரு குறிப் பான நேர்விலும், நிலவும் சூழலுக்கேற்பச் சுதந்திரமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும், மேலும் இந்தக் காரணத்துக்காகப், பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிப்பது எந்த ஒரு குறிப்பிட்ட சூழ் நிலைமையிலும் பிரிந்து போவதை முடிந்த முடிவுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.”

(ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் (போ) கட்சியின் எழாவது மாநாடு,

ஏப்ரல் 24/29,1917.ஜே.வி. ஸ்டாலின்:- படைப்புகள்,

தொகுதி 3, பக். 64-65-67)

அட்டவணை

No comments:

Post a Comment