Tuesday 1 August 2023

பாட்டாளி வர்க்கம் எந்த சாதனத்தைக் கொண்டு முதலாளித்துவ கட்டமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்பது பற்றி ஸ்டாலின்


 

எந்த தீர்மானகரமான சாதனத்தைக் கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவக் கட்டைமைவைத் தூக்கி எறியும்?

சோசலிசப் புரட்சிதான் இந்த வழிமுறைச் சாதனமாக இருக்கும்.

வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்ற வடிவங்கள் அனைத்துமே, பாட்டாளி வர்க்கத்தை தயார்படுத்துவதற்கும் அமைப்பாக்குவதற்குமான நல்ல சாதனங்கள்தான். ஆனால், இவற்றுள் எந்த ஒரு சாதனமும் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் ஆற்றல் உடையது அல்ல, இந்தச் சாதனங்கள் அனைத்தும் தலையாயதும் தீர்மானகரமானதுமான ஒரே வழிமுறைச் சாதனத்தில் கட்டாயமாக ஒன்று குவிக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கி, அதன் அடித்தளத்தையே தகர்க்கும்படியான, தீர்மானகரமான தாக்குதலை தொடுப்பதற்காக பாட்டாளி வர்க்கம் ஆவேசத்துடன் தவறாமல் எழுந்தாக வேண்டும். இந்தத் தலையாயதும் தீர்மானகரமானதுமான, வழி முறைச் சாதனமே சோசலிசப் புரட்சியாகும்.

சோசலிசப் புரட்சியை, திடுதிப்பென்றும், ஒரே அடியில் முடிந்து விடுவதுமான ஒன்றாக எண்ணவே கூடாது; அது ஒரு நீண்டகாலப் போராட்டமாகும்; அப்போராட்டம் பரந்துபட்ட பாட்டாளி மக்களால் தொடுக்கப்படுவதாகும்; முதலாளித்துவத்தை தோல்வியுறச் செய்து, அதன் ஆதிக்க நிலைகளைக் கைப்பற்றுவதற்காக, போராட்டம் தொடுக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி என்பது, அதே நேரத்தில், தோற்கடிக்கப்பட்ட முதலாளிகளின் மீதான ஆதிக்கம் என்று பொருள்படுவதால்; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலில், ஒரு வர்க்கத்தின் தோல்வியானது பிறிதொரு வர்க்கத்தின் ஆதிக்கமாகவே அமையும் என்பதால்; சோசலிசப் புரட்சியின் முதல் கட்டமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கமாக இருந்தே தீரும்.

சோசலிசப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுவது - இத்துடன்தான் சோசலிசப் புரட்சி கட்டாயம் துவக்கப்பட வேண்டும்.

இதன் பொருள் என்ன? முதலாளித்துவ வர்க்கம் முற்றாகத் தோற் கடிக்கப்படும் வரையில், அதனுடைய செல்வம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும் வரையில், தவறாமல் ஒரு இராணுவத்தை பாட்டாளி வர்க்கம் தனக்கெனச் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்; தனது சொந்த 'பாட்டாளிகளின் படையை" தவறாமல் கொண்டிருக்க வேண்டும். இந்தப் படையின் உதவியைக் கொண்டுதான், மடிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் எதிர்ப் புரட்சித் தாக்குதல்களை முறியடிக்க அதனால் முடியும்; பாரிஸ் கம்யூன் நாட்களில், பாரிசின் பாட்டாளி வர்க்கம் எதைச் செய்ததோ அதையேதான் மிகச்சரியாகச் செய்ய வேண்டியிருக்கும்.

சோசலிசப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏன் தேவைப்படு கிறது?

பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்குத் தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவ வர்க்கம் முழுவதினிடமிருந்து நிலம், காடுகள், தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகள், இயந்திரங்கள், இரயில்வேக்கள் இன்னும் பிறவற்றைக் கைப்பற்றுவதற்குத் தேவைப்படுகிறது.

பறிமுதலாளர்களான முதலாளிகளைப் பறிமுதல் செய்வது- இதற்குத்தான் சோசலிசப் புரட்சி இட்டுச் செல்லும், இட்டுச் செல்ல வேண்டும்.

இந்தத் தலையாயதும் தீர்மானகரமானதுமான வழிமுறைச் சாதனத்தைக் கொண்டுதான், பாட்டாளி வர்க்கமானது, இப்போதைய முதலா ளித்துவக் கட்டமைவைத் தூக்கியெறியும்.

இதனால்தான், வெகுகாலத்துக்கு முன்னர், 1847-ஆம் ஆண்டி லேயே மார்க்ஸ் பின்வருமாறு சொன்னார்:

 

“....... தொழிலாளர் வர்க்கத்தால் நடத்தப்படும் புரட்சியில் முதல் நடவடிக்கை பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கம் என்ற நிலைக்கு உயர்த்துவதாகவே இருக்கும்..... பாட்டாளி வர்க்கமானது, தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி, முதலா ளித்துவ வர்க்கத்திடமிருந்த மூலதனம் எல்லாவற்றையும் படிப் படியாகப் பறித்தெடுக்கும்; ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந் துள்ள..... பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் ஒன்று குவிக்கும்......"

(கம்யூனிஸ்டு அறிக்கை).

பாட்டாளி வர்க்கமானது, சோசலிசத்தைக் கொண்டு வருவதில் நாட்டம் கொண்டிருக்குமானால், இப்படித்தான் தொடங்கி முன்னேறியாக வேண்டும்.

இந்தப் பொதுக் கோட்பாட்டிலிருந்துதான், செயல்தந்திரம் பற்றிய எல்லா கருத்தோட்டங்களும் உருப்பெற்று எழுகின்றன. சோசலிசப் புரட்சியைச் சாதிப்பதற்காக பாட்டாளி வர்க்கம் தன்னை ஒழுங்கமைத் துக் கொள்வதற்கும், தன்னுடைய அமைப்புகளை வலுப்படுத்தி விரிவு படுத்திக் கொள்வதற்கும், எந்த அளவுக்கு உதவுகிறதோ அந்த அளவுக் குத்தான், வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, ஆர்ப்பாட்ட கிளர்ச்சி கள், நாடாளுமன்றப் பங்கேற்பு ஆகிய போராட்ட வடிவங்கள் முக்கி யத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.

இவ்வாறாக, சோசலிசத்தைக் கொண்டு வருவதற்கு, சோசலிசப் புரட்சி தேவைப்படுகிறது; சோசலிசப் புரட்சியானது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துடன்தான் தொடங்கப்பட்டாக வேண்டும். அதாவது, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு சாதனமாக இதைப் பயன்படுத்த வேண்டும்.

இருப்பினும், இவை அனைத்தையும் சாதிப்பதற்கு, பாட்டாளி 'வர்க்கம் அமைப்பாக்கப்பட வேண்டும்; பாட்டாளி வர்க்க அணிகள் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டும் ஐக்கியப்பட்டும் இருக்க வேண்டும்; பலமிக்க பாட்டாளி வர்க்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; இவையனைத்தும் இடையறாது வளர்ந்து வலுப்பெற வேண்டும்.

(அராஜகவாதமா? சோஷலிசமா?)

No comments:

Post a Comment