Friday 4 January 2019

ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் 02 - குரோபர் ஃபர்


(பல கிளைகளைக்கொண்ட 'வலதுசாரி டிராட்ஸ்கிய சதியின்' ஒரு கிளையில் குருச்சேவ் இரகசிய உறுப்பினராக இருந்திருக்கக் கூடும்.)

“துக்காசெவ்ஸ்கி கைது செய்யப்பட்டார் என்றும், அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் என்றும் தெரிந்த பிறகே புக்காரின் துக்காசெவ்ஸ்கியின் பெயரைக் குறிப்பிட்டார் என்பதை நாம் பார்த்தோம். ஆனால், ஒரு சக சதிகாரரான எஸோவ் - இன் பெயரை அவர் உயிரை விடும்வரை வெளிப்படுத்தவேயில்லை. எஸோவின் பெயரை வெளிபடுத்தாமலே உயிரைவிடுமளவுக்கு புக்காரினுக்கு உள்நோக்கம் இருந்ததென்றால், அவர் அதே உள்நோக்கத்திற்காக மற்ற சக சதிகாரர்களையும் அதேபோல பாதுகாத்திருக்க மாட்டாரா? என பின்னர் ஃப்ரினோவ்ஸ்கி குறிப்பிடுவது முக்கியமானது.

மறைந்திருந்த இந்த சதிகாரர்களில் குருச்சேவும் ஒருவரா?? அல்லது அவரைப்பற்றி புக்காரின் தெரிந்திருந்தாரா? என்பது நமக்கு தெரியாது. 1937 – 38 க்குப்பிறகு 23 சோவியத் சோசலிச குடியரசு ஒன்றிய அரசுக்கு எதிரான சதிகாரர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களில் சிலர் உயர்ந்த பதவிகளிலும் இருந்தார்கள். புக்காரின் இறந்து நீண்டநாள் ஆனப்பின்னும் குருச்சேவ் அவருக்கு | விசுவாசமாக இருந்தார் என்பதையும்கூட நாம் அறிவோம்.

பல கிளைகளைக்கொண்ட 'வலதுசாரி டிராட்ஸ்கிய சதியின்' ஒரு கிளையில் குருச்சேவ் இரகசிய உறுப்பினராக இருந்திருக்கக் கூடும். அதேபோல அவர் உறுதியாக ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான பிற சதிகளிலும் ஈடுபட்டிருந்தார் என்று நாம் அறிந்த உண்மைகளிலிருந்து தெரிகிறது:

*1953 மார்ச் 5-இல், - இன்னும் ஸ்டாலின் இறந்துவிடாத நிலையில்- பழைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து முந்தைய அக்டோபரில் 19-ஆவது கட்சிக் காங்கிரசில் ஏற்பளிக்கப்பட்ட விரிவடைந்த தலைமைக்குழுவை ஒழித்தனர். இது கிட்டத்தட்ட கட்சிக்குள் நிலவிய ஒரு சதி. இது வாக்களிக்கப்பட்டோ, அல்லது தலைமைக்குழுவிலோ அல்லது மத்தியக் குழுவிலோ விவாதிக்கப்பட்டோ முடிவெடுக்கவில்லை.”
(பக்கம் 306-307)
(விரிவாக நூலில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்)

No comments:

Post a Comment