ஜே.வி. ஸ்டாலின்:-
“நமது
கட்சி மிகவும் மோசமானதொரு நெருக்கடியினூடாக செய்ல்பட்டு வருகிறது என்பதொன்றும் ரகசியமான
விஷயமல்ல. உறுப்பினர்களை இழந்து வருவது; நமது அமைப்புகள் சுருங்குவது பலவீனமாகி வருவது;
அமைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தனிமைப்பட்டு நிற்பது; ஒருங்கிணைந்த கட்சி செயல்பாடு
இல்லாத நிலை ஆகிய இவை அனைத்துமே கட்சி நோய்வாய்ப்பட்டுள்ளதையும், மிக மோசமான நெருக்கடியினூடாக
அது சென்று கொண்டிருக்கிறது என்பதையுமே எடுத்துக் காட்டுகின்றன.
கட்சியை
சோர்வடையச் செய்யும் முதல் விஷயம் என்பது அதன் அமைப்புகள் விரிவான மக்கள் திரளிடமிருந்து
தனிமைப் பட்டு நிற்பதே ஆகும். ஒரு நேரத்தில் நமது அமைப்பின் அணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள்
இருந்தனர். அவர்கள் லட்சக்கணக்கான மக்களுக்குத் தலைமை தாங்கி வந்தனர். ஆனால் இப்போது
நிலைமை அப்படியில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் என்பதற்குப் பதிலாக இப்போது டஜன் கணக்கில்
அல்லது அதிகபட்சமாக நூற்றுக் கணக்கில்தான் நமது அமைப்பில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.
லட்சக்கணக்கிலான மக்களுக்குத் தலைமை தாங்குவது என்பதைப் பொறுத்தவரை பேசாமல் இருப்பதே
உத்தமம். நமது கட்சி விரிவான அளவில் மக்களிடையே தத்துவார்த்த ரீதியான செல்வாக்கை செலுத்தி
வருகிறது என்பதும், மக்களுக்குக் கட்சியைப் பற்றித் தெரியும் என்பதும் மக்கள் அதை மதிக்கிறார்கள்
என்பதும் உண்மைதான், அடிப்படையில் அதுவே 'புரட்சிக்கு முந்தைய' கட்சியிலிருந்து 'புரட்சிக்குப்
பிந்தைய’ கட்சியை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால் நடைமுறையிலோ அது மட்டுமே கட்சியின்
செல்வாக்காக இருக்கிறது.
எனினும் தத்துவார்த்த செல்வாக்கு மட்டுமே போதுமானதல்ல; அமைப்பு ரீதியாக எவ்வளவு குறுகிய அளவில் மக்களை அணி திரட்டுகிறோமோ அது தத்துவார்த்த ரீதியான அகலத்தை சமனப்படுத்தி விடுகிறது. இதுவே நமது அமைப்புகள் விரிவான மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பதற்கான காரணமாகும்.
.... .... ....
பொதுவான கட்சி நடவடிக்கையின் அடிப்படையில் மட்டுமே ருஷ்யா முழுவதிலும் சிதறிக் கிடக்கின்ற அமைப்புகளை ஒன்றிணைக்க முடியும். எனினும் உள்ளூர் அமைப்புகளின் அனுபவங்கள் அனைத்தையும் பொதுவான மையமொன்றில் சேகரித்து, அங்கிருந்து பொதுவான கட்சி அனுபவத்தை உள்ளூர் அமைப்புகள் அனைத்திற்கும் பகிர்ந்தளிக்காமல் பொதுவானதொரு கட்சி நடவடிக்கை என்பது இயலாத ஒன்றாகும்.
.... .... ....
டூமாவின் மன்றத்திலிருந்து, தொழிற்சங்கங்களிலிருந்து, கூட்டுறவு சங்கங்கள், சவ அடக்கத்திற்கான நிதிகள் வரையில் தன்னைச் சுற்றியுள்ள சட்டபூர்வமான அனைத்து வாய்ப்புகளையும் கட்சி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நெருக்கடியை எவ்வளவு விரைவாக நாம் வெற்றி கொள்கிறோமோ, அவ்வளவு விரைவாக ருஷ்ய சமூக - ஜனநாயகக் தொழிலாளர் கட்சியின் மீட்சிக்கும் புனரமைப்பிற்குமான கடமையை நம்மால் நிறைவேற்ற முடியும்.”
(கட்சியின் நெருக்கடியும் நமதுகடமையும்- ஜே.வி. ஸ்டாலின்:- படைப்புகள்,
தொகுதி 2, பக். 170-179-182 (1909))
No comments:
Post a Comment