“இன்று புரட்சிகரச் சூழ்நிலை
இருக்கவில்லை, மக்கள் பெருந்திரளினரிடையே அமைதியின்மையை உண்டாக்கும், அல்லது அவர்களுடைய
செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நிலைமைகள் இருக்கவில்லை. இன்று உங்களிடம் ஓட்டுச்
சீட்டு தரப்படுகிறது – அதை வாங்கிக் கொள்ளுங்கள், அதை உங்கள் பகைவர்களுக்கு எதிரான
ஆயுதமாகப் பயன்படுத்தும் பொருட்டு – சிறைக்குச் செல்லப் பயந்து தமது நாடாளுமன்ற இருக்கைகளில்
ஒட்டிக் கொள்ளும் ஆட்களுக்குச் சொகுசான சட்டமன்ற வேலைகள் கிடைப்பதற்கான சாதனமாகப் பயன்படுத்தும்
பொருட்டல்ல – ஒழுங்கமைப்பு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். நாளைக்கு உங்களது ஓட்டுச்
சீட்டு உங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு, துப்பாக்கியோ மிக நவீன தொழில்நுணுக்கத்தின்
சாதனையாகிய அதிவேகப் பீரங்கியோ உங்களிடம் தரப்படுகிறது – சாவையும் அழிவையும் பொழியும்
இந்த ஆயுதத்தை வாங்கிக் கொள்ளுங்கள், யுத்ததைக் கண்டு அஞ்சும் பிணி கொண்ட அழுமூஞ்சிகளது
உணர்ச்சிப் பசப்புக்குச் செவி சாய்க்காதீர்கள், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகச்
சுட்டுப் பொசுக்கியும் வெட்டி வீழ்த்தியும் நிச்சயமாய் ஒழிக்கப்பட்டாக வேண்டியதை இன்னமும்
உலகில் மிகப் பலவும் இருக்கின்றன, மக்கட் பெருந்திரளினரிடத்தே ஆத்திரமும் ஆவேசமும்
வளர்ந்திடுமாயின், புரட்சிகரச் சூழ்நிலை எழுமாயின், புதிய நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்காகத்
தயார் செய்யுங்கள், சாவுக்கும் அழிவுக்குமான இந்தப் பயன்தரும் ஆயுதங்களை உங்களது சொந்த
அரசாங்கத்துக்கும் உங்களது சொந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிராக உபயோகியுங்கள்”
(இரண்டாவது அகிலத்தின் தகர்வு - பக்கம்- 82-83)
No comments:
Post a Comment