Friday 4 January 2019

ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் 01 - குரோபர் ஃபர்


(ஸ்டாலினைப் பற்றிய பொய்களை குரோபர் ஃபர் ஒவ்வொன்றாக நூலில் அம்பலப்படுத்துகிறார். அம்பலப்படித்தியப் பின்பும் பழைய பொய்யை பலர் தொடர்கின்றனர். பதிலளிக்கப்பட்டதற்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்க வேண்டியதில்லை. ஸ்டாலின் எழுதிய “சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள்” மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் தொடர்ச்சியாக செல்கிறது. அந்நூலையும் படித்து, நமது சித்தாந்த வளத்தை வளர்த்துக் கொள்வோம்.)


“1930களில் நடந்த நியயப்படுத்த முடியாத ஒடுக்குமுறைகளை பெரும்பாலானவர்கள் மீது செலுத்தியதில் குருச்சேவுக்கு பெரும்பங்கு இருந்தது. அப்படியான தனது பங்கை யாராவது வெளிக்கொண்டு வருவதை தடுத்து நிறுத்தவும், அதற்கான பழியை ஸ்டாலின்மீது சுமத்தவும், அரசியல் ரீதியாக மறுவாழ்வு அளிக்கப்படுபவர்கள் குற்றவாளிகளோ அல்லது குற்றமற்ற வர்க ளோ அவர்களுக்கு அரசியல் ரீதியாக மறுவாழ்வுகளைத் துவக்குவதன் மூலம் கட்சியின் மேல்தட்டினர் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்று குருச்சேவ் கணக்கிட்டார். மாஸ்கோவிலும், உக்ரெய்னிலும்கூட பெரும்பாலானவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை வடிவமைத்தவர் என்று பெயர்பெற்ற, பரவலாக அறியப்பட்ட அவர் மீதான பொது மதிப்பீட்டை, அதற்கான பழியை இறந்து போன ஸ்டாலினுக்கு மாற்றுவதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்களிடம் - குறிப்பாக தப்பித்து வாழும் அவர்கள் குடும்பத்தினரிடம் காணப்படும் தன் மீதுள்ள பகைமை உணர்வை; அதன் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று குருச்சேவ் கருதினார்.

குருச்சேவின் உரை இதுவரை மதிப்புமிக்கதாக இருந்து வந்தது. இங்கே வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள் அவ்வாறு மதிப்பிடுவது தவறு என்கிறது. அது ஏராளமான கேள்விகளை நமக்கு விட்டுச்செல்கிறது. உண்மையான ஆவணங்களை மறைத்து, போலியான ஆய்வு மூலம் குருச்சேவ் தனது உரையை ஏன் நிகழ்த்தினார்? பொய்களைத்தவிர வேறொன்றும் இல்லாத அவ்வுரையின் மூலம் தனது நீண்டகால அரசியல் நிலைபாடுகளைத் தியாகம் செய்யும் அளவுக்கு ஏன் சென்றார்?

சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு ஒரு பதிலைக் கொண்டு வந்தது . குருச்சேவும் அவரது கூட்டாளிகளும் ஸ்டாலினின் தலைமையின்கீழ் நம்பிக்கையுடன் கடைப்பிடித்த அரசியல் பாதையை கைவிட்டு, முற்றிலும் மாறான வழியில் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தை கூர்மையாக வழிநடத்த விரும்பினார்கள். குருச்சேவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சில பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை விரிவாக நாம் குறிப்பிடுள்ளோம். அவற்றில் மார்க்சிய - லெனினிய கொள்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி பார்த்தது.

இந்தக் கோட்பாட்டில் சில உண்மைகள் உள்ளன. அதற்கான அடித்தள சிந்தனைகள் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் ஏற்கனவே இருந்தன. இந்தக் கொள்கைகளின் பிறப்பிடமாக குருச்சேவும், அவரது சீடரான பிரஸ்னேவ் மற்றும் பிறரும் இருந்தனர். இவர்கள் குருச்சேவ் சோவியத் தலைமையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பிருந்தே இருந்தனர் என்றும்; அது ஸ்டாலின் இறந்ததும் உடனடியாக செயலில் இறங்கியது என்றும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. 1940-இன் பிந்தைய பகுதியிலும் மற்றும் 1950-இன் முந்தைய பகுதியிலுமான "ஸ்டாலின் மறைந்த'' காலகட்டம் அவற்றில் பலவற்றை சார்ந்து இருந்ததைக் காணலாம்.

இந்தக் கொள்கைகளை ஸ்டாலின் எந்த அளவுக்கு ஆதரித்தார் அல்லது எதிர்த்தார் என்பதை நுணுக்கமாகக் கண்டறிவது சிரமமானது. அவர் தனது கடைசி ஆண்டுகளில் அரசியல்ரீதியாக மிகமிக்குறைந்த அளவிலேயே செயல்பட்டார். காலத்துக்கேற்ற, கம்யூனிஸத்தை நோக்கிய வித்தியாசமான பாதையை உறுதிப்படுத்த ஸ்டாலின் முயற்சித்தார் என்று தெரிகிறது. அவரது கடைசி நூலான 'சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள்' (Economic Problems of Socialism in the USSR) என்ற நூலில் அது பிரதிபலிக்கிறது. பின்னர் 'நம்பமுடியாத அளவுக்கு ஸ்டாலினின் பங்கு இடது பிறழ்வாக இருந்தது என மிகோயியன் 1952 -இல் நடந்த 19-ஆவது கட்சி காங்கிரசில் எழுதிய எடுத்துக்காட்டு முக்கியமானதாகும். ஆனால் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு உடனடியாக 'கூட்டுத்தலைமையில் இருந்த அனைவரும் ஸ்டாலினின் நூலில் குறிப்பிட்டிருந்த எல்லாவற்றையும் கைவிடவும், கட்சி நிர்வாகத்தை புதிய வழிமுறையில் கொண்டு செல்வதை கைவிடவும் ஒத்துக்கொண்டனர்.”
(பக்கம் 296-297)

No comments:

Post a Comment