“உற்பத்தியின் நிகழ்வுப்போக்கில், மனிதர்கள் இயற்கையின்மீது
மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட
வழிமுறையில் ஒன்றுசேர்ந்து உழைப்பதன்மூலமும், தம் செயல்பாடுகளைப் பரஸ்பரம் பரிமாறிக்
கொள்வதன்மூலமும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள்
ஒருவருக்கொருவர் வரையறுத்த தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இந்தச் சமூகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் உட்பட்டே இயற்கை மீதான அவர்களின் செல்வாக்குச்
செயலாற்றுகிறது, அதாவது உற்பத்தி நடைபெறுகிறது.
உற்பத்தியாளர்கள் இடையிலான இந்தச் சமூக உறவுகளும்,
எந்த நிலைமைகளின்கீழ் தம் செயல்பாடுகளைப் பரிமாறிக் கொண்டு, உற்பத்திச் செயல்முறை முழுவதிலும்
பங்கெடுத்துக் கொள்கிறார்களோ அந்த நிலைமைகளும், இயல்பாகவே உற்பத்திச் சாதனங்களின் தன்மைக்கு
ஏற்ப மாறுபடும்.
...
... ...
இவ்வாறாக, உற்பத்திக்கான பொருளாயதச் சாதனங்களும்
உற்பத்திச் சக்திகளும் மாற்றமும் வளர்ச்சியும் அடைவதைத் தொடர்ந்து, தனியாட்கள் உற்பத்தி
செய்வதற்குரிய சமூக உறவுகளும், உற்பத்தியின் சமூக உறவுகளும் மாற்றத்துக்கு உள்ளாகின்றன
என்பதை நாம் காண்கிறோம். உற்பத்தி உறவுகளே அவற்றின் ஒட்டுமொத்த முழுமையில் சமூக உறவுகளாய்
அமைகின்றன”
(கூலியுழைப்பும் மூலதனமும்- முன்னுரை)
நூலை முழுமையாகப்
படிக்க:-
கூலியுழைப்பும் மூலதனமும்
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
No comments:
Post a Comment